tag:blogger.com,1999:blog-79881215232107419082024-03-13T01:14:55.181-07:00மணல்வீடுகற்பனையும் கடித்தவையும்நீச்சல்காரன்http://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comBlogger104125tag:blogger.com,1999:blog-7988121523210741908.post-46280590976173632492019-11-19T06:07:00.000-08:002019-11-19T06:07:14.611-08:00மிதக்கும் யானை உருவான கதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgU96ro-McLyOTfpSRDRy0VGSwkOpaYQhmkacoRACUqQjXvsLUaU077TnUOYyiZs7vGqMRTl5HLWpt0QKgo1WJedWFJLczSYvBsSvKUqmv38YCQN0Umu4Q9Gpc3-qko1CTyCn7Y6-NPfFW/s1600/mithakkum-yaanai-228x228.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="228" data-original-width="228" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgU96ro-McLyOTfpSRDRy0VGSwkOpaYQhmkacoRACUqQjXvsLUaU077TnUOYyiZs7vGqMRTl5HLWpt0QKgo1WJedWFJLczSYvBsSvKUqmv38YCQN0Umu4Q9Gpc3-qko1CTyCn7Y6-NPfFW/s1600/mithakkum-yaanai-228x228.jpg" /></a>நண்பர் ராஜா சந்திரசேகரின் ஏழாவது புத்தகமாக மிதக்கும் யானை வெளிவந்துள்ளது. சமூகத்தளத்தில் கவனிக்கத் தக்க கவிஞராக வலம்வரும் இவர் அடிப்படையில் இயக்குநர். இதற்கு முன்னரே ஒரு புத்தக உருவாக்கத்திற்கு நுட்ப உதவி செய்ய வாய்ப்பு கிடைத்திருந்தது. தற்போது முழுப் புத்தகத்தையும் வடிவமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. பொதுவாகப் புத்தக வடிவமைப்பு என்பது கலை சார்ந்த அல்லது அலுப்பு தரக்கூடிய வேலையாக இருக்கும். ஆனால் இங்கே எவ்வளவு தொழில்நுட்பத்தைக் கொண்டு ஒரு நூலை உருவாக்கமுடியும் என்று பரிட்சார்த்த முயற்சியாகச் செய்ய முடிவு செய்தோம்.<br />
<div>
<br />
<a name='more'></a><br />
முதலில் வெளிவந்த<a href="http://arts.neechalkaran.com/2018/01/Micro-pathivukal.html"> மைக்ரோ பதிவு</a> என்பது டிவிட்டர் கீச்சுகளின் தொகுப்பு. அதற்கு நிரல் எழுதி மொத்தக் கீச்சுகளையும் திரட்டி, சிறந்தவற்றைத் தேர்வு செய்ய நிரலால் எடுக்கப்பட்ட அந்தக் கீச்சின் பிரபலத்தன்மை அதாவது மறுகீச்சு, விருப்பங்களின் எண்ணிக்கை ஒரு பெரிய காரணியாக இருந்தது. அதில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்ததுடன் பணி முடிந்தது. வேறு சில நண்பர்களுக்கு பிளாக்கர் பதிவுகளையும், வேர்ட்பிரஸ் பதிவுகளையும் பிஎச்பி கொண்டு மொத்தத் தொகுப்பாகத் திரட்டிக் கொண்டுத்த அனுபவமுண்டு ஆனால் இந்த நூலானது பேஸ்புக்கிலிருந்து திரட்ட வேண்டியிருந்தது. பொதுவாக பேஸ்புக் பழைய பதிவுகளைத் தொகுத்துத் தரும் வாய்ப்பை வழங்குவதில்லை. அதை முறியடித்து மொத்தப் பதிவுகளையும் எடுத்துத் தரும் வகையில் ஒரு ஜாவாஸ்கிரிப்ட் எழுதப்பட்டது.<br />
<br />
இதன்மூலம் ஆண்டு வாரியாக பேஸ்புக் நிலைத்தகவல்களை எல்லாம் எடுத்து கூகிள் விரிதாளில் இட்டோம். பின்னர் அதில் கவிதைகளை மட்டும் பிரித்தெடுத்து இரு வேறு நபர்களுக்கு இந்தக் கவிதைகளை மதிப்பிட அனுப்பினோம். அவர்களுக்கும் அலுப்பு தட்டாதவாறு கைப்பேசியிலிருந்தவாரே ஒவ்வொரு கவிதையாகப் பார்த்து தரவரிசை இடும்வகையில் அந்த இடைமுகம் அமைந்திருந்தது. அம்மதிப்பீட்டின் விளைவில் முதன்மையான கவிதைகளை மட்டும் எடுத்து நானும் ராஜா சந்திரசேகரும் ஒன்றிற்குப் பலமுறை புடம்போட்டுப் பார்த்து, கவிதைகளை இறுதி செய்தோம். உதவிக்கு <a href="http://vaani.neechalkaran.com/">வாணி</a> கொண்டு முக்கிய எழுத்துப் பிழைகளையும் நீக்கி ஒரு வடிவம் வந்தது.<br />
<br />
அவற்றைப் புத்தகமாக்க அப்படியே எடுத்துப் போட்டு நூலாக்கவில்லை, ஏனெனில் வடிவமும், வரிசையும் அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருந்தோம். அதனால் பக்கத்திற்கு இருகவிதை என கூகிள் ஆப்ஸ் ஸ்கிரிப்ட் கொண்டு தான்னியக்கமாக கூகிள் டாக்ஸில் இட நிரலும் தயாரானது. கவிதையின் உயர்த்திற்கு ஏற்ப ஒரு பக்கத்தில் சரியான இடத்தில் தானாக இதுவே நிறுத்தும். அதனாலோ என்னவோ தயவு தாட்சணியம் இன்றி கழித்துப் போட்டும், எழுதிப் போட்டு மிதக்கும் யானை வளர்க்கப்பட்டது. பவனம் என்ற ஒரு கூகிள் எழுத்துருவை முழு நூலும் பூசிக்கொண்டது. ஒவ்வொரு கவிதைக்கும் இடையே இறங்குமிடம் வேண்டும் என்பதால் கொஞ்சம் வெற்றிடம் தந்து பக்கத்திற்கு இரு கவிதைகள் அமர்ந்து கொண்டன. நூலை சிறியதாக அச்சடிக்கலாமா என யோசித்த போது மிதக்கும் யானை எனப் பெயரிட்டு, புத்தக அலமாரியில் பூனை போல அடுக்கப்படக் கூடாது என கிரவுன் அளவு இறுதியானது. அச்சுக்கு வேண்டிய அளவான கிரவுன் அளவில் பக்கத்தை மாற்ற கூகிள் டாக்ஸில் மார்ஜின் அளவையும் ஹெட்டர், புட்டர் அளவுகளையும் மாற்றி அமைக்க வேண்டும். உள்ளடக்கம் தவிர இதர பக்கங்களில் பக்க எண் தேவையில்லை. அவற்றை மாற்ற பேஜ் பிரேக் செக்ஷன் கொடுக்கவேண்டும். அவ்வாறு செய்த பின்னர் கச்சிதமான நூலாக பிடிஎப் வடிவில் வந்தது அச்சுக்குச் சென்றது.<br />
<br />
பொதுவாக அச்சுக்கான நூல் இன்டிசைனில் தயாரிப்பார்கள். ஆனால் இந்த நூல் அப்படியில்லாமல் முழுக்க மேகக் கணினியில் கூகிள் டாக்ஸ், கூகிள் ஷீட் எனக் கொண்டு உருவானது. அதற்கேற்ப அளவுகளையும், ஒப்பீடுகளையும் சந்தியா நடராஜன் கொடுக்க ஒருவேளை கூகிள் டாக்ஸில் தயாரிக்கப்பட்ட முதல் அச்சு நூலாகக் கூட இருக்கலாம். இந்த மிதக்கும் யானை வானத்து மேகத்தில் மிதக்கவில்லை என்றாலும் கணினி மேகத்தில் மிதந்து வந்தது என்பது புக்மார்க் செய்து கொள்ளவேண்டிய தகவலாகும். </div>
<div>
<br /></div>
<div>
<a href="http://sandhyapublications.com/index.php?route=product%2Fproduct&product_id=551" rel="nofollow">நூல் குறித்த தகவல்கள் இங்கே உள்ளன.</a></div>
</div>
Neechalkaranhttp://www.blogger.com/profile/01646862688378891745noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-7988121523210741908.post-20076538948649389052019-06-15T02:12:00.001-07:002019-06-15T02:12:44.517-07:00தேர்தல் மீம்ஸ்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguqHWekBY62T7YybqVge2AB7p1fAcNiFn6LgRnVjfmQgm9QwTMKG8iaOjxRfu4VdVBoGr2qhU_PlAgO-1IdusSEjwqWau2qchfEqDu8o42oIHkeAidNN6s-0eBHLLYToXfjDyU7GsPz4E/s1600/Candidate.jpg" imageanchor="1"><img border="0" data-original-height="920" data-original-width="1190" height="492" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguqHWekBY62T7YybqVge2AB7p1fAcNiFn6LgRnVjfmQgm9QwTMKG8iaOjxRfu4VdVBoGr2qhU_PlAgO-1IdusSEjwqWau2qchfEqDu8o42oIHkeAidNN6s-0eBHLLYToXfjDyU7GsPz4E/s640/Candidate.jpg" width="640" /></a><br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9CV3waI0DPwlSzibrRGE90xw4XAcIVbrFwUlrjlSmNgXl0HtMXvvNO5qxpEKpAkwhBtfSP8RTz2X7EWw5OpNetlME4g1s1_8UpCJ1h-PiR-SpI1U-rV40j6KuKZcSeJwlCzHpzg9p5GA/s1600/women+candidate.jpg" imageanchor="1"><img border="0" data-original-height="880" data-original-width="920" height="612" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9CV3waI0DPwlSzibrRGE90xw4XAcIVbrFwUlrjlSmNgXl0HtMXvvNO5qxpEKpAkwhBtfSP8RTz2X7EWw5OpNetlME4g1s1_8UpCJ1h-PiR-SpI1U-rV40j6KuKZcSeJwlCzHpzg9p5GA/s640/women+candidate.jpg" width="640" /></a><br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjepy7Fd5AHI_34GqU0sYnFnPijsRJXAqexD8dKUjW0pI2iSYsx9UAqkQtVWz_MMPyv3KU3yYf58u4HOiT2ozSz7sd5Zka-WwbPqBjs-XZc3O-t0lw34l2EtFvWC5PiR-RKlMvISpkPp1o/s1600/eci.jpg" imageanchor="1"><img border="0" data-original-height="981" data-original-width="850" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjepy7Fd5AHI_34GqU0sYnFnPijsRJXAqexD8dKUjW0pI2iSYsx9UAqkQtVWz_MMPyv3KU3yYf58u4HOiT2ozSz7sd5Zka-WwbPqBjs-XZc3O-t0lw34l2EtFvWC5PiR-RKlMvISpkPp1o/s640/eci.jpg" width="554" /></a><br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHaK676L6ZgAXqL-3h7aXrq6ZnTVOoWigLKuz05BDPQgQuGqfbqJwqOgQ0rr6hXVPVn9Epmqhg65_m_qfpEU5Fx2hmnL1oSyYD9Vj2V9w_Zsyfh0sAS5srlKbos4kSvNdYp6ah46nkHwU/s1600/party+stands.jpg" imageanchor="1"><img border="0" data-original-height="885" data-original-width="920" height="616" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHaK676L6ZgAXqL-3h7aXrq6ZnTVOoWigLKuz05BDPQgQuGqfbqJwqOgQ0rr6hXVPVn9Epmqhg65_m_qfpEU5Fx2hmnL1oSyYD9Vj2V9w_Zsyfh0sAS5srlKbos4kSvNdYp6ah46nkHwU/s640/party+stands.jpg" width="640" /></a><br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAyw1yM3OJ4YeiZ-KXakNUaqd8rehk2Ne3A-3wn4wSEvEjeG6k6kIrQsJVRP5DCnbUDBBL7RXMDe-e0v1HRI7bOWBy_TiU1S5Z76zEDCy-DH68I_LUAZco5jeweVWdPkibXT773jWTkY0/s1600/constituency.jpg" imageanchor="1"><img border="0" data-original-height="814" data-original-width="850" height="611" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAyw1yM3OJ4YeiZ-KXakNUaqd8rehk2Ne3A-3wn4wSEvEjeG6k6kIrQsJVRP5DCnbUDBBL7RXMDe-e0v1HRI7bOWBy_TiU1S5Z76zEDCy-DH68I_LUAZco5jeweVWdPkibXT773jWTkY0/s640/constituency.jpg" width="640" /></a><br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIIO6bz-h8Lzcl9ME2O-yO6jri51dVNOfQSSPFaj74OAVDVyazmvUg6MgqCXce3DBZB4HNXGY52QnbCXru45dbUqvoaHgaHYPbq18DtHHxEaORIbULfRnTpRIYGG0yd8hM7_UrXQWI8co/s1600/electionresult.jpg" imageanchor="1"><img border="0" data-original-height="920" data-original-width="920" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIIO6bz-h8Lzcl9ME2O-yO6jri51dVNOfQSSPFaj74OAVDVyazmvUg6MgqCXce3DBZB4HNXGY52QnbCXru45dbUqvoaHgaHYPbq18DtHHxEaORIbULfRnTpRIYGG0yd8hM7_UrXQWI8co/s640/electionresult.jpg" width="640" /></a><br />
<br />
பத்திரிக்கை.காமிற்கு உருவாக்கிய தேர்தல் மீம்ஸ்களின் தொகுப்பு</div>
Neechalkaranhttp://www.blogger.com/profile/01646862688378891745noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7988121523210741908.post-76499786425582442752019-02-23T13:27:00.001-08:002019-02-23T13:29:46.904-08:00விக்கிப்பீடியா சைபர் மீம்ஸ்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
