Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Sunday, October 2, 2011


ஆகாய வீதியில் மேகங்கள்
விபத்துள்ளாகி கண்ணாடிகள்
உடைந்து தெறித்தோடியது

காக்கைகள் குளித்துக்
கொண்டிருக்க
கள்ளப்பார்வை
நீட்டியது அந்த நிலா

ஜன்னல்களுக்கு மேலே
வடிந்துக் கொண்டிருந்தவொன்று
வாசலில் படுத்துக் கொண்டது

எலக்ட்ரான்கள் வெடித்து
இறங்கிச் சென்ற
மின்சாரத்தைத் திருடியது
இடிதாங்கி

கனியாகிக் கொண்டிருந்த
காய்களின் பதவியேற்பு
விழாவில் மலர்தூவி வாழ்த்தியது
வானம்

குருவிகள் போட்டச்
சித்திரங்களை மழித்து
கழுவிக் கொண்டன கற்சிலைகள்

குடைக்குள் ஒளிந்துக்
கொண்டு மின்மினிகளுடன்
ஒரு கண்ணாம்பூச்சி

சக்கரம் கடித்தவுடன்
வானத்தை நோக்கி
காறித் துப்பியது
சாலையோரக் குழி

இருட்டின் முடிவில்
சொப்பனங்கள் சிதறிக் கொள்ளும்
நேரமாதலால் விடை பெற்றது
மழைக் கால நினைவுகள்

***

இதை விகடனிலும் படிக்கலாம்

7 மறுமொழிகள்:

மாய உலகம் said...

எலக்ட்ரான்கள் வெடித்து
இறங்கிச் சென்ற
மின்சாரத்தைத் திருடியது
இடிதாங்கி//

சூப்பர்... புதுமை வரிகள்

மாய உலகம் said...

சக்கரம் கடித்தவுடன்
வானத்தை நோக்கி
காறித் துப்பியது
சாலையோரக் குழி//

இப்ப்டியும் சிந்தனை... வாவ்.. சூப்பரா இருக்கு நண்பரே!

இந்த கவிதையை பத்திரிக்கை அனுப்பிருக்கலாம் நண்பரே.... ரொம்ப நல்லாருக்கு

சம்பத்குமார் said...

//இருட்டின் முடிவில்சொப்பனங்கள் சிதறிக் கொள்ளும் நேரமாதலால் விடை பெற்றதுமழைக் கால நினைவுகள்//கடைசி வரி கலக்கல் நண்பரேஅருமையான கவிதை.நன்றி நல்லதோர் பகிர்விற்க்குநட்புடன்சம்பத்குமார்

rajamelaiyur said...

அருமையான கவிதை

rajamelaiyur said...

இன்று என் வலையில்
நாஞ்சில் மனோ Vs கருண் Vs சி.பி – யார் அதுல பெரிய ஆள்?

ப்ரியமுடன் வசந்த் said...

டெக்னிகல் போஸ்ட் போடறதோட நின்னுடாம அப்போ அப்போ இது போல மனநிறைவான கவிதைகளும் எழுதுங்க வெங்கி.

Chitra said...

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!