Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Sunday, March 25, 2012

சிதறிப் போனவையையும்
கீறல் விழுந்தவையும்
மீண்டும் காகிதமாக
தன்னைக் கிழித்துக் கொள்பவன்

பணத்தில் பாகப்பிரிவினை
நடக்காமலிருக்க கண்ணாடி
ரோடுபோடும் காண்ராக்டர்

அஞ்சல் தலைப் பொட்டிட்ட
காகிதப் பொட்டிகளைப்
பூட்டிக் கொண்டு
தபால்காரருடன் ஊர்சுற்றுவான்

உடைந்த பொம்மை
இணைக்கப்பட்டது
இவனை உடைத்து

அறிக்கையை கவ்விக் கொண்டு
தகவல் உரைக்கும் பலகையில்
படுத்துக்கொள்வான்

முறுக்கை வயிற்றில் கட்டிய
பாலித்தீன் பையின் வாயைக்
கட்டும் வித்தகன்

ஸ்டேபிளர் பின்களின்
கடியிலிருந்து பொட்டலங்களை
மீட்க வந்த மஹா புருஷன்

செல்லாத நோட்டுக்களை
செல்ல வைப்பதால்
நீ செலோ டேப் என்று
அன்புடன் அழைக்கப்படுவாய்

*** தமிழ் ஓவியம் இதழிலிருந்து மீள்பதிவு

2 மறுமொழிகள்:

S Murugan said...

நெனெச்சு கூட பாக்க முடியாத அளவுக்கு கற்பனை வளம் மிகுந்த கவிதை. சூப்பர். அடிக்கடி வருவேன்.

இமா க்றிஸ் said...

அட! அருமையாக இருக்கிறது. 'செலோடேப்' என்பது பாதி படித்த பின் தான் புரிந்தது.