தமிழ் விக்கிப்பீடியாவில் புதியவர்களை எழுதத் தூண்ட ஒரு போட்டி வைத்துள்ளனர். இறுதி மாதம் மார்ச் 2019</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://ta.wikipedia.org/wiki/WP:NUC">https://ta.wikipedia.org/wiki/WP:NUC</a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7Q-ZXd1jI-ENRim8jGjjnnpntqpU2F8k-HoqLDIFq8sUlcfMRt3Vm7eZNQlaV5MvYq5bzVU6N6k5vaIybxayxeSE_SpH9GZhoSNYv7xJXKqT9k-UHujPK8LFKl2yDJ3f1d8dpzFtm5GY/s1600/banner1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="600" data-original-width="1128" height="339" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7Q-ZXd1jI-ENRim8jGjjnnpntqpU2F8k-HoqLDIFq8sUlcfMRt3Vm7eZNQlaV5MvYq5bzVU6N6k5vaIybxayxeSE_SpH9GZhoSNYv7xJXKqT9k-UHujPK8LFKl2yDJ3f1d8dpzFtm5GY/s640/banner1.png" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDj8BuR58ECHV24VKUet5KMIbthvHha0Tq38QyRJBYLjbe75kKV6pN66vJeD2zvrYp9738tOagxRvnKvUbcHtFHlGl9cUatmiRKkpm6-qBuWQ1uQFuxC1bArFsE5osFTDxB8n1oofpXCY/s1600/M1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="546" data-original-width="637" height="342" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDj8BuR58ECHV24VKUet5KMIbthvHha0Tq38QyRJBYLjbe75kKV6pN66vJeD2zvrYp9738tOagxRvnKvUbcHtFHlGl9cUatmiRKkpm6-qBuWQ1uQFuxC1bArFsE5osFTDxB8n1oofpXCY/s400/M1.png" width="400" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2H3foWt5AhMtRhyH3y3htdhiAFPMsmDLCuiBN0YAcElEu88h1MUhRq36EwqUimceyFAjBczM0vU1wqjPfrqv9GKBnZSxuq1RpJhbQmqAwKka_fYBNabCB673cOvNHlgCHtpSqfvVz0E0/s1600/M2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="881" data-original-width="885" height="397" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2H3foWt5AhMtRhyH3y3htdhiAFPMsmDLCuiBN0YAcElEu88h1MUhRq36EwqUimceyFAjBczM0vU1wqjPfrqv9GKBnZSxuq1RpJhbQmqAwKka_fYBNabCB673cOvNHlgCHtpSqfvVz0E0/s400/M2.png" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeH0NGGahQApJAZMTGtjZBHP5o-Vc5DNxcySCc-b_XKy4RQ-dQVSUVbwWzlIh0PCCts-qGNsGtmn4zQps5rak9XbVoxO6IDt1YhyhGs8STYXTgxN3bmfic2g1JwjZ_ph9Oc3VKjrzr2qk/s1600/M4.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="465" data-original-width="808" height="230" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeH0NGGahQApJAZMTGtjZBHP5o-Vc5DNxcySCc-b_XKy4RQ-dQVSUVbwWzlIh0PCCts-qGNsGtmn4zQps5rak9XbVoxO6IDt1YhyhGs8STYXTgxN3bmfic2g1JwjZ_ph9Oc3VKjrzr2qk/s400/M4.png" width="400" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgncqNGAVOXqqwS0mU4c3JvZxvm7tk5vJxsdN7Ft6zVSaiU3pL08u8aEfBbtftfDKzPCI-yqQrNElTvkW_hyAos6t2bBEfvn-IQk3tFTFPzULcQ8nq3pKWhh5VeQizMaX197R3pK25F8Rw/s1600/M5.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="950" data-original-width="903" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgncqNGAVOXqqwS0mU4c3JvZxvm7tk5vJxsdN7Ft6zVSaiU3pL08u8aEfBbtftfDKzPCI-yqQrNElTvkW_hyAos6t2bBEfvn-IQk3tFTFPzULcQ8nq3pKWhh5VeQizMaX197R3pK25F8Rw/s400/M5.png" width="380" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhILfyEwaiOlKe8N7Q9WpegK2ZOEx4cTiT7fH7gprdzj5X0gmBq7wZiyFq5GvNQ31eplcf0PcsjdsQOrXbtl-1VoFt1y8gwuEeaGurDa4FnzeBrcEjXdxGLU355EUEXir-8lCuwehdV2_U/s1600/M8.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="592" data-original-width="766" height="308" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhILfyEwaiOlKe8N7Q9WpegK2ZOEx4cTiT7fH7gprdzj5X0gmBq7wZiyFq5GvNQ31eplcf0PcsjdsQOrXbtl-1VoFt1y8gwuEeaGurDa4FnzeBrcEjXdxGLU355EUEXir-8lCuwehdV2_U/s400/M8.png" width="400" /></a></div>
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz5_S3GYu84HtBnkLFtW1gSAIwTueAp3zC3fZm1bPpx7VZzfSP5nqc4ZoV-FmwUCxAaYrkITfuQTKEmrgacKQYC30ZYoMZ0IdwhNt0gO4vNX-0z2YkFSm0Vy3-YHMpLHDXH-1GKtDaBvw/s1600/M10.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="585" data-original-width="742" height="315" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz5_S3GYu84HtBnkLFtW1gSAIwTueAp3zC3fZm1bPpx7VZzfSP5nqc4ZoV-FmwUCxAaYrkITfuQTKEmrgacKQYC30ZYoMZ0IdwhNt0gO4vNX-0z2YkFSm0Vy3-YHMpLHDXH-1GKtDaBvw/s400/M10.png" width="400" /></a></div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-ewSJAh7kRbNsLf6DpJ_3hGn_ZHBjJJ1J8VxIYQ0VIxmQaP9lfAChcBwoZy4FC9h1SWL3hL_LBtHvKFGLA25SrfBjOWXSAU_BHa24_aEMLzvubVR09GWLEUzYgY17DICNFQf-_W-wYlA/s1600/M9.png" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="523" data-original-width="1355" height="246" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-ewSJAh7kRbNsLf6DpJ_3hGn_ZHBjJJ1J8VxIYQ0VIxmQaP9lfAChcBwoZy4FC9h1SWL3hL_LBtHvKFGLA25SrfBjOWXSAU_BHa24_aEMLzvubVR09GWLEUzYgY17DICNFQf-_W-wYlA/s640/M9.png" width="640" /></a><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9-mjJ-SbBpeCt74d_PLjYiuSzx0webE69txGaLqGYdEPabYnqqj2r4ttGQ6ZH85BKITIBB2Cz5POtZHFSZNjZjsKAbPFEkPU13JLXnkLGT-Z8W1W_0l-lHVGdNF6joaY7N5xoCyAkR8Q/s1600/M11.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="624" data-original-width="805" height="310" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9-mjJ-SbBpeCt74d_PLjYiuSzx0webE69txGaLqGYdEPabYnqqj2r4ttGQ6ZH85BKITIBB2Cz5POtZHFSZNjZjsKAbPFEkPU13JLXnkLGT-Z8W1W_0l-lHVGdNF6joaY7N5xoCyAkR8Q/s400/M11.png" width="400" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRSK_m6U-DERBBUVdpz_OXtJ5hZXZiV2Rpdumw7T-9kZsTKmfxn46xE_svLebfDkSgP8xRGbmKWkqYysz0-rTbqBKOfLNAysL_Udfn0o_NpcKcIJlZhFc3IAPyVYYIYrbM0yCWRynXRCE/s1600/M6.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="543" data-original-width="956" height="226" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRSK_m6U-DERBBUVdpz_OXtJ5hZXZiV2Rpdumw7T-9kZsTKmfxn46xE_svLebfDkSgP8xRGbmKWkqYysz0-rTbqBKOfLNAysL_Udfn0o_NpcKcIJlZhFc3IAPyVYYIYrbM0yCWRynXRCE/s400/M6.png" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoZFqP3W4Fmi7LD4XAcG71AkdOBYK3Zy1MF_160nXcMIQp7hAV5sUAf6KC1UldpWg0y79sZuEDihcr3RtwAp8tIf4ekWTp0tvbMsaVZz5L2L-DAw39hIjj0102cW4knDYdwLbZ9Ki4VVw/s1600/M3.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="556" data-original-width="888" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoZFqP3W4Fmi7LD4XAcG71AkdOBYK3Zy1MF_160nXcMIQp7hAV5sUAf6KC1UldpWg0y79sZuEDihcr3RtwAp8tIf4ekWTp0tvbMsaVZz5L2L-DAw39hIjj0102cW4knDYdwLbZ9Ki4VVw/s640/M3.png" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2itIcBmzC3tuDp_yCgLACrXotj8AShorG2BvK_etaU0etunbHeZUwmFs-nqpxIxnFQ-rgbfSBMytOantkFp8IPnp0FIuQVh-N2mfVmQ0GmbmmJSJX2iS7EPVDyjucvM5I8WVlg8l37Vg/s1600/M7.png" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="571" data-original-width="976" height="374" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2itIcBmzC3tuDp_yCgLACrXotj8AShorG2BvK_etaU0etunbHeZUwmFs-nqpxIxnFQ-rgbfSBMytOantkFp8IPnp0FIuQVh-N2mfVmQ0GmbmmJSJX2iS7EPVDyjucvM5I8WVlg8l37Vg/s640/M7.png" width="640" /></a></div>
</div>
Neechalkaranhttp://www.blogger.com/profile/01646862688378891745noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7988121523210741908.post-44248277054176781562018-01-04T13:14:00.000-08:002020-03-27T20:53:02.554-07:00மைக்ரோ பதிவுகள் - நூல் அணிந்துரை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3VWYIpWET9Ixhh0ELCAThxxdlvj_fzAAXGt2ZBSP2_g4Fxgkia3NQs_DW_n8s8tMo3KDAyONeMljfiT2ApkDzD3Xw0T40qaV64wmGbRj8kGLRGvYWV1z4m3FhrcNUbvdrTu8WPhgr76k/s1600/Micro+pathivukal.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3VWYIpWET9Ixhh0ELCAThxxdlvj_fzAAXGt2ZBSP2_g4Fxgkia3NQs_DW_n8s8tMo3KDAyONeMljfiT2ApkDzD3Xw0T40qaV64wmGbRj8kGLRGvYWV1z4m3FhrcNUbvdrTu8WPhgr76k/s400/Micro+pathivukal.jpg" width="270" height="400" data-original-width="337" data-original-height="500" /></a></div><br />
அதாவது ..<br />
<br />
"விடாமல் பிடித்திருக்கிறேன். இந்தத் தூரிகை என்னை ஓவியனாக்கலாம்.", "வெள்ளைத் தாளை குடிக்கிறது வரைந்த பூனை." இவை வரிகளல்ல காட்சிகள். அனேகமாக காட்சிகளும் அல்ல சாட்சிகள். எழுத்தின் சுவைக்கும், எண்ணத்தின் பலத்திற்கும் நீலக் கம்பளம் விரித்துக் காத்திருக்கும் இப்புத்தகத்தின் சாட்சிகள். 2010 காலகட்டம் தொடங்கி நான்கைந்து ஆண்டுகள் இணையத்தில் எழுதிய டிவிட்ஸின் தொகுப்பே இந்தப் புத்தகம். டிவிட்டரின் காலவெளியில் புதையுண்டு போன கடந்த கால கீச்சுகளைச் சேகரித்து இலக்கியவெளியில் நூலாக்குதல் ஒரு இனிப்பான முயற்சி. இது மைக்ரோபதிவுகளாகப் பிறந்தாலும் மாஸ் அதிர்வுகளை உண்டாக்கும் ஒரு வாசிப்பு அனுபவத்திற்கான நுழைவாயில். "மரத்தின் நாணம் <br />
கலைக்கிறது <br />
கிளை அசைத்துப் <br />
போகும் அணில்" என்று எழுதியதைப் போல மனதின் தேக்கம் கலைக்கிறது கீச்சை படித்துப் போகும் இப்பக்கங்கள். நிற்க, இணையத்தில் எழுதலாமா? அப்படி என்ன இருக்கிறது?<br />
<br />
முதல் கணினி கண்டுபிடிக்கப்பட்டதைவிட மேசைக் கணினி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே கணினி வரலாறு தொடங்குகிறது. இணையம் உருவானதைவிட இணையத்தளம் உருவான பின்னரே உரையாடல் தொடங்கியது. அதுபோல 1984ல் பிறந்தாலும் 2004 காலகட்டத்திற்குப் பின்னரே கணித்தமிழ் இணையத்தில் பரவலானது. வலைப்பதிவு, சமூகத்தளம் என எளிய மக்களின் கையில் தவழ்ந்த போதும் பத்திரிக்கைத் துறைதான் கணித்தமிழின் ஆதிமூலம். எழுத்தார்வம் கொண்ட பலரை ஈர்த்த இணையம் கருத்தாழம் கொண்ட படைப்புகளை உருவாக்கத் தவறவில்லை. பலர் தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் போதுதான் 2006ல் டிவிட்டரும் உருவானது. பெரும்பாலும் பிளாக்ஸ்பாட் போன்ற வலைப்பதிவும், ஆர்குட் போன்ற சமூகத் தளமும் தமிழ் எழுத்துக்காரர்களின் பசிக்குத் தீனிபோட்டன. திறன்பேசிகள் பரவலான பின்னர் அபரிவிதமான இணையப்பயனர்கள் தமிழில் சமூகத்தளங்களில் எழுதத் தொடங்கினர். குறுகிய தகவல், விரைவான பரவல், கையடக்கக் கருவிகள் எனப் பல அம்சங்கள் கொண்ட சமூகத் தளங்கள், வலைப்பதிவுகளைவிட அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். பேஸ்புக் போல் தனிப்பதிவுகள் அல்லாமல் பொதுப்பதிவுகளாக அதாவது யாரும் வாசிக்கக் கூடியது என்பதால் டிவிட்டர் இன்னும் ஒருபடிமேலே சிகரத்திற்கு வந்தது.<br />
<br />
ஒரு நொடியில் பல ஆயிரம் கீச்சுகள் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. தமிழில் எழுதும் கீச்சர்களே சுமார் ஒரு லட்சத்து இருபது ஆயிரம் இருக்கின்றனர். தமிழ் தெரிந்த மொத்த கீச்சர்கள் இருபது லட்சமாவது இருப்பார்கள் என யூகிக்க முடியும். போலி கணக்குகள், பப்பெட் கணக்குகள், டிரோல் கணக்குகள் என்று எண்ண முடியாத கொசுறுகளும் உள்ளன. ஒரே நேரத்தில் கீச்சப்படும் பதிவுகளில் உள்ள குறிச்சொற்கள் கொண்டு டிரெண்ட் என்ற ஒரு யுக்தியை டிவிட்டர் கணிக்கிறது. இதனால் ஒரு சமூகமே எதைப்பற்றி அதிகம் விவாதிக்கின்றன அல்லது சூடான விவாதத்தை அறியமுடியும். இதுவொருவகையில் பயனர்களை எல்லாம் நுகர்வு கலாச்சாரத்திற்கு ஈர்க்கும் வழியெனலாம். ஊரே பேசும் விசயத்தில் நாமும் கருத்து சொல்வோம் என்ற மனநிலையைத் தூண்டுகிறது. பிறரின் கவனத்தைப் பெற அவசர நிலையில் கீச்சப்பட்டாலும் டிவிட்டரின் பலமே சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதே. எழுதவே தெரியாதவர்களைக் கூட இதன் வசீகரம் வாசகராக உள்ளே இழுத்து, விமர்சகராக வளர்த்து, வித்தைக்காரராக்கியுள்ளது. இதன் பின்தொடர்பவர்களும், பதில் மொழியும், மறுகீச்சுகளும் படைப்பாளிக்கு உடனடி அங்கீகாரம். பத்திரிக்கைக்கு எழுதி வெளிவரும் வரை காத்திருந்து கருத்துக்களை அறியும் காலம் மாறி உடனுக்குடன் வாசகரும் படைப்பாளியும் உலாவிக் கொள்ளும் இடம். <br />
<br />
சமூகத்தில் இருக்கும் அத்தனை வித சூழல்களையும் டிவிட்டரில் காணமுடியும். வன்முறை தொடங்கி வாழ்முறை வரை அத்தனையும் அடக்கம். பணம் சம்பாரிக்க அலையும் கூட்டமுண்டு அதற்கான விளம்பரங்களைக் காணலாம். சமையல் குறிப்புகளோடு சுற்றும் மங்கைகளும் உண்டு, பிறந்தநாள், விடுமுறைநாள் வாழ்த்துச் சொல்லும் நங்கைகளும் உண்டு, அரசியல் விமரிசனம் செய்யும் கரைவேட்டிகளும் உண்டு, அதிகாரிகளைக் கேள்விகேட்கும் புகார்ப்பெட்டிகளும் உண்டு. சினிமா விமரிசனம் செய்ய டீக்கடைகளும் உண்டு, சிரிப்புவராமல் சண்டையிடும் ரசிகர்படையும் உண்டு. பிரபலங்களுடன் சாமானியர்கள் உரையாடும் வேளையில் சாமானியர்களுடனும் பிரபலங்கள் உரையாடுகின்றனர். டிவிட்டரில் கருத்துச் சொல்லி கைதாவதும், கைதானவருக்குக் கருத்து சொல்வது சாத்தியம். டிவிட்டரில் எழுதப்படும் நுண்பதிவுகளைக் கீச்சுகள் என்று அழைக்கிறோம். தமிழ் கீச்சுலகில் பெரும்பாலும் சினிமா, அரசியல் கீச்சுகளே பிரதானம். அடுத்ததாக உரையாடல்கள், பார்வர்ட் மெசேஜ்கள் அல்லது சுற்றில் விடப்பட்ட வாட்ஸப் குறுஞ்செய்திகளுக்கிடையே உண்மையான படைப்பாளிகளின் கீச்சுகளும் அங்கங்கே தெறிக்கும். இத்தகைய படைப்புகளைப் பல ஊடகங்கள் வெளியிட்டு அங்கீகரிக்கின்றன. இவற்றுக்கு விகடன் வலைபாயுதேவிலோ, குங்குமம் வலைப்பேச்சிலோ, தி இந்து வலைவீச்சிலோ, குமுதம் ரிப்போர்ட்டர் ஆன் லைன் ஆப்பிலோ, கண்மணி இதழில் வலையில் வசீகரித்தவையிலோ வந்த கீச்சுகளே சாட்சி.<br />
<br />
கவித்துவமான கீச்சுகளைத் தாண்டி, ஒரு சமூக நிகழ்வினை நெற்றிப் பொட்டில் அடித்தாற்போன்ற உடனடி எதிர்விமர்சனங்கள், வித்தியாசமான கற்பனைகள், சமூகப்பார்வைகள், கலாய்ப்புகள் என்று நீளும் பட்டியலில் மீமீஸ்களும் அடக்கம். இயற்பியலில் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு எலக்ட்ரான் மாறும் போது ஆற்றல் வேறுபாடே ஒளியாக உமிழப்படுகிறது. அதுபோல எழுத்தில் சிந்தனைக் கோணத்திலிருந்து சிந்திக்காதக் கோணத்தில் காட்சிப்படுத்தும் ஒரு வர்ணனையே ரசனையை வாசகனுக்குத் தருகிறது. அவ்வகையில் டிவிட்டர் வழியே எனக்கு அறிமுகமான ராஜா சந்திரசேகரின் கீச்சுகள் ரசனையான சிதறல்கள். இவை கற்பனையின் பல்முனையையும் தொட்டு மனதில் பதிகின்றன. இவரின் கீச்சுகளில் குழந்தை, மழை, மௌனம், சொல் பெரும்பாலும் தவழ்ந்து, பொழிந்து, பேசி, இனிக்கின்றன. சிறந்த படைப்பு இன்னொரு சிறந்த படைப்பைத் தூண்ட வேண்டும். இந்தக் கீச்சுகளை நான்கு பக்கம் படித்தவுடன் புதிதாக நான்கு வரி உங்கள் விரலில் பிரசவிக்கக் காத்திருக்கும். <br />
<br />
"நமதிந்த இடைவெளிக்கு நமது நெருக்கம் தெரியும்.", "உங்கள் மீதே மோதிக் கொள்வதுதான் மோசமான விபத்து." என்று நச் கீச்சுகள் அதிகம். காதல், இயற்கை, குணம், ஏமாற்றம் என்று பல நிலைகளில் பல பொழுதுகளில் எழுதிய தொகுப்பில் கருத்துகள் ஒரே மாதிரி இல்லாமல் கலவையாக இருப்பது இதன் சுவாரசியம். <br />
"உளி பழக <br />
செதுக்குகிறேன் <br />
சிலை காண <br />
அல்ல" என்று சொல்வதால் இவரின் சோதனைக் களமாக டிவிட்டர் இருந்திருக்கலாம். ஆனால் இவரின் சாதனைக் களம் மைக்ரோபதிவுகள். இதன் அடுத்த தொகுப்புகளும் அடுத்த வெற்றிகளும் தொடரட்டும்.<br />
<br />
அன்புடன்,<br />
நீச்சல்காரன் <br />
<br />
<a href="https://www.amazon.in/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-Tamil-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-ebook/dp/B07BCGKC97">அமெசானில்</a><br />
<a href="http://tamil.thehindu.com/general/literature/article22781841.ece">தமிழ் இந்துவில்</a><br />
<a href="http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2018/mar/04/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-2874347.html">தினமணியில்</a></div>Neechalkaranhttp://www.blogger.com/profile/01646862688378891745noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7988121523210741908.post-78262040653223730492016-07-15T09:17:00.000-07:002020-01-05T18:09:54.569-08:00மேப்பிள் தேசத்து மேகங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கனடா இலக்கியத் தோட்டத்தில் ஒரு விருது வாங்க வேண்டும் என்பது <a href="https://books.google.com/books?id=pZ-SCwAAQBAJ">நூல்</a> வெளியிட்ட ஒவ்வொரு எழுத்தாளனின் கனவாக இருக்கும். எஸ்.ரா, ஜெமோ போன்ற நெருங்கிய பிரபலங்கள் வாங்கும் போதும் அந்தக் கனவு இரட்டிப்பாகும். ஆனால் "அதற்கெல்லாம் நீ லாயக்கு இல்லை தொழிற்நுட்ப விருது தாரேன் அதையாவது ஒழுங்காகச் செய்" என்று சொல்லாமல் சொல்லி ஒரு அழைப்பு வந்தது. அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பித்து, பூமியின் மறுபுறம் டொரோண்டோ செல்வதென முடிவானது. சீக்கிரமாகச் செல்லும் விமானத்தைப் பிடித்து இருநாடுகளுக்கிடையே ஒப்பந்தம் எதிலும் கையெழுத்து இடவேண்டிய சூழல் இல்லாததால் மலிவான விமானத் திட்டம் ஒன்று போடப்பட்டது. முக்கியமாக ஜன்னல் சீட்டுடன், தேவையான காத்திருப்பு நேரம் இருக்கும்வகையில் அமைந்தது.அதன்படி சென்னை விமான நிலையத்திலிருந்து அபுதாபி செல்லும் விமானம் சரியான நேரத்தில் தயாராக இருந்தது. கடவுச் சீட்டு சோதனையில் அமர்ந்திருந்தவர் மதுரைக்காரர் என்பதால் சற்று அதிகநேரம் குலாவ நேர்ந்தது. விமான நிலையத்தின் மேற்கூரை விழும் முன்னே விரைவாகப் பயணச் சீட்டை(boarding pass) வாங்கிக் கொண்டு காத்திருப்புப் பகுதிக்குள் விஜயம் செய்யப்பட்டது. ஜெட் ஏர்வேஸில் விமான ஓட்டி பஞ்சதந்திர கமல் குரலில் தமிழில் வரவேற்று விளக்கிக் கொண்டிருந்தார். விமானத்திற்குள்ளே ஒரு முழுப் படத்தைப் பார்த்து முடிப்பதற்குள் அபுதாபியை அடைந்தது அந்த விமானம். <br />
<br />
அபுதாபியில் அப்படியே ஒரே பேருந்தில் அனைவரையும் ஏற்றிக் கடத்திக் கொண்டு விமான முனையத்தில் இறங்கிவிட்டனர். அங்கே சோதனையெல்லாம் முடித்துக் காத்திருந்த போது ஒரு இந்தியப் பயணியுடன் பேசிக்கொண்டே அந்தக் குளிரில் உயிர்வாழ வேண்டியிருந்தது. ஜெட் விமானத்தில் கொடுத்த ஒரு சிற்றுண்டியைப் பையில் போட்டு எடுத்து வந்ததால் அவ்வேளையில் சற்று பசியாற முடிந்தது. பிரசெல்ஸ் விமானம் பின்னர் டொரோண்டோ விமானம் என மீண்டும் பறந்து கனடாவில் இறக்கிவிட்டனர். ஒபாமாவை ஒத்த சாயலில் இருந்த ஒருவர் பக்கத்துச் சீட்டில் அமர்ந்து பேனா கடன் வாங்கினார் என்பதைக் கனவில்கூட எதிர்பார்க்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக கடவுச்சீட்டை வாங்கிக் கொண்டு அங்கே காவலாளி கேள்விமேல் கேள்வி கேட்டு தனது அறிவை வளர்த்துக் கொண்டார். தமிழ் இலக்கியத் தோட்டம் பற்றி கூறிய பின்னர் ஒருவழியாக வாழ்த்து சொல்லி அனுப்பினார். வைபை இணைப்பிற்குப் பகீரதபிரயத்தனம் செய்தாலும் யாரையும் அழைக்க முடியவில்லை. பஞ்சாபிய சகபயணியின் தொலைபேசி உதவியுடன் வாகனசாரதியுடன் பேசி உள்நாட்டு ஜோதியில் ஐக்கியக்கமாக முடிந்தது. எதேச்சையாக சாரதி பெயரும் சோதி என்ற சோதிநாதன். <br />
<br />
இருசக்கர வாகனங்களே இல்லாத அளவிற்குச் சாலைகளில் மகிழுந்துகள் நிரம்பி வழிந்தன. அங்கே சுங்கச் சாவடிகள் எல்லாம் கணினிமயம், வாகனத்தில் பொருத்தியுள்ள ஒரு மென்பொறி உதவியுடன் அந்த வாகனம் அச்சாலையைக் கடந்தது என்று கணித்துக் கொள்கிறார்கள். பல உள்ளூர் தமிழ் நாளிதழ்கள் விலையில்லாமலே கிடைக்கின்றன. நுகர்வோரே பெட்ரோலைப் போட்டுக் கொண்டு பணத்தைக் கட்டிக் கொள்கிறார்கள். வரும்வழியில் ஈரோட்டுக் காரர் ஒருவரின் உணவகத்தில் மெட்ராஸ் தாளியை வாங்கியதால் அப்பளம் நொறுங்காமல் சுமக்க வேண்டியிருந்தது. சாலைகளின் இருமருங்கிலும் பசுமை, சாலை விதிகளில் சீர்மை, இறங்கிய விடுதியோ இனிமை. மாலை நடையில் மேப்பிள் மரங்களை ரசிக்கமுடிந்தது. இராட்சச மரங்கள் மின்சாரக் கம்பாகப் பயன்படுவதைக் காணமுடிந்தது. குருவிகள் கூட குசும்பு செய்து நடப்பவர்களுடன் விளையாடியது. காமன்வெல்த் நாடுகள் எதைச் செய்கிறதோ அதற்கு எகனைக்கு மொகனையாகச் சில பழக்கங்கள் உள்ளன. உதாரணம் வலதுபுற வாகன ஓட்டம், நீளமான பிளக்பாண்ட், மின்னழுத்த வேறுபாடு. இந்தியாவிலிருந்து கொண்டு சென்ற கைப்பேசிக்கான மின்னேற்றி அங்குப் பொருந்தாமல் போனதால் இறுதியாகத் தொலைக்காட்சியிலிருந்த யுஎஸ்பி தடத்தில் மின்சாரத்தைத் திருடி கைப்பேசி வயிறு வளர்த்தது. வானம் இருட்டும் வரை காத்திருந்து காத்திருந்து அன்றைய பொழுது நீண்டிருந்தது அட உண்மையிலேயே பகல்பொழுது அதிகம்தான். <br />
<br />
அடுத்தநாள் மாலை காரைக்குடி உணவகத்திற்கு குமார் ரத்தினம், சிவன் இளங்கோ, மருத்துவர் சம்பந்தம் உடன் சென்று பொழுது கழிந்தது. திரு. சம்பந்தம் ஒரு புற்றுநோய் மருத்துவர் மட்டுமல்ல தீவிர இலக்கியப் பிரியரும் கூட. வாசகர் வட்டம் வைத்து நோயாளி ஆனவர்கள் உண்டு ஆனால் நோயாளிகளைக் கொண்டு திருக்குறள் வாசக வட்டம் ஒன்றை உருவாக்கியவர் இவர். மேலும் ஹார்வர்ட் தமிழ் இருக்கை பெருங்கொடையாளருள் ஒருவர். அங்கு இளங்கோ அவர்களின் கேள்வி ஆர்வமும் சம்பந்தத்தின் சைவ இலக்கியப் பேச்சு சைவ பிரியாணியைவிட அட போட வைத்தன. அன்றிரவே பேராசிரியர் சுவர்ணவேல், பதிப்பாளர் திருமூர்த்தி ஆகியோர் வந்தடைய விடுதியே நிறைந்தது.<br />
<br />
சனியன்று காலைச் சிற்றுண்டியைப் புசித்துவிட்டு மருத்துவருடன் சி.என்.டவர் நோக்கி பயணம் அமைந்தது. பாக்கிஸ்தான் ஓட்டுநர் வாகனத்தை ஒட்டிக் கொண்டே பேசிக்கொண்டுவந்தார். அவ்வூரே ஆசியர்களின் வரவால் நிறைந்ததை அறியமுடிந்தது. குறிப்பாகத் தமிழர்களும், சீனர்களும் அதிகமாக வாழ்கிறார்கள். தூய்மையான நகரமாகவே இருக்கிறது. வீடுகள் அனைத்தும் மரத்தாலேயே கட்டப்பட்டுள்ளன. பெரும்பாலும் ஒரே தோற்றத்திலேயே வீடுகளைக் கட்டிக் கொள்கின்றனர். சி.என். கோபுரத்தின் கீழே பல வணிகப் பகுதியாக இருந்தாலும், சிமெண்டாலானா பெரிய தூண் அதற்கு மேலே ஒரு கண்ணாடி மாடம். 58 வினாடியில் மணிக்கு 22கிமீ வேகத்தில் மின்தூக்கி மக்களைத் தூக்கிச் செல்கிறது. இராமேஸ்வரத்தில் இராமர் பாதத்தில் நின்று நகரத்தையே பார்த்த அனுபவத்தை அம்மக்களுக்குத் தருகிறது. பின்னர் அருகில் இருந்த மீன் காட்சியக்கத்திற்கு மருத்துவர் அழைத்துச் சென்றார். வண்ண வண்ண மீன்களைப் பரிணாமத்தின் அத்தனைக் கோணத்திலும் காணமுடிந்தது. மெல்லுடலிகளின் சிலிர்ப்பு பார்க்கப் பார்க்கச் சலிக்கவில்லை. முழுக்காட்சியகமும் செயற்கை நீர்ப் பகுதியாகப் பல்வேறு இராட்சச எந்திரங்களின் துணையுடன் பராமரிக்கின்றனர். இவற்றை எல்லாம் பெருங்கடலில் இயற்கை எளிதாகச் செய்து பல்லுயிர்களை வாழச் செய்கிறது என்பது கொடைதான்.<br />
<br />
டொரோண்டோவின் மையப்பகுதியில் வீதிகளில் சுற்றி பின்னர் இந்திய உணவகம் ஒன்றில் உண்டுவிட்டு ரயிலில் பயணம் தொடங்கியது. அங்கும் இருபால் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். ஆனால் நவீனமாகப் பதாகையில் எழுதிவைத்துப் பிச்சை எடுக்கிறார்கள். ரயில்நிலையத்தில் நுழையும் போதே கட்டணம் செலுத்த வேண்டும் பின்னர் எங்கு வேண்டுமானாலும் ஒருவழிப் பயணம் செய்யலாமாம். ரயில்நிலையத்தின் அருகே பேருந்து நிலையம் அமைந்திருப்பதால் ரயில் கட்டணத்திலேயே பயணம் செய்யலாம். ஒவ்வொருவராக விசாரித்து, சரியான ரயிலில் ஏறி, சரியான நிறுத்தத்தில் இறங்கி, சரியான பேருந்தைப் பிடித்து மார்க்ஹம் அடைய முடிந்தது. கூகிள் மேப்பில் மட்டுமல்ல வழிநெடுகே வழிகாட்டிய மக்களிடமும் விருந்தோம்பலைக் காணமுடிந்தது. <br />
<br />
அன்று(ஜூன் 18) மாலை ராடிசன் ஓட்டலில் நடந்த இயல் விருது விழாவில் முன்கூட்டியே அனுமதி வாங்கிய சுமார் 150 கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்குள்ளும் ஒரு நீண்ட மொழியார்வம் இருந்தது. அங்கேயே வளர்ந்த குழந்தைகள் கூட தமிழில் சரளமாகப் பேசுகிறார்கள். அ.முத்துலிங்கம், கங்காதரன், காலம் ஆசிரியர் செல்வம், விக்கிப்பீடியா நக்கீரன், அரவிந்தன், பாமினி எழுத்துரு உருவாக்குநர் சசிஹரன், மருத்துவர் ஸ்ரீஹரன் எனப் பலரை முதன்முதலாகச் சந்திக்கமுடிந்தது. மயூரநாதன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பெயர் தெரியாத பலரும் முகம் மலர்ந்து வரவேற்பதில் ஒரு பேரன்பைக் காண முடிந்தது. கணித்தமிழ் வளர்ச்சி என்பது ஓர் இரவில் வந்ததல்ல, நீண்ட நெடிய வரலாறு உண்டு அந்த வளர்ச்சி இல்லாமல் <a href="http://dev.neechalkaran.com/">இத்தகைய கருவிகள்</a> சாத்தியமில்லை. ஏற்புரையில் இவ்விருதினைக் கணித்தமிழ் முன்னோடிகள் அனைவருக்கும் சமர்ப்பிக்கப்பட்டது. பேராசிரியர் மு.இளங்கோவனின் பாட்டுடன் சிறப்புரை, பிருந்தா பெக்கின் தமிழ்ப் பேச்சு, விக்கிப்பீடியர் சந்திப்பு, சம்பந்தம் ஐயாவின் பேச்சு, முத்துலிங்கம் ஐயாவின் நேர மேலாண்மை போன்றவை முத்தாய்ப்பாய் அமைந்தன. இரவு விருந்திற்கு திருமூர்த்தி குடும்பத்தினர், சம்பந்தம், மு.இளங்கோவனுடன் சிவன் இளங்கோ வீட்டிற்குச் செல்ல, அங்கோ திருமதி இளங்கோ தடபுடலாகச் சமைத்துவிட்டார். தொல்காப்பியம் முதல் நாட்டார் பாடல் வரை இரவு 12மணிவரை கதை பேசி, அத்தம்பதியினரால் வழியனுப்பி வைக்கப்பட்டனர்.<br />
<br />
மறுநாள் காலை ஹார்வர்ட் நிதி திரட்டல் நிகழ்வும் முக்கிய நபர்கள் பங்கேற்க சதன் அரோமாவில் சிறப்பாக நடந்தது. மயூரநாதன், செல்வி ரேணுகா மூர்த்தி உட்பட பலர் நிதிக் கொடை அளித்தனர். நண்பகல் பயணத்தில் தமிழ் வணிகர்கள் மட்டுமிருக்கும் வணிக வளாகங்களைக் காணமுடிந்தது. மண்பானை, புதுப்பட குறுந்தகடு, முக்கிய வார தமிழ் இதழ்கள் என ஏறக்குறைய தமிழகத்தில் கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் அங்குக் கிடைக்கின்றனவாம். இரவு அ.முத்துலிங்கம் வீட்டில் விருந்து காத்திருந்தது. அவரின் சில கதைகளைப் படித்திருந்தாலும் அவரைப் பற்றி அதிகம் தெரியாமல் போனதால் நெடிய உரையாடல்கள் அமையாமல் போனது. அந்த இலக்கியவாதிக்குள் ஒரு குழந்தை மனநிலையைக் காணமுடிந்தது. சில இலங்கை உணவுகளுக்கு அன்போடு அறிமுகம் கொடுத்தார். வீட்டெல்லாம் பலநாட்டுக் கலைப் பொருட்களை அடிக்கிருக்கிறார். சிலைகளைக் கடத்தியனுப்பும் தமிழகத்திலிருந்து வந்து பார்க்கையில் "யோக்கியன் வாரான் சொம்பைத் தூக்கி உள்ள வை" என்று அப்பொருட்கள் சொல்லியிருக்கலாம்.<br />
<br />
அடுத்தநாள் விவேகானந்தன் அவர்களுடன் சரவணபவன், அந்தவூர் டாஸ்மாக்(வேடிக்கை பார்க்க), வாகன நிலையம், விற்பனைக் கூடம் என மூலை முடுக்கெல்லாம் சுற்றிவிட்டு மாலையில் நண்பர் சிவா ரத்னசிங்கமுடன் நயாகரா நீர்வீழ்ச்சிக்குச் சென்றது அந்தப் பயணம். அதன் வழியில் திராட்சைத் தோட்டங்கள் உலகப் புகழ் பெற்ற கனடா ஒயின் தயாரிப்பிற்குப் பயன்படுகிறதாம். நெடுஞ்சாலையின் மேற்புறத்திலேயே போக்குவரத்து ஆலோசனைகளை மின்சாரப் பலகையில் சொல்லிவிடுகிறார்கள். வழியெல்லாம் தமிழக அரசியல், கனடா வாழ்வுமுறை பற்றி அதிகம் விவாதித்துக் கொண்டே பயணம் அமைந்தது. கனடா அமெரிக்க எல்லையில் அமைந்த அந்த நீர்வீழ்ச்சி மற்ற நீர்வீழ்ச்சி போல மலையிலிருந்து நீரைக் கொட்டாமல் தரையிலிருந்து பள்ளத்தாக்கில் நீரைக் கொட்டுகிறது. அந்த நீர் வீழ்ச்சியின் புகழுக்கான பெறுமானத்தை உணர முடிந்த வேளையில் 'மடை திறந்த வெள்ளம்' என்ற இலக்கிய உவமானத்தையும் புரிந்து கொள்ளமுடிந்தது. அன்றிரவு விவேகானந்தன் வீட்டிலேயே தங்க நேர்ந்தது. அவர் இலங்கை நெடுந்தீவைப் பூர்வீகமாகக் கொண்டவர்.<br />
<br />
வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் கவிதைகள் வாசிக்கும்போது வரும் ஒரு கற்பனை வீடுகளை அப்பகுதியில் குடியிருப்புகளாகக் காண முடிந்தது. வீட்டுக்கு ஒரு மரம் வாசலில் அபிநயம் செய்து கொண்டிருந்தது. நம்மவூர் அரசமரத்து அம்மன் போல அங்கு மேப்பிள் மரத்து அம்மன் அருள்பாலித்தார். டொரோண்டோ ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு விக்கிரகமும் தனித்தனி சந்நிதியில் ஒரே பெரிய கட்டடத்தின் உள்ளே அமைக்கப்பட்டிருந்தது. தேர், இராஜகோபுரம், தொட்டி வேப்பமரம், கனேடிய திராவிடக் கட்டடக் கலை கவர்ந்தன. அங்குக் கொடுத்த சாம்பார் சாதத்தை உண்டுவிட்டு விமான நிலையம் நோக்கி செல்ல நேர்ந்தது. கனடாவில் மலிவாக ஏதாவது கிடைத்தால் வாங்கிவர வீட்டிலிருந்து சொன்னார்கள் எனவே ஒரு கிலோ தக்காளி வாங்கி இருக்கலாமே என்று அன்றைய விலை நிலவரம் நினைவூட்டியது. இருந்தும் பொருட்கள் எதுவும் வாங்காமல் மக்களின் அன்பையும், அன்பளிப்பையும் வாங்கிக் கொண்டு செய்நன்றிக் கடனுடன் விமானத்தில் ஏற நேர்ந்தது. அந்த விமானம் சில மணிகளில் மேப்பிள் தேசத்து மேகங்களுக்கு மறையத் தொடங்கியது.</div>
Neechalkaranhttp://www.blogger.com/profile/01646862688378891745noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7988121523210741908.post-27904001774293703732016-03-26T01:06:00.000-07:002016-07-06T10:04:37.558-07:00செய்தியும் செப்புமொழியும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">அரசியல் கட்சியைப் பொறுத்தமட்டில் இரண்டே இரண்டு நிலைப்பாடுதான். ஒன்று ஆளும் கட்சி அடுத்தது அதன் எதிர்க் கட்சி. அதிகாரம் மாறினாலும் நிலைப்பாடு மாறாது. அதன் தொலைக்காட்சி செய்திப்பிரிவும் ஆளுங்கட்சியா எதிர்க்கட்சியா என்பதகேற்ப செய்திகளை அவரவர் கோணங்களில் வாசிக்கிறார்கள். ஒரே செய்தியை எப்படி அவர்களுக்குச் சாதகமாக வாசிக்கிறார்கள் என்பது தெரியாமல் மக்கள் குழம்பிவிடக் கூடாது என்பதற்காக இதோ ஒரு ஒப்பீட்டு.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvQuSWiMGsjByBhEb-JlEcZ_5D9PcGc6vh0Y9KZXjsYZZoNZlk1Eat9JelnQFe09lconkbdm8v7WyCIVn8FtlJVyumbYe9BRr0gLJBi3gXhz70Y3Xu7EsIoI9JLJVaTABEDSKcXRqWYwA/s1600/news+channel.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvQuSWiMGsjByBhEb-JlEcZ_5D9PcGc6vh0Y9KZXjsYZZoNZlk1Eat9JelnQFe09lconkbdm8v7WyCIVn8FtlJVyumbYe9BRr0gLJBi3gXhz70Y3Xu7EsIoI9JLJVaTABEDSKcXRqWYwA/s320/news+channel.png" /></a></div><a name='more'></a><br />
<table border="1"><tbody>
<tr><th>ஆளுங்கட்சி</th><th>எதிர்க்கட்சி</th>
<tr><td>கட்சிப் பொறுப்பிலிருந்து அமைச்சர் விடுவிப்பு</td><td>அமைச்சரின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது</td></tr>
<tr><td>மின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது</td><td>மின்கட்டணம் உயர்த்தப்பட்டது</td></tr>
<tr><td>பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்</td><td>கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர்</td></tr>
<tr><td>துக்கத்தால் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்</td><td>கலவரத்தால் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர் </td></tr>
<tr><td>தாமாக முன்வந்து வெலைநிறுத்தம் செய்தனர்</td><td>வேலைநிறுத்தம் செய்ய கட்டாயப்படுத்தினர்</td></tr>
<tr><td>பால் கொள்முதல் விலை உயர்ந்தது விவசாயிகள் மகிழ்ச்சி</td><td>பால் விலை உயர்ந்தது மக்கள் அவதி</td></tr>
<tr><td>சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு</td><td>பெட்ரோல் விலை அதிகரிப்பு</td></tr>
<tr><td>ஜாமீன் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது</td><td>ஜாமீன் வழங்க மறுப்பு கோரிய மனு தள்ளுபடி</td></tr>
<tr><td>எதிர்க்கட்சியினர் சூழ்ச்சியில் ஈடுபட்டனர்</td><td>ஆளுங்கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டனர்</td></tr>
<tr><td>சாலை மறியல் செய்தவர்களைக் காவல்துறை அப்புறப்படுத்தியது</td><td>மாணவர்கள் சாலை மறியல் செய்தனர்</td></tr>
<tr><td>வழக்கம் போல பேருந்துகள் இயங்கின</td><td>பலபகுதிகளில் பேருந்து இயங்கவில்லை</td></tr>
<tr><td>நகரெங்கும் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டது</td><td>நகரெங்கும் விளம்பரத் தட்டிகள் வைத்து இடையூறு</td></tr>
<tr><td>சாலையோர ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றம்</td><td>ஏழை மக்கள் விரட்டியடிப்பு</td></tr>
<tr><td>விழாவில் நலத்திட்டங்களை அமைச்சர் வழங்கினார்</td><td>நலத்திட்ட விழாவில் அமைச்சர் கலந்துகொண்டார்.</td></tr>
<tr><td>மர்மக் காய்ச்சலுக்குப் பாதிக்கப்பட்டவருக்குத் தீவிர சிகிச்சை</td><td>டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் அவசரப் பிரிவில் சேர்ப்பு</td></tr>
<tr><td>மூன்றாண்டுச் சிறை, பத்துக் கோடி அபதாரம் விதித்து தீர்ப்பு</td><td>வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்</td></tr>
</tr>
</tbody></table>2016 மார்ச் 26 <a href="http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/MADHURAI/2016/03/26/Article//102/26_03_2016_102_018.jpg" rel="nofollow">தினமலர் இதழுக்காக</a> எழுதியது</div>Neechalkaranhttp://www.blogger.com/profile/01646862688378891745noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7988121523210741908.post-64494103118194823932015-09-05T20:12:00.000-07:002015-09-05T20:29:17.412-07:00தோசைமணியும் போஸ்டர் சுவரும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அன்று காலை உணவு முடிந்தவுடன் காலை மடித்தமர்ந்து கொண்டு பல்குத்திக் கொண்டிருந்த சக சிறைவாசிகளிடம் தனது சோகக்கதையை சுகமாகச் சொல்லிக் கொண்டிருந்தார் தோசைமணி. அதுவொரு தேர்தல் காலம் தெருவிற்குத் தெரு பிரச்சாரங்கள் சூடு பிடிக்க, தனது துண்டு பீடியில் சூடுவைத்துக் கொண்டு களத்தில் இறங்கினார் தலைவர் சுருளி. சுருளி வாழ்க! சுருளி வாழ்க! என்று கத்திக் கொண்டு தலைவருடன் வேட்புமணு தாக்கல் செய்யப்போனவர்களில் ஒருவர் தான் தோசைமணி. வேட்புமணுவைத் தாக்கல் செய்தவுடன் பிரச்சாரப் பொறுப்பை ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளித்தார் சுருளி. ஆனால் பணமுமளித்தால்தான் பொறுப்பை ஏற்போம் என்று அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் போஸ்டர் ஒட்டும் பொறுப்பை நான் எடுத்துக்கிறேன் தலைவரே என்று தானாகமுன்வந்து வாய்ப்பை வாங்கினார் தோசைமணி. முன்பணம் கொடுக்க சில்லறையில்லையே என்று தலைவர் சொன்னபோது "முன்பணமா முக்கியம் நீங்கள் உங்கள் வாழ்க்கையையே அர்ப்பணம் செய்தவர்" என்று ஜால்ரா போட்டு வேலையைப் பிடித்தார். காரணம் இருமாதங்களாக தனது பிரஸ் ஹவுஸ் என்று சொல்லிக்கொள்ளும் அச்சகத்தில் வேலையில்லாததால் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார் தோசைமணி.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeVHlKu3LLRyewcI-CJ76dKcc5y3nCEMeaZzncu-1R2Jaigtnri67l0ja_DmV8K31GP4p_SETOzb9peOWjyAddSLk_KZ7QTn0sC6waa6QzV2_rVtiWBeP5Sjq-BoSN0YR3y40pqGu6yzg/s1600/cine+poster.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="321" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeVHlKu3LLRyewcI-CJ76dKcc5y3nCEMeaZzncu-1R2Jaigtnri67l0ja_DmV8K31GP4p_SETOzb9peOWjyAddSLk_KZ7QTn0sC6waa6QzV2_rVtiWBeP5Sjq-BoSN0YR3y40pqGu6yzg/s400/cine+poster.JPG" width="400" /></a></div>
<a name='more'></a><br />
போஸ்டர் தயாரிக்கும் முன்னரே இடம் பிடிக்க வேண்டுமென்ற தொழில்தர்மத்தின்படி தனது படையுடன் தெருத்தெருவாகச் சென்று அனைத்துச் சுவர்களிலும் இடம் போடப் புறப்பிட்டார். நோட்டீஸ் ஒட்டாதே என்று எழுதிய சுவர்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தன. "ரிசர்வ்ட் பார்" என்று எழுதிக் கொண்டிருந்த போது ஒரு சுவர் இடிந்தும் விழுந்தது என்பது தனிக்கதை அடுத்தநாள் செய்தித்தாளைப்பார்க்கவும். "குட்டிச்சுவராகப் போ" என்று பலரைத் திட்டியபோது கூடக் கவலைப்படாதவர் இன்று ஊரில் ஒரு குட்டிச் சுவரும் கிடைக்காமல் அல்லல்பட்டார். கடைசியாகக் கிடைத்த ஒரு சுவரில் "ரிசர்வ் பார் .." என்று எழுதிக்கொண்டிருக்கும் போது அதன் மீது ஆளுங்கட்சி கோஷ்டிகள் ஒரு பெரிய போஸ்டரை ஒட்டிவிட்டது. பெரிய இடம், வம்பு வேண்டாம் என்று தியாகச் செம்மலாக விட்டுக் கொடுத்து நடந்தார்கள். ஒரு இட்லிக் கடை ஓரத்தில் ஒரு சுவர் தென்பட்டது, அங்குச் சென்றுபார்த்தால் அது மூத்திரச் சந்து. எதிரே ஒரு காலியான சுவர் கண்ணில் பட்டது. ஆனால் வேலி போட்டிருந்தது. உங்கள் பேஸ்டில் உப்பிருக்கா என்பது போல வீட்டுச் சுவரில் எழுதிக்கவா என்று வீடுவீடாகக் கேட்டும் பார்த்தார். படித்துமுடித்தவுடன் வெளிநாட்டில் வேலை என்று சொல்லும் கல்லூரி போல எங்கள் தலைவர் வெற்றிப்பெற்றால் வெளிநாட்டில் வேலைவாங்கித்தருவார் என்று சொல்லியும் பார்த்தார் சுவர் கிடைக்கவில்லை.<br />
<br />
"அப்ப ஒரு இடமும் கிடைக்காதா? கொடுத்த வாக்கைக் காப்பாற்றமுடியாதா?" என்று பக்கத்திலிருந்தவர் கொளுத்திப்போட, மீண்டும் இடம் பிடிக்க எழுத்த தோசைமணியிடம் "இடம்தானே வேண்டும் சென்னைக்கு மிக அருகில் செங்கல்பட்டிலிருந்து 10 கிலோமீட்டரில் தேசியநெடுஞ்சாலை அருகே ஒரு இடம் இருக்கு வேணுமா" என்றார் ஒரு திடீர் ஆசாமி. பின்னாலே வந்தவர்கள் அந்த ஆசாமியைப் பிடித்திழுத்துக் கொண்டு மருத்துவமனைக்குள் நுழைந்தார்கள். அம்மருத்துவமனைச் சுவரைப் பார்த்தது மகிழ்ச்சியில் பிரஸை எடுக்கப்போனார் தோசைமணி. "இது மனநலமருத்துவமனை இங்கு "ரிசர்வ்ட்" என்று எழுதினால் வேறு பொருள் வேறு இடம் பார்ப்போம்" என்று பக்குவப்படுத்தினார் ஒரு கூட்டாளி. சுவரே தெரியாத அளவிற்குக்கூட்டமாக ஒரு இடமிருந்தது, "ரிசர்வ்ட்" என்று எழுதப் போகிறேன் என்றவுடன் கூட்டமே சேர்ந்து அடிக்கவந்தது. இது எதிர்க்கட்சிக் கோஷ்டியோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, யாராக இருந்தாலும் ரிசர்வேசன் கிடையாது கடைதிறக்கும் முன்னே க்யூவில் நிற்கிறோம் என்றார் ஒரு டாஸ்மாக் பக்தர்.<br />
<br />
இடம் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்த நேரம் திருடர்கள் என நினைத்துத் தெருநாய்கள் கூட குலைத்தன. குலைக்கும் நாய் மீதே போஸ்டரை ஒட்டிவிடுவோம் என்று நாய் மீது ரிசர்வ்ட் பார் சுருளி என்று எழுதத் துணிந்தார். ஆனால் அந்த நாயோ நாலுகால் பாய்ச்சலில் தப்பிவிட்டது. இருக்கவே இருக்கிறது கழுதைகள் என்று மூன்று கழுதைகளைப் பிடித்து எழுதத் தொடங்கும் போது அக்கழுதை விட்ட உதையில் கொண்டுவந்த சாயங்கள் சிந்திவிட்டன. ஒரு பசுமாடும் கன்றுக்குட்டியும் கிடைத்தன பிரச்சினை இல்லாத ஜீவன்கள் இதுதான் என்று முடிவு செய்து கன்றுகுட்டி முதுகில் எஞ்சிய சாயத்தைக் கொண்டு "ரிசர்வ்ட் பார் சுருளி" என்று வெற்றிகரமாக எழுதினார். கூடுதல் சாயம் எடுத்துவர ஆளனுப்பினார் இதற்கிடையில் கன்றுக்குட்டியை நக்கியே அம்மாடு சுத்தப்படுத்திவிட்டது. சுதாரித்துக் கொண்ட சூடாமணியான தோசைமணி போஸ்டருக்கு இடம்பிடிக்க மாற்றுவழிகளைத் தேட ஆயுத்தமானார். பேருந்துகளில் ஒட்டலாம் என்று ஒருவர் யோசனை சொன்னார். ஆனால் பேருந்திற்குள்ளே ஒட்டுவதா வெளியே ஒட்டுவதா என்று குழம்பிக் கடைசியில் படியில் ஒட்டிவோம் என்று ஒருமனதாக முடிவுசெய்தனர். <br />
<br />
தனது படைகளுடன் பழக்கத்தோசத்தில் ஓடும் பேருந்தின் படியில் ஏறி எழுதிக்கொண்டிருந்த போது நடத்துநர் வாய்தவறி விசில் அடிக்க, ஓட்டுநர் கால்தவறி பிரேக் பிடிக்க, தோசைமணி தனது குழுவினருடன் கைதவறி ரோட்டில் விழுந்துவிட்டார். விழுந்தவுடன் சமாளித்துக் கொண்டு ரோட்டில் எழுதத்தொடங்கினார். ரிசர்வ்ட் பார்.. என்று எழுதிக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த தண்ணீர் லாரி நிலைதடுமாறி தண்ணீரைக் கொட்டி, தோசைமணியின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. விடாமுயற்சியின் மறுபெயரான தோசைமணியில் அடுத்த முயற்சி ரயில் என்று முடிவானது, ஆனால் ரயிலில் ஏற்கனவே யாரோ ரிசர்வ்ட் என்று எழுதியிருப்பதை அறிந்து அரசியல் நாகரீகத்தை மனத்தில் வைத்து ரயிலில் எழுதவேண்டாம் என்று தீர்மானித்தார். இந்நாட்டில் போஸ்டர் ஒட்டக்கூட இடமில்லை என்று நொந்துகொண்டு சீனப் பெருஞ்சுவர் அருகே அடுத்த ஜென்மத்தில் பிறக்கவேண்டும் என்று கம்யூனிசம் பேசினார். தனது எழுத்துச் சுதந்திரத்தை யார் பறிப்பார்கள் என்று வெறிகொண்டு வீதிக்கு வந்தார். அகலமான இடமொன்று தெரிந்தவுடன் உடனே வேகமாக எழுதிவிட்டார் தோசைமணி. ஒரு போஸ்டரையாவது ஒட்டுவதற்கு இடம்கிடைத்த மகிழ்ச்சியில் உற்றுப்பார்த்தால் அது ஒரு போலீஸ்காரரின் முதுகு. கூடவந்த சகாக்கள் எல்லாம் ஜகா வாங்க, பணத்தை எண்ணவேண்டிய கையால் கம்பியை எண்ணநேர்ந்தது என்று தனது சிறைக்கைதிகளிடன் ஃபிளாஸ் பேக்கை முடித்தார் தோசைமணி.<br />
<br />
<a href="http://puthu.thinnai.com/?p=29294">திண்ணை </a>இதழுக்காக எழுதிய பதிவு</div>
Neechalkaranhttp://www.blogger.com/profile/01646862688378891745noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7988121523210741908.post-77462233979236764722014-12-27T11:01:00.000-08:002018-03-05T11:03:42.163-08:00ஓலைச்சுவடி - நூல் விமர்சனம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; font-size: 14px; margin-bottom: 10px;">கடவுள் மறுப்பாளர் நேரு தனது மறைவிற்குப் பிறகு அஸ்தியை இந்திய விவசாய மண்ணில் தூவ விரும்பிய போதும் அதில் ஒரு பகுதியை கங்கையில் கரைக்கவே விரும்பினார். இதை மதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு விருப்பமாகவே முன்வைத்தார். ஒரு சம்பிரதாயம் பிறருக்குத் தொந்தரவு தராமல் தன் மனதிற்குப் பிடித்திருந்தால் அது மூடநம்பிக்கையாகவே இருந்தாலும் செய்வதில் தவறில்லை. பெரியவர் கலைஞரின் மஞ்சள் துண்டாகட்டும், தலைவர் வைகோவின் கறுப்புத் துண்டாகட்டும், இராஜபட்சேவின் சிவப்புத் துண்டாகட்டும் அறிவியல் கடந்து சில நம்பிக்கைகள் எல்லாருக்கும் உண்டு என்பதை மெய்ப்பிக்கிறது. பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் மரபணு அறிவியல் எல்லாம் பிள்ளையார் காலத்திலேயே இருந்தது என்று சமீபத்தில் பிரதமர் மோடி சொன்னார். அது உண்மையா பொய்யா என்று ஆராயாமல் அதை நம்பிக்கையாகக் கொண்டு புதுமுனைப்புடன் யாரேனும் முயலும்போது நன்மையே கிடைக்கிறது.</div><div style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; font-size: 14px; margin-bottom: 10px;"><img alt="" class="alignnone aligncenter" height="300" src="https://www.nhm.in/shop/images/P/100-00-0001-539-0_b-01.jpg" style="border: 4px solid rgb(238, 238, 238); box-sizing: border-box; display: block; height: auto; margin: 3px auto 10px; max-width: 100%; vertical-align: middle;" width="194" /><br />
<br />
<a name='more'></a><br />
</div><div style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; font-size: 14px; margin-bottom: 10px; text-align: center;"><a href="http://www.nhm.in/shop/100-00-0001-539-0.html" target="_blank" style="color: #0c5390; text-decoration-line: none;">ஓலைச்சுவடி, வெங்கானூர் பாலகிருஷ்ணன், அடோன் பப்ளிஷிங் குரூப், ரூ. 240</a></div><div style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; font-size: 14px; margin-bottom: 10px;">ஆனால் நம்பிக்கைகளைக் கண்மூடிக் கொண்டு எல்லா நேரங்களிலும் பின்பற்றுவதால் யாருக்கும் லாபமில்லாமல் போகும். கிழக்கேதான் தலைவைத்துப் படுப்பேன் என்று வடக்கும் தெற்கும் கொண்டுள்ள ரயில் இருக்கையில் முரண்டு பிடிக்கமுடியாதே. அதே நேரத்தில் வடக்கே உள்ள காந்தப்புலன் பற்றிய விவரம் தெரியுமேயானால் தெற்கில் தலைவைத்துப் படுக்கலாம். இப்படி பல விசயங்கள் ஏன் செய்கிறோம் என்று தெரியாமல் பல சந்தர்ப்பங்களில் தவிப்பவர்களுக்காக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதே இந்த ஓலைச்சுவடி என்ற நூல்.<span id="more-361"></span></div><div style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; font-size: 14px; margin-bottom: 10px;">தாளியோலை என்ற மலையாள மூல நூலைத் தழுவி எழுதப்பட்டுள்ள இதில் இந்து மதச் சம்பிரதாயங்களும் அதன் காரணங்களும், தியான மந்திரங்களும், மதக் குறியீடுகளும் அதன் காரணங்களும் கொண்டுள்ளது. அடுக்கடுக்காக இருநூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளும் அவற்றுக்கு ஆசிரியரின் விளக்கத்தையும் கொண்டுள்ளது. நூலில் கடைசிப் பக்கங்களில் இருக்கும் மந்திரங்கள் அதன் பயிற்சி பெற்றவர்களுக்கு உதவக்கூடும். மொழிநடையில் ஸ்ரீகோவில், விசுவாசம், அக்னிக் கோண் என்று சில வழக்கில்லாத சொற்களுக்கு மாற்றாக திருக்கோவில், நம்பிக்கை, அக்னிமூலை என்று பயன்படுத்தியிருந்தால் மூலக் கருத்தை உடனே புரியவைத்திருக்கும்.</div><div style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; font-size: 14px; margin-bottom: 10px;">தங்கக் கொலுசு, பாம்புக் கடி மருத்துவம் போன்ற சில ஆசாரங்கள் புதியதாக இருந்தாலும் காரணங்கள் சுவாரசியமாக இருக்கின்றன.</div><div style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; font-size: 14px; margin-bottom: 10px;">சோளக்காட்டு பொம்மையின் தேவையைப் புரிந்துகொள்ளும்போது வீட்டில் தொங்கவிடும் அகோர உருவங்களின் தேவை நம்மை கேள்வி கேட்கிறது. மாவிலைத் தோரணம், வெறும் காலில் நடத்தல், திலகமிடுதல், கோபத்தைக் குறைத்தல், பிரம்ம முகூர்த்தத்தில் எழுதல் எனச் சில தவற விடும் பழக்கங்களை மீண்டும் செய்யத் தூண்டுகிறது. காலாட்டுதல், ஆடிமாத திருமணம் போன்ற விசயங்களில் தவிர்க்கவும் தூண்டுகிறது. சில சம்பிரதாயங்கள் வேடிக்கையாகச் சொல்லும் பல பழமொழிகளில் ஒளிந்திருப்பது இதைப் படிக்கும்போது மனதில் தோன்றிவிடுகிறது.</div><div style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; font-size: 14px; margin-bottom: 10px;">பல விசயங்கள் இதில் சமய ஆசாரமாகச் சொல்லப்பட்டாலும் அவை உண்மையில் பண்பாட்டுக் கூறுகள் என்பதை மறுக்க முடியாது. அவை சமயம் தாண்டியும் கடைப்பிடிக்கப்பட்டும் வருகிறது. அறிவியல் பூர்வமாகவும் சில பழக்கங்கள் விளக்கப்பட்டுள்ளது நம்மை சிந்திக்கவைக்கிறது. இதை முழுதும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லைதான். ஆனால் காரணங்களை அறிந்து கொள்வதால் ஏதோவொரு வகையில் அந்த மூலத் தத்துவம் நம்மில் குடிகொள்ளலாம்.</div><div style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; font-size: 14px; margin-bottom: 10px;">தோப்புக்கரணம், துளசி தீர்த்தம், சூரிய நமஸ்காரம் போன்ற பல செயல்களின் அறிவியல் நமக்கே தெரிந்திருப்பதால் கூடுதலாகவே அறிவியல் விளக்கங்களைக் கொடுத்திருக்கலாம். சில இடங்களில் ‘தற்கால அறிவியல் இதை நிரூபித்துள்ளது’ என்று தெளிவாகக் கூறாமல் கூர்மையற்றும் இருக்கின்றன. எல்லாம் அறிவியல் மயம் என்று கொடுத்துவிட்டால் பக்திமனம் கமழாது என்று விட்டனரோ என்று தோன்றுகிறது.</div><div style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; font-size: 14px; margin-bottom: 10px;">முட்டை கொண்டு போகும் எறும்பு, முதல் மொட்டை எடுக்க வேண்டிய மாதம், குழந்தைகளுக்கு முன் கண்ணாடி காட்டாதல் போன்ற பழக்கங்கள் பொருள் கொண்டதாகவே நமக்கு உணர்த்துகின்றது. வாஸ்து அறிவியல், இயற்கை நேசிப்பு, மருத்துவப் பலன்கள் போன்ற தகவல்கள் வெவ்வேறு சம்பிரதாயங்களுள் இருப்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். சில தேவையற்ற கேள்விகளும் பதில்களும் தவிர்த்து மற்ற தகவல்கள் இரண்டு விசயங்களை உணர்த்துகின்றன. ஒன்று, முன்னோர்களின் ஆழமான அனுபவங்கள், மற்றொன்று இன்றைக்கு இழந்த நல்ல பழக்கவழக்கங்கள். வேண்டியதை கழித்து விரும்பியதை வளைத்து, முக்கியமானதை எடுத்துக் கொண்டால் பயனளிக்கக்கூடிய புத்தகம்.</div><div style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; font-size: 14px; margin-bottom: 10px;">சகுனம், நம்பிக்கை, வழக்கம் தொடர்பாக பலரின் பலநாள் கேள்விகளுக்கு இதில் பதில் உண்டு. பிற்போக்கான நம்பிக்கை என்று சொல்லப்படும் நம்பிக்கையின் சாரம் அறியும்போது அதை வேறுவகையில் எடுத்துக் கொள்ளவோ, கைவிடவோ இந்நூல் உதவும்.</div><div style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; font-size: 14px; margin-bottom: 10px;">வெளியே கிளம்பும்போது பேரக்குழந்தையிடம் முத்தம் வாங்கிக் கொள்வதும், மனைவியிடம் தண்ணீர் வாங்கிக் கொள்வதும் பெருவுவகை என்றால் அதை எப்படி ஒரு நல்ல சகுனமாகக் கொள்கிறோமோ அதுபோல காலத்திற்கு ஏற்ற நம்பிக்கைகளைப் பொருள் புரிந்து கடைப்பிடிக்கலாம். எதிரே ஒருவர் தும்மும்போது எப்படி நல்ல ஆசி வழங்கும் பழக்கத்தைத் தொடர்கிறோமோ அதுபோல தீட்டு, அபசகுனம் என்று பிறர் மனம் புண்படும் பழக்கங்களின் உண்மையறிந்து தவிர்க்கவும் வேண்டும். இதைப் படித்த பிறகு பண்பாட்டு மீதான தேடுதல் தொடங்குமேயானால் அதுவே இப்புத்தகத்தின் வெற்றி.</div><div style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; font-size: 14px; margin-bottom: 10px;"><br />
</div><div style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; font-size: 14px; margin-bottom: 10px;">ஆன்லைனில் வாங்க: <a href="http://www.nhm.in/shop/100-00-0001-539-0.html" style="color: #0c5390; text-decoration-line: none;">www.nhm.in/shop/100-00-0001-539-0.html</a></div><div style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; font-size: 14px; margin-bottom: 10px;">ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234</div></div>Neechalkaranhttp://www.blogger.com/profile/01646862688378891745noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7988121523210741908.post-37093750349689633472014-11-27T11:04:00.000-08:002018-03-05T11:05:42.290-08:00தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி - நூல் விமர்சனம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; font-size: 14px; margin-bottom: 10px;">
புளி சோறும் பருப்புத் துவையலும் கட்டிக் கொண்டு ரயில் பயணங்களில் செல்வது என்பது பலருக்குப் பிடித்த பால்யகால அனுபவம். அப்போது அப்பா வாங்கித் தந்த மிளகாய் இல்லாத ஆமை வடையை ரயிலைவிட அதிகமாக ரசித்திருப்போம். டூருக்கு கிளம்பினாலேயே அம்மாவைப் பொறுத்தமட்டில் எல்லா உணவுப் பண்டங்களையும், தண்ணீர் புட்டிகளையும் பைகளுக்குள் திணித்தாலேயே பாதி வெற்றி அடைந்த மாதிரிதான். அதில் தின்பண்டப் பையைப் பாதுகாக்கும் பொறுப்பை நாமே குத்தகைக்கு எடுத்திருப்போம். இப்படி எல்லை இல்லாத ஆனந்தத்தைக் கொடுப்பது சுற்றுலா. கையைக் கடிக்கும் பெட்ரோல் விலை (இதை எழுதிக் கொண்டிருக்கும் மணிவரை) ஒருபுறம், கழுத்தைப் பிடிக்கும் விடுதிகளின் வாடகை ஒருபுறம், சுங்கச் சாவடிகளின் இருபத்து நான்குமணிநேர வாங்கும் சேவை ஒருபுறம், பயணிகளைப் படிவரை நிரப்பி வழிவழிய ஓடும் ரயில் சேவை ஒருபுறம் எனப் பல பிரயத்தனங்களுக்கு ஈடுகொடுத்து சென்று வரும் பயணங்களுக்குத் திட்டமிடல் என்பது மிகவும் அவசியம்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; font-size: 14px; margin-bottom: 10px; text-align: center;">
<img alt="" class="alignnone" height="300" src="https://www.nhm.in/img/978-81-8493-552-3_B.jpg" style="border: 4px solid rgb(238, 238, 238); box-sizing: border-box; height: auto; max-width: 100%; vertical-align: middle;" width="192" /><br /><a href="https://www.nhm.in/shop/978-81-8493-552-3.html" style="color: #0c5390; text-decoration-line: none;">தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி, தமிழ் சுஜாதா, கிழக்கு பதிப்பகம், ரூ 175</a></div>
<div style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; font-size: 14px; margin-bottom: 10px;">
அவ்வகையில் நண்பர்களிடம் ஆலோசனை கேட்கலாம், இணையத்தில் அலசிப் பார்க்கலாம், ஆனால் வீட்டில் உள்ள அனைவரும் கூடி விவாதிக்க சிறந்த வழிகாட்டி ஒரு புத்தகமாக இருக்கும். தேக்கடிக்கு செல்லும் போது பார்த்திருக்கும் ஒரு பறவையின் பெயர் தெரியாமல் வந்திருப்போம், அல்லது குற்றாலத்தில் குளித்தவுடன் சூடான பஜ்ஜியைத் தவற விட்டிருப்போம், அல்லது அறிவியலைப் பற்றி குழந்தைகளிடம் பேசிவந்திருப்போம் ஆனால் கோளரங்கிற்குச் சென்றிருக்க மாட்டோம் இப்படி தவறவிட்ட பல இனிய விஷயங்களைச் சுட்டிக் காட்டி மாநிலத்தில் உள்ள சிறந்த தலங்களை அறியத்தருகின்றது இந்த வழிகாட்டி புத்தகம். ஏராளமான சரணாலயங்கள், மலை வாசஸ்தலங்கள், அணைக்கட்டுகள், நீர்வீழ்ச்சிகள், சதுப்பு நிலங்கள் என குளிர்ச்சியான இடங்களைக் கண்முன்னே கொண்டுவருன்றது.<span id="more-264"></span></div>
<div style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; font-size: 14px; margin-bottom: 10px;">
தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி என்ற பெயரில் 100 இடங்களின் தூரம், தங்குமிடம், பயணப்பாதை என்று குறிப்பிட்டு ஒரு சுற்றுலா கையேடாகவுள்ளது இப்புத்தகம். “கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது” என்ற பாடல் படமாக்கப்பட்ட இடம் இதுதான் என்பது போன்ற பல உபரித் தகவலோடும், முக்கிய கோவில்களும் அதன் பிரசித்தி பெற்ற அம்சங்களையும் குறிப்பிடுவதாலும், அருகருகே இருக்கும் இடங்களைப் பற்றிக் குறிப்பிடுவதாலும் பயணவழிகாட்டி என்பதோடு பயண ஊக்கப்படுத்தியாகவும் இப்புத்தகம் இருக்கிறது. விசா இல்லாமல் ஏராளமான வெளிநாட்டினர் வந்து முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துச் செல்லும் இடங்கள் மற்றும் பயமில்லாமல் பார்வையாளர்களின் தின்பண்டங்களை முரட்டுத் தனமாக எடுத்துச்செல்லும் மான்கள் கொண்ட பூங்காக்கள் நம்மை அவ்விடத்திற்குக் கற்பனையில் அழைத்துச் செல்கின்றது.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; font-size: 14px; margin-bottom: 10px;">
திருமயம், புளியஞ்சோலை , திருமலை, கொடிவேரி அணை, திற்பரப்பு அருவி, சிதறால் மலை, முக்கொம்பு, குருசடை தீவுகள் போன்ற அறியப்படாத இடங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. கோவில், தேவாலயம், மசூதி இம்மூன்றும் கொண்ட கோட்டை; சில்வர் பீச், சில்வர் பால்ஸ் போன்ற துணுக்குத் தகவல்கள் பரவலாக உள்ளன. பரம்பிக்குளம் வனம், வேடந்தாங்கல் போன்ற இடங்கள் பற்றி ஆழமாகவும் அதிகமாவும் சொல்லும் இப்புத்தகம், இராமேஸ்வரம், மதுரை போன்ற இடங்களில் அதிகமாக விவரித்திருக்கலாம். கோதண்டராமர் கோவில், ராமர் பாதம் லஷ்மணத் தீர்த்தம், திருப்பரங்குன்றம், காந்தி அருங்காட்சியகம் போன்றவை விடுபட்டுவிட்டன.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; font-size: 14px; margin-bottom: 10px;">
என்ன சாப்பிடலாம், அதுவும் அப்படி சாப்பிடலாம் என்பதுவரை கூறுகிறது; எந்த நிறச் சட்டை போட்டுச் செல்வது நல்லது என்றெல்லாம் கூறி ரசிக்கவைக்கிறது. வழிகாட்டியின் முக்கிய அம்சமான வரைபடம் இப்புத்தகத்தில் உள்ளது ஆனால் இடங்கள் குறிக்கப்படாமல் மாவட்ட வரைபடத்தை மட்டும் கொண்டுள்ளது. ஒரே மாதிரியான வர்ணனைகளைத் தவிர்த்து ஒரு பட்டியலில் தூரம், உகந்த காலம், போன்றவை இட்டிருந்தால் படிக்கையில் ஏற்படும் அலுப்பைத் தவிர்த்திருக்கலாம். இருந்தும் பயணக் கையேடு என்பதால் வைத்து வைத்துதானே படிப்போம் என்று விட்டுவிடலாம். படித்த பிறகு நீங்கள் சுற்றுலா செல்ல தீர்மானித்தாலோ, அல்லது சுற்றுலா செல்லும் பொழுது இப்புத்தகக் குறிப்புகள் நினைவில் வந்தாலோ அதுவே இப்புத்தகத்தின் வெற்றி.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; font-size: 14px; margin-bottom: 10px;">
ஆசிரியரின் பாணியில் சொல்வதென்றால்</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; font-size: 14px; margin-bottom: 10px;">
<span style="font-weight: 700;">எதற்குப் படிக்க வேண்டும்?</span><br />தமிழ்நாட்டில் உள்ள முக்கிய மலைப்பகுதிகளையும், கடல்பகுதிகளையும், புராதானச் சின்னங்களையும் பூங்காக்களையும் அறிந்து கொள்ள இதைப் படிக்க வேண்டும்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; font-size: 14px; margin-bottom: 10px;">
<span style="font-weight: 700;">படிப்பதற்குச் சிறந்த இடங்கள் எவை?</span><br />ரயில், பேருந்து பயணங்களில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து படிப்பது சுவாரசியமானது. சுற்றுலா செல்லும் முன் படிப்பது பயணத்திற்கு உதவிகரமானது.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; font-size: 14px; margin-bottom: 10px;">
<span style="font-weight: 700;">இதர பயன்கள் என்ன?</span><br />சுற்றுலா கையேடு என்பதால் பரிசாகக் கொடுக்கவும், நினைவுகளைக் கோதிவிடவும் சிறந்த புத்தகம்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Tahoma, sans-serif; font-size: 14px; margin-bottom: 10px;">
<span style="font-weight: 700;">எங்கே வாங்கலாம்?</span><br />கிழக்கு பதிப்பகம் https://www.nhm.in/shop/978-81-8493-552-3.html</div>
</div>
Neechalkaranhttp://www.blogger.com/profile/01646862688378891745noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7988121523210741908.post-45803931370055355762014-03-08T21:38:00.000-08:002015-09-21T18:04:58.035-07:00தோசைமணியும் எலெக்சனும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">காந்தாமணி இராகத்தில் பாடல் கேட்டுக் கொண்டிருக்கும் போது நண்பர் தோசைமணியின் செல்பேசியில் கவுண்டமணி குரலில் "அரசியலில் இதெல்லாம் சாதாரணம்பா" என்று அழைப்பு மணி சிணுங்கத் தொடங்கியது. அவசர அவசரமாக செல்பேசியை எடுத்து "இன்னைக்கு எலெக்சனு அதனால நாளைக்கு வாரேன் அண்ணாச்சி" என்று பவ்யமாகத் தனது தோசைக் கடை முதலாளியிடம் சொன்னார். "தம்பி ஒரு ஓட்டு இல்லாட்டி எலெக்சன் கெட்டுப்போகாது, தோசை மாஸ்டர் இல்லாமல் வியாபாரம் கெட்டுப்போயிரும்" என்றார் முதலாளி. "அண்ணாச்சி, எலெக்சனே என்னை நம்பித்தான் நடக்குது" என்று மூன்று மாத ரகசியத்தைப் பட்டென்று போட்டுடைத்தார் வர முடியாது என்று கெஞ்சினார். சிறிதும் எதிர்பாராத பதிலால் இன்னும் விளக்கமாகச் சொல்லச் சொன்னார் முதலாளி. எப்பவுமே சஸ்பென்சைக் காப்பத்துவதுதான் கெத்து என்று ஏதோ படத்தில் பார்த்த நியாபகத்தில் சஸ்பென்சை உடைக்க மாட்டேன் என்று மௌனம் சாதித்தார் தோசை மணி.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIPPhIZyOjej-rRc-wZgZH2ey55jbjEI_35p87bKwYkpT1biQ1K0dNm2JBgT_fIpzBTuCiR5YaTAfx1ykMhD4k6ghTQnGjjfqqEW7uT4TkXhVkSRHO9c2KJA-WQJ7WnG1pLRhA6V6svGk/s1600/election+ballot.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIPPhIZyOjej-rRc-wZgZH2ey55jbjEI_35p87bKwYkpT1biQ1K0dNm2JBgT_fIpzBTuCiR5YaTAfx1ykMhD4k6ghTQnGjjfqqEW7uT4TkXhVkSRHO9c2KJA-WQJ7WnG1pLRhA6V6svGk/s320/election+ballot.png" /></a></div><a name='more'></a><br />
பயபுள்ள கவுசிலர் எலெக்சனின் நிற்கப்போகுது போல என்று மட்டும் முதலாளிக்குப் புரியத்தொடங்கியது. அதுசரி "உங்க அப்பா யாருக்கு ஓட்டுப் போடப் போறாரு?" என்று வினாவினார். "அவரு எப்பவுமே பெரிய கட்சிக்குத் தான் ஒட்டு போடுவாராம். கண்டிசன் நம்பர் ஒன், அந்தக் கட்சித் தலைவருக்கு அதிகத் தொண்டர்கள் இருக்கணும், அவரு காருக்குப் பின்னாடி எட்டு காராவது போகணும், அடிக்கடி அறிக்கை விடனும். கண்டிசன் நம்பர் டு, தமிழ்ப் பற்று பத்தி பேசனும், தமிழ் மக்கள் என் உயிருனு பேசனும், தமிழ் வாழ்கனு சொல்லனும். இதுதான் இவர் பாலிசி" என்றார் தோசை மணி. எப்படியோ இவன் குடும்பத்திலிருந்து ஒரு ஓட்டு இவனுக்கில்லை என்று கலக்காத சாம்பாரின் அடியிலிருந்து பருப்பை எடுப்பது போல அக மகிழ்ந்து போனார் முதலாளி. "சூப்பர்! சூப்பர்! நல்ல தேர்வு அடுத்து உங்க அம்மாவும் அதுமாதிரிதான் ஓட்டு போடப் போறங்களா?" என்றார். "அவுங்களப் பொருத்த மட்டில் பக்கத்து வீட்டு காசியம்மாள் யாருக்கு ஓட்டு போடுறாங்களோ அவங்களுக்குத் தான் இவங்களும் போடுவாங்க. அதுமாதிரி யாராது தெரிஞ்சவுங்க, அறிஞ்சவுங்க, பேசுனவுங்க, சொந்தக்காரவுங்கனு இருந்தால் அவங்களுக்கும் ஓட்டு போடுவாங்க" என்று சொல்லிக் கொண்டே "கொஞ்சமிருங்க பூத்தில இருந்து குமாரு கூப்பிடுறாரு" என்று இரு நிமிடங்கள் உரையாடலை நிலுவையில் இட்டார் தோசை மணி. அதைக் கேட்டமாத்திரத்தில் கலக்காத சாம்பாரை மேல்புறமாக எடுத்து ஊத்தியது போல கவலை கொண்டார் முதலாளி. அடிக்கடி அடுப்பு சரியில்லைன்னு லீவு போட்டு இவன் எலெக்சன் வேலைய நல்லப் பார்த்திருக்கான் போல மனதிற்குள் பொரிந்து கொண்டார்.<br />
<br />
"நான் தான் முகேஷ் பேசுறேன்.." என்று வரும் கேன்சர் விளம்பரம் போல சிறு நேரத்தில் "நான்தான் மணி பேசுறேன்" என்று அலைப்பேசி உரையாடலுக்குள் வந்தார் தோசைமணி. "அதுசரி உங்க அண்ணே கடலைமணியாவது நீ சொல்ற ஆளுக்கு ஓட்டு போடுவாரா?" என்று போட்டு வாங்க முயல்கிறார் முதலாளி. "அவன் ஒரு ஆகாதவன் முதலாளி, அவனுக்கு காரியம் ஆகுறமாதிரி இருக்கிறவுங்களுக்குத்தான் ஓட்டுப் போடுவான். போன வருசம் ரோடு போட்ட எம்.எல்.ஏ. மாடசாமி தான் குலசாமினு சொல்வான், ஆனால் போன வருசக் கடைசியில ரேசன் அரிசி சரியில்லைன்னு அவரையே திட்டுவான். போன மாசம் இலவச டீவி கொடுத்த அமைச்சரை ஓகோனு சொன்னான், ஆனால் கரண்ட இல்லன்னு இப்ப திட்டுறான். இந்த ஏலேக்சனுல காசு கொடுத்தா அவுங்களுக்கே ஓட்டக் குத்துவான் முதலாளி" என்று விவரங்களை அள்ளிக் கொடுத்தார் தோசைமணி. "அப்புறம், வீட்டு வெளிய தூங்கும் உங்க பாட்டி?" என்றார் முதலாளி. "அந்தக் கிழவியோட பூத் நோட்டீஸ யாரு வீட்டுக்கு வந்து கொடுத்தாலும் அந்தக் கட்சிக்குத் தான் ஓட்டு போடும். அதுக்கு அரசியல் தெரியாது முதலாளி" என்று தனக்குத் தெரியும் என இலைமறை காயாகச் சொன்னான் தோசைமணி<br />
<br />
"அப்ப உங்க வீட்டுல அப்பா மட்டுதான் நாட்டு நடப்பைப் பார்த்து ஓட்டு போடுவாரு போல" என்று சாம்பாரை எப்பவும் கலக்கி ஊற்றும் ஓனர் போல கூட்டிக்கழித்துச் சொன்னார் முதலாளி. "அப்படியெல்லாம் இல்லை எங்க சின்ராசு மாமா இன்னும் விவரமானவரு அமெரிக்கா, ஜப்பான் நாட்டு ஏரோபிளைனை எல்லாம் கிட்டத்தில போயி பார்த்தவரு. அவரு எப்பவும் ஜெயிக்கிற கட்சிக்குத் தான் ஓட்டு போடுவார். எந்தக் கட்சியில சினிமா ஹிரோக்கள் அதிகம் இருக்காங்களோ இதுதான் வெல்லும் என்பார். ஒருவருசம் ஓட்டு போட்டா ஐஞ்சு வருசம் போட்டமாதிரினு சொல்வாரு." என்று அருமை பெருமைகளை அளந்துவிட்டார் தோசைமணி.<br />
<br />
ஓருவழியாகப் பொறாமையை மறைத்துக் கொண்டு யாரோ எழுதிய வசனம் ஒன்றை "நாட்டில ஊழல் செய்யாதவுங்க, அரசு சொத்துக்களைக் காப்பவங்கள், திறமை அடிப்படையில் நிர்வாகிகள், தொழிற்துறை உற்பத்தியை ஊக்குவிப்பவங்கள் இப்படி யாருக்கும் ஓட்டு போடக் கூடாதா?" என்று ஆதங்கப் பட்டமாதிரிக் காட்டினார் முதலாளி. "சரிசரி எனக்கு நேரமாச்சு சீக்கிரம் கிளம்னும் நம்ம காளியண்ணே வீட்டுலயிருந்து எலெக்சன் பூத்து வரைக்கும் இறக்கிவிட ஆட்டோ வச்சிருக்காரு அதுலயே போயி அவருக்கு ஒரு ஓட்டு போடனும்" என்று தனது அவசரத்தை வெளிக்காட்டினார் தோசைமணி.<br />
<br />
ருசியான சாம்பார் சட்டியுடன் கீழே கொட்டியது போல அதிர்ச்சியடைந்தார் முதலாளி, "டேய் மணி, அப்ப நீகூட உனக்கு ஓட்டு போட்டுக்க மாட்டியா?" என்று குழப்பமாகக் கேட்டுவிட்டார். தோசைமணியோ முதலாளியின் கற்பனை என்னவென்று புரியாமல் "முதலாளி கிண்டல் பண்ண நேரமில்லை எலெக்சனுக்கு நேரமாச்சு, எனக்காகக் காத்திருப்பாங்க" என்று மீண்டும் அந்த ரகசியத்தை உடைக்காமல் கதறினார் தோசைமணி. சாம்பாரில் விழுந்த பல்லியாக உடனே "உனக்காக எதுக்குக் காத்திருக்காங்க? அப்ப நீ எலெக்சன்ல நிக்குறதானே" என்று கடைசி ஆயுதத்தைப் பயன்படுத்தி ரகசியத்தை உடைக்கத் துணிந்தார் முதலாளி. "அட நீங்க வேற எலெக்சன் ஆபிசர்களுக்கு வடை, காபி, இட்லி, சாம்பார் சப்ளை காண்ட்ராக்டர் நான் தான் அதத்தான் அப்படி சொன்னேன்" என்றார் தோசைமணி. அடுப்படிப் பூனை தட்டிவிட்ட சாம்பார் பானை போல சிரித்துக் கொண்டே செல்பேசியை மடக்கிக் கொண்டார் முதலாளி.<br />
<br />
<a href="http://puthu.thinnai.com/?p=23790" rel="nofollow">திண்ணை</a> இதழுக்கு எழுதியது.<br />
தொடர்புடைய பதிவுகள்<br />
<a href="http://arts.neechalkaran.com/2011/03/population.html">தோசைமணியும் மக்கள்தொகையும்</a><br />
<a href="http://arts.neechalkaran.com/2011/10/cartoons.html">தோசைமணி கார்ட்டூன்ஸ்</a></div>Neechalkaranhttp://www.blogger.com/profile/01646862688378891745noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7988121523210741908.post-90482273579909257822014-02-19T23:21:00.000-08:002014-02-19T23:21:24.322-08:00வாசல், தாய்<b>வாசல்</b><br />
<br />
கழுவிக் கொண்டு கையிலிருந்து விழுந்தது நீர்<br />
நழுவிக் கொண்டு விரலிருந்து வந்தது வண்ணம்<br />
வீட்டின் தலைமகள் முன்னெடுத்து, அவதரிக்க<br />
நிலமகளுக்கு நடந்தது அலங்காரம்<br />
திசைகளுக்கு ஒரு பின்பமென எட்டும்<br />
நிறத்திற்கு ஒரு முகமென ஏழும்<a name='more'></a><br />
புள்ளிகளுக்குள் ஒளிந்து கொண்டது.<br />
வளைவுகளும் வளையங்களும் மையத்தில் கூடி<br />
சித்திரமொன்றைச் சிறைபடுத்தியது வாசல்<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxfkDBGiNJMObxEWhsEDi0LV7zx8ykXlGhbNBfiW2RsKsYV-Cx06oZ6BZ4kXVIQmeN-hu7V8JOYGrzGq0kuktrdHOvI6DouYMVzlmaY3r4OxDA2rYnrYdQ5-iLR-NZhFmoaEgIi_ElCoM/s1600/kolam.png" imageanchor="1" ><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxfkDBGiNJMObxEWhsEDi0LV7zx8ykXlGhbNBfiW2RsKsYV-Cx06oZ6BZ4kXVIQmeN-hu7V8JOYGrzGq0kuktrdHOvI6DouYMVzlmaY3r4OxDA2rYnrYdQ5-iLR-NZhFmoaEgIi_ElCoM/s320/kolam.png" /></a><br />
<b>தாய்</b><br />
<br />
அண்டங்கள் தாண்டி<br />
ஆகாயத்தில் உலாவும்<br />
மீன்களில் ஏதோ<br />
இன்று என்கைகளில்<br />
கலை மான் என்பேனா!<br />
சத்திய மான என் சக்தி இது<br />
சிஷ்டியில் விளைந்த<br />
மூல சொத்து அது<br />
பாலில் ஊறி<br />
வளர்ந்த மலர்<br />
பாரில் சாதிக்க<br />
வந்த சிலை<br />
கண்ணசைவில் காவியம்<br />
முட்டி தட்டி தடுமாறும்<br />
உதட்டசைவில் ஒவியங்கள்<br />
நலிந்து மெலிந்து சிதையும்<br />
நவசைவில் நாதங்கள்<br />
பிறண்டு வரண்டு வாடும்<br />
பூமிக்குப் புது வரவாக<br />
பூவுக்குப் புது இனமாக<br />
நாளைக்கு ஒரு தாயாக<br />
இன்றைக்கு என் மகளாக<br />
<br />
தமிழோவியம் தளத்தில் வெளிவந்தவை<br />
http://www.tamiloviam.com/site/?p=2656<br />
http://www.tamiloviam.com/site/?p=210<br />
படவுதவி:<a href="http://dev.neechalkaran.com/p/kolam.html">கோலசுரபி</a>நீச்சல்காரன்http://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7988121523210741908.post-62812469378571416982014-01-28T18:50:00.001-08:002014-01-28T18:50:59.906-08:00பிளாக்கர் கல்யாணமும் காமெடியும் -III<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">என்னங்க கல்யாணப் பொண்ணே பாட்டு பாடுது?<br />
கல்யாணத்தின் முதல்பாதி போர், இரண்டாம் பாதி அதவிட போர் என்று யாரோ பதிவில விமர்சனம் எழுதிவிட்டாங்களாம்.<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhs4DMT0PNSjDVbUYSk9Ih-yvZH9L_0UmcPpsbcJVzvDo0ONe4s2f5XNASD9cqtPTysiNzJnNl6dEx_ent27MztxaqvAabvyYxYUyrSwYUSBbCd3e732PCbifWO8PYTcoarb7QqofubGUA/s1600/Blogger_cartoon.jpg" imageanchor="1" ><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhs4DMT0PNSjDVbUYSk9Ih-yvZH9L_0UmcPpsbcJVzvDo0ONe4s2f5XNASD9cqtPTysiNzJnNl6dEx_ent27MztxaqvAabvyYxYUyrSwYUSBbCd3e732PCbifWO8PYTcoarb7QqofubGUA/s320/Blogger_cartoon.jpg" /></a><br />
என்னங்க போன பந்தியில தான சாப்பிட்டேங்க அதுக்குள்ளையும் இன்னொரு பந்தியா?<br />
யோவ் இலையின் நீளம் கருதி போன பந்தியில சாப்பிட்டது பார்ட் ஒன் மட்டும் தான்<br />
<a name='more'></a><br />
ஏன் கல்யாணத்தில எல்லார் மொபைலையும் சுட்சு ஆப் செய்ய சொன்னாங்க?<br />
டவரில்லதா ஊர்ல தான் மண்டபம் கிடைச்சதானு யாரும் கேட்கக் கூடாதாம்<br />
<br />
அவர் ஏன் முகம் காட்டி பேசமாட்டேன் என்கிறாரு?<br />
இது போட்டோ கமெண்டு போட்டுருவாங்களாம் <br />
<br />
பந்தியில சாப்பிட்ட இலையை எண்ணிக்காட்டச் சொன்னாராமே ஏன்?<br />
எத்தனையாவது இலைனு மறுமொழி போடனுமாம்<br />
<br />
அந்தப் பொண்ணுகிட்ட போய் அந்தப் பதிவர் ஏன் அடிவாங்குனாரு?<br />
மாப்பிள்ளை ஜாலியான டைப்பு பிடிச்சிருந்தா நண்பர்களுடன் பகிர்ந்துக்கோங்கனு சொலிட்டுப்போறாரு <br />
<br />
சமையல்காரர்: ஏங்க சாம்பார்ல உப்பு எல்லாம் போதுமா?<br />
ப்ளாக்'காரர்: ம்ம்.. சாப்பிட்டுப் பார்த்து பதிவு போடுறேன், படிச்சுப் பார்த்து கருத்து போடுங்க! <br />
<br />
அவரு அவர்கிட்ட பொய் ஏன் ஆடித் தள்ளுபடி கேட்டேங்க?<br />
ஒரு கமெண்ட் போட்ட ஒரு கமெண்ட் இலவசமுனு போடு போட்டு இருக்காருல அதான்<br />
<br />
பதிவுலகில் மீண்டும் சர்ச்சையா?<br />
அட நீங்கதானே சர்ச்சையில்லாத பதிவர்னு ஒருத்தரை இழுத்து விட்டீங்க அவர எல்லாரும் விமர்சிச்சு சர்ச்சை ஆயிருச்சு<br />
<br />
மாமா! உங்க பொண்ணு சரியில்லை, சாப்பாடு வேண்ணுமுனு கமெண்ட் போட்டத் தான் சமைக்கவே ஆரம்பிக்குறா<br />
அதுசரி மாப்பிள்ளை போன வாரம் நான் போட்டப் பதிவுக்கு நீங்க ஏன் ஓட்டுப் போடலா?<br />
<br />
எதுக்கு அந்த இயக்குநருக்கு நன்றி சொல்லி நோட்டீஸ் எழுதிருக்காங்க?<br />
அவர் படத்தில வந்த கல்யாணத்தைக் காப்பி அடிச்சுட்டதா யாரோ சொல்லிட்டாங்க<br />
<br />
மொய் எழுதுற இடத்தில பகுப்பாசிரியர் தேவைன்னு ஏன் போர்டு வச்சுருக்காங்க?<br />
தொகுப்பாசிரியர்னா எல்லாரும் பயப்பிடுறாங்க அதான் பகுப்பசிரியர்னு எழுத்திட்டோம்.<br />
<br />
மண்டப உரிமையாளர்: நாளைக்குத் தான பதிவர் வீட்டுக் கல்யாணம். இது வேற கல்யாணம்<br />
பிளாக்கர்: பரவாயில்லை இந்த மாப்பிள்ளையை ஒரு ப்ளாக் தொடங்கச் சொல்லுங்க<br />
மண்டப உரிமையாளர்:!!!!<br />
<br />
மேல்கண்டவை நகைச்சுவைக்காக மட்டுமே.<br />
இதே மண்டபத்தில் நடந்த பிற பிளாக்கர் கல்யாணங்கள் <a href="http://arts.neechalkaran.com/2011/08/marriage.html">2011</a> <a href="http://arts.neechalkaran.com/2010/10/marriage.html">2010</a></div>நீச்சல்காரன்http://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7988121523210741908.post-17092924607844287592013-12-14T17:30:00.000-08:002013-12-14T17:30:00.498-08:00கிணற்றுத் தவளை<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9ywFWs3U63D64c_HoP6XHw6IGNjtT_q44ySIx-hJJQhzpb-uGwgHoPxvQwNFg7y5Of3fTG1l5WMbrEwPfiIYG0UddlaZkmnge2Ef2ZXyv6hqukizb6ryJH1HXereKuQ7WsMfgSpX5lFA/s1600/Swimming.jpg" imageanchor="1" ><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9ywFWs3U63D64c_HoP6XHw6IGNjtT_q44ySIx-hJJQhzpb-uGwgHoPxvQwNFg7y5Of3fTG1l5WMbrEwPfiIYG0UddlaZkmnge2Ef2ZXyv6hqukizb6ryJH1HXereKuQ7WsMfgSpX5lFA/s400/Swimming.jpg" /></a><br />
<br />
"ரொம்ப நன்றி. சார் யு ஆர் சோ கைண்ட்புல்" என்று ஒலித்தவாறே வாசற்கதவு திறந்தது. தொலைப்பேசியை அணைத்துவிட்டு, "இவனெல்லாம் ஒரு மேனேஜரு இவனுக்கெல்லாம் பயபப்படவேண்டியதாப்போச்சே" என்று கவரி மானாக மனதுக்குள் முனங்கியவாறே அறைக்குள் நுழைந்தான் வினித். வினித் அகராதியில் அட்வைஸ்கள் என்றுமே இலவசம், ஆனால் இயல்புக்கு மாறாக இன்றோ காலையிலிருந்து யார்யாரிடமோ இவன் அட்வைஸ் வாங்கி புளித்துப் போன அவனுக்குப் பொங்கலாகக் கிடைத்தான் அறைத்தோழன் ரஞ்சித். ரஞ்சித், அப்போதுதான் வேலைதேடி நகருக்கு வந்திருக்கும் கிராமத்து இளைஞன்.<a name='more'></a> அதனாலோ என்னவோ ஆலோசனை கேட்க ஆரம்பித்தாலே அட்வைஸ் மழை பொழிந்துவிடுவான் நமது வினித். நீச்சல் அடிப்பது எப்படி என்கிற காணொளியைக் கணினியில் பார்த்துக் கொண்டிருந்தான் ரஞ்சித். "உனக்கு நீச்சல் அடிக்கத் தெரியாதா?" என்று சகஜமாக அலமாரியைத் திறந்தவாறே கேட்டான் வினித். "எங்கவூர்ல கண்மாயே இல்ல அதான் பழகமுடியல" என்றான். "சுவிமிங் பூல்கூட இல்லையா?" என்று கேள்வியை அடிக்கினான் வினித். "அங்கபோய் நீச்சல் பழகி என்ன போட்டிக்கா போகப்போறேன்" என்று முடித்துக் கொண்டான் பதிலை. "நீச்சல்ங்கிறது ரொம்ப முக்கியமானது, நீச்சல் தெரியாத ஆளை இன்னைக்குத் தான் பார்க்கிறேன். தவறி ஆத்தில வந்தா என்ன செய்வே?" என்று தனது அலமாரிக்கு வெளியே தலையை விட்டு விசாரிக்கத் தொடங்கினான் வினித். "அப்ப பார்த்துக்கலாம் இனிமே ஏதாவது சான்ஸ் கிடச்சா பழக வேண்டியதுதான் அதுக்கென்ன" என்று சாராசரி பதிலளித்தான். "எங்கவூர்ல அப்படித்தான் ஒரு நாள் ..." என்று சொந்தமாக ஒரு திரைக்கதையை அவுத்துவிட்டான் வினித் இடையே இடையே புரியுதா! நான் சொல்றது சரிதானே என்று குறுக்குகே கேள்விவேறு கேட்டு நீச்சல் வாத்தியார் போல சொல்லிமுடித்தான். "நீ ஒருவாட்டி கத்துகிட்டாப் போதும் ஆயுசுக்கும் மறக்காது. நானெல்லாம் சின்ன வயசுல கிணத்துல கயிறு கட்டி நீச்சல் அடிச்சிருக்கேன். தெரியுமா?" என்று பூரித்துக் கொண்டான் வினித். "ம்ம்" என்று தலையை அசைத்துவைத்தான் ரஞ்சித். அந்தக் காணொளியைப் பார்த்து "அவனுக்குக் காலை அசைக்கவே தெரியல." என்று படத்தில் வந்தவனையும் விமர்சித்து தனது கிணற்று நீச்சலை ஒப்பிட்டுக் கொண்டான். "அதனால சீக்கிரம் நீச்சலைக் கத்துக்கோ.. நான் ரூம்ல இருந்தாப் பரவாயில்லை, நான் எங்காவது போனபோது சுனாமி வந்தா என்ன செய்வே" என்று சிரிக்காமல் சிந்தாந்தத்தை முடித்தான் வினித். "ஃபிரியா இருந்தா நான்கூட உன் கூட வாரேன்" என்று ரஞ்சித் சொல்லிமளவிற்கு வந்துவிட்டான். "சுவிமிங் பூல்னா தண்ணீ சுத்தமாயிருக்காது, கடல்னா உப்பு உடம்ப அரிக்கும் அதனால் ஊருக்கு வா கிணறு இருக்கு என்று" அழைப்புவிடுத்தான் நீச்சல் சக்கரவர்த்தி வினித். அப்போது ஓடிக்கொண்டிருந்த கானொளியில் ஒரு மாஸ்டர் "நன்னீரான கிணற்று நீச்சல் வேறு, உப்பு நீரான கடலில் போட வேண்டிய நீச்சல் வேறு இது தெரியாமல் பலர் ஆபத்தில் சிக்குகிறார்கள் ..." என்று ஒலித்துக் கொண்டிருந்தபோது அலமாரியின் கதவுகளுக்குள் வினித் ஒழிந்து கொண்டான்.Neechalkaranhttp://www.blogger.com/profile/01646862688378891745noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7988121523210741908.post-65850118345882139202013-10-17T23:54:00.002-07:002013-10-17T23:54:47.746-07:00மன்னிப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzHpV9SU42prAa0euBrgvFAXIhYcCi5yJYvCeSBEf1SsdbPM5zmknIGW73Vedw0AU1jCLXitafZF1MBAPmMR1lJdBq1AdZS3gnlSBueVbjZMeG-wKMUScWCze1yEffa1SY_12bGBs4R9c/s1600/road.jpg" imageanchor="1"><img border="0" height="312" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzHpV9SU42prAa0euBrgvFAXIhYcCi5yJYvCeSBEf1SsdbPM5zmknIGW73Vedw0AU1jCLXitafZF1MBAPmMR1lJdBq1AdZS3gnlSBueVbjZMeG-wKMUScWCze1yEffa1SY_12bGBs4R9c/s400/road.jpg" width="400" /></a><br />
நான்கு சாலைகள் <br />
சங்கமிக்கும் வழியின் <br />
மையத்தில் விழியற்ற <br />
சிலையாய் நான் <br />
<br />
வெந்த குடலுக்குச் <br />
சொந்தமான பசி படிந்த <br />
வயிற்றுக்கு எட்டாத <br />
மிஞ்சிப்போன சோற்றை <br />
எச்சிலிட்ட காக்கைகள் <br />
என்மீது எச்சமிட்டுப்போகும் <br />
<a name='more'></a><br />
சாலையில் மீளவழியற்று <br />
மீந்துபோன மழைநீர் <br />
மனிதனுக்கில்லாமல் <br />
நாய்கள் நக்கியபின் <br />
வாகனங்களால் என் <br />
மீது வீசப்படும் <br />
<br />
வடிகட்டிய வார்த்தைகளற்று <br />
வாயாறக் கொட்டித்தீர்க்கும் <br />
வாகனப்புகை <br />
இரச்சலுடன் இருமலையும் <br />
எனக்குத் தந்துசெல்லும் <br />
<br />
கெட்டிக்கார வயது <br />
இளரத்தங்கள் உல்லாசம் <br />
கொட்டிப்போனப் பின்னே <br />
என் முன்னே <br />
விட்டுப்போன பீங்கான் <br />
குடுவைகள் சிறுவர்களின் <br />
பீடி செலவுக்கு உதவும் <br />
<br />
ஆண்டுக்கொரு முறை <br />
அரசியல் சதுரங்கத்தின் <br />
பணவாடை மாலைகள் <br />
என்னைப் பணயமாக்கி <br />
சின்னச்சின்னக் கலக <br />
குமிழிகளைச் சீண்டிவிடும் <br />
<br />
அனுமானிக்க முடியாத <br />
தொல்லைகளால் <br />
அனுதாபமாக நிற்கிறேன் <br />
மன்னிக்க மனமிருந்தும் <br />
கேட்பதற்கு ஆளில்லையே<br />
<br />
<!-- இங்கும் இக்கவிதையைப் படிக்கலாம் http://eluthu.com/kavithai/140987.html --></div>நீச்சல்காரன்http://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7988121523210741908.post-68648833232316523012013-09-19T00:34:00.001-07:002013-09-19T00:34:25.339-07:00தற்கொலையும் தமாஷும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXOor3_QxzAXU1QsIN8Ra9qizGfaihWhGoEXQmQUuX8x1T3qM0V6P3BOZkzXeUvxFwIL1U6BPzPaNj7xUSqY-GkOAo1GeVxJQLhFIBB_BvZW2Ijl1VpstMVHv7LtauRUvrPLC7sF1aEKE/s1600/bachelor+kitchen.png" imageanchor="1" ><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXOor3_QxzAXU1QsIN8Ra9qizGfaihWhGoEXQmQUuX8x1T3qM0V6P3BOZkzXeUvxFwIL1U6BPzPaNj7xUSqY-GkOAo1GeVxJQLhFIBB_BvZW2Ijl1VpstMVHv7LtauRUvrPLC7sF1aEKE/s400/bachelor+kitchen.png" /></a><br />
"வாழ்க்கையே வெறுத்துப் போச்சு மச்சி. வாழவே பிடிக்கல"<br />
"கவலைப் படாதடா ஏதாவது வழியிருக்கும்"<br />
"அதான் உன் சமையல சாப்பிட வந்தேன்"<br />
<br />
"எலி மருந்து விளம்பரத்தில நடிக்கக் கூப்பிட்டதும் ஏன் எலி மருந்தைப்போய் குடிச்சார் அந்த நடிகர்?"<br />
"எதையும் பயன்படுத்தாமல் சிபாரிசு செய்யமாட்டாராம்"<br />
<br />
"நீங்க ஊழல் குறைவா செய்கிறவுங்களுக்கு ஓட்டு போடுவீங்களா? இல்ல பணம் குறைவா இருக்கிறவுங்களுக்கு ஓட்டு போடுவீங்களா?"<br />
"ஆயுள் குறைவா இருக்கிறவுங்களுக்குத் தான் எங்க ஓட்டு"<br />
<br />
"உங்கள கைது செய்த நேரம் கட்சித் தொண்டர் ஒருவர் தீக்குளிக்கப் போனபோது எப்படி தடுத்தீங்க?"<br />
"வட்ட செயலாளரா பதவி கொடுத்தேன்."<br />
<br />
"தற்கொலை செய்யப்போகும்போதும் நகையோட போகனுமா?"<br />
"அப்ப தான் பத்திரிக்கையில படமா வந்தா அழகாயிருக்கும்."<br />
<br />
நடிகர்:"எனது படத்தைத் தடை செய்ததற்காக யாரும் தூக்கு போட்டுக்கொள்ள வேண்டாம்"<br />
காவல் அதிகாரி:"தடை செய்யச் சொல்லித்தான் இவரு தூக்குப் போட்டுருக்காரு சார்"<br />
<br />
"தேசப்பற்றைக் காட்ட அந்த டாக்டர் என்ன செய்தார்?"<br />
"குடியரசு தினத்தை முன்னிட்டு இரண்டு பேஷண்டுகளை விடுதலை செய்தாராம்."<br />
<br />
"தற்கொலை செய்ய தூக்கு கயிறு வாங்க போனீயே என்னாச்சு?"<br />
"ரெண்டா வாங்கினா ஒன்னு freeயாம். அதான் ஆள்தேடிகிட்டுயிருக்கேன்."<br />
<br />
"அமைச்சர் தற்கொலைக்கப்புறம் சிட்டியில யாரும் தற்கொலை செய்யவேயில்லையே! ஆச்சரியாமயிருக்கு!"<br />
"இடைத்தேர்தல் வருதுல!"<br />
<br />
"தற்கொலை செய்வது எப்படின்னு படம் எடுத்ததையே என்னாச்சு?"<br />
"படத்த ரிலீஸ் செய்றதுக்குள்ள ப்ரோடியூச்சர் தற்கொலை செஞ்சிட்டார்"<br />
<br />
"ஹெல்மெட் போட்டுக்கிட்டு ஏன் தற்கொலை செய்யப்போறீங்க?"<br />
"முகம் தெரியாட்டி இன்சுரன்ஸ் கிடைக்காதாம்"<br />
<br />
தூதன்:"போரிடாமலே வெற்றிக் கொடியை ஏற்றிக்கொள்ள கயிறு பரிசளித்த உங்களுக்கு எங்கள் அரசர் நன்றி தெரிவித்தார்"<br />
எதிரி அரசன்:"போர்களத்தில் புறமுதுகிட்ட உங்கள் அரசனுக்கு நான் கொடுத்த தூக்குக் கயிறுடா அது."<br />
<br />
"வாங்குதல் என்பதற்கும் எடுத்தல் என்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் என்று தெரியுமா?"<br />
"எவ்வளோ?"<br />
"ரயிலில் நாம் ஏறினால் டிக்கெட் எடுக்க வேண்டும்; ரயில் நம்மீது ஏறினால் டிக்கெட் வாங்க வேண்டும்."<br />
<br />
Disclaimer: தற்கொலை செய்வது உடல் நலத்திற்குத் தீங்கானது.<br />
</div>நீச்சல்காரன்http://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7988121523210741908.post-23860258881143955382013-09-09T00:30:00.001-07:002013-09-09T00:37:17.827-07:00கல்யாணக் கல்லாப்பொட்டி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div dir="ltr" style="text-align: left;" trbidi="on">“தம்பி கொஞ்சம் வாங்களேன்” என்று சுருள் பாக்கு போட்டுக்கொண்டே மாப்பிள்ளையோட அப்பா நம்ம கைய பிடிப்பாரு. நாமகூட மாப்பிள்ளை தோழனா கூப்பிடுறாரோனு கொஞ்சம் சட்டைக் காலரை திருத்திக் கொண்டு முகத்தைத் துடைத்துக் கொண்டு “அங்கிள், கேமிராக்காரர் வந்துட்டாரா?” என்போம். “அதோ சாப்பிட்டுக் கொண்டிருக்காரு குமாரு! ” என்று வழிந்து கொண்டிருந்த வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே “சாப்பிட்டையா!” என்று அக்கரைப்படுவார். நமது பதில்வரும் முன்னரே “நீ என்ன பண்றனா, ரெண்டு பெரிய சையிஸ் கோடுபோட்ட நோட்டும் ரெண்டு பேனாவும் வாங்கிட்டு வா, இந்தா.. இப்படி போனா ஒரு ரோடு வரும்ல எதுல நாலாவது கடையில் கிடைக்கும் சரியா?” என்று சிரித்துக் கொண்டே கொஞ்சம் காசை நீட்டுவார். அப்போதுதான் தெரியும் அப்லிகேஷனில் கூட ஒழுங்கா பெயரேழுதாத நாம் வரிசையா பெயர் எழுதப்போறோம்னு. அதுபோல தான் ஒரு நாள் நண்பன் கல்யாணத்துக்கு போயி அந்த நோட்டும் பேனாவும் வாங்கிய அற்புத சிகாமணியானேன்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDMId8B3C0R338bJPiZJUurHZEpu1qLdnRfb4nFoP6iDF4pHbUyK8BHgZ4k1lpyHMK_ZPQDuiSC-ibik9uxARaSwEBXrXscKUHePojZPwxg8wAG0kD3lOUPyEIpnai7epmXmRcZCBLWgM/s1600/Goundamani.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDMId8B3C0R338bJPiZJUurHZEpu1qLdnRfb4nFoP6iDF4pHbUyK8BHgZ4k1lpyHMK_ZPQDuiSC-ibik9uxARaSwEBXrXscKUHePojZPwxg8wAG0kD3lOUPyEIpnai7epmXmRcZCBLWgM/s400/Goundamani.jpg" /></a></div><a name='more'></a><br />
<br />
நீங்க மொய் எழுதியதுண்டா? பொய் சொல்லாதீங்க… மொய்வைக்கிறது என்னமோ பேப்பர்மேல பேப்பர் வெய்ட் வைக்கிற மாதிரி ஆனால் அந்த மொய்ய பேனாவில எழுதுறது அப்படிங்கிறது அந்த பேப்பர் வெய்ட பேப்பராக்கிற மாதிரி. இந்த மாதிரி பேப்பனு உட்கார்ந்தா பீப்பினு பணமெல்லாம் போயிரும் அட்வைசு எல்லாம் கேட்கணும். அதