Pages - Menu

Saturday, March 9, 2013

பரம்பரை நோய்


விக்கலில் எகிறிக்
குதித்த சிறு குடல்
ஏமாற்றத்துடன்
புரண்டு படுத்தது

சுவாசத்துடன் உள்சென்ற
பிராணவாயு ஓட்டியசுவறொன்றில்
முட்டிக் கொண்டு
பெருமூச்சாய் ஏக்கப்பட்டது

உயிருப்பை உறுதி செய்ய
பொறுப்பான ஒரு சுய
சமிக்ஞைக் கருவி
வயிற்றைவிட்டால் வேறில்லை

வயிறு உறுமிக்
காட்டிக்கொடுத்த பசிக்குத்
ஆயுள் முழுதும் தீனி
போட்டாக வேண்டும்

இரண்டு துளைகளுக்கு
நடுவே நடக்கும்
பட்டினிப் போரில்
பசி பிறந்து விடுகிறது.

பசியோடு தொடங்கியது
பசிக்கு இயங்கியது
பசியால் வளர்ந்தது
பசிக்காக மடியுது உலகு

புத்தகத்தில் படித்து இதுவென்று
புரிந்து கொண்டனர் -பணவான்கள்
பரம்பரை நோய் இதுவென்று
பழகிக் கொண்டனர் -பாட்டாளிகள்
------------

வார்ப்பு கவிதை இதழிலும் படிக்கலாம்

5 comments:

  1. தீர்ந்து விட்டால் தீரும், தீராத நோய்...

    ReplyDelete
  2. ஆக்கம் வெகு அருமை நீச்சல்காரன். ஆரம்ப பத்தி படிப்பவரின் முதுகில் சாட்டையால் அடித்து நிமிர வைக்கிறது. படத்தேர்வு நன்று.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி நண்பரே


    கற்றதும் பெற்றதும்

    ReplyDelete
  4. உலகின் முதல் இருபது இணைய தளங்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2013/02/most-popular-websites-on-internet.html

    ReplyDelete
  5. உலகின் முதல் இருபது இணைய தளங்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2013/02/most-popular-websites-on-internet.html

    ReplyDelete

தாங்கள் என்னை ஊக்கப்படுத்த இடும் கருத்து(+/-)களுக்கு முன்கூட்டியே நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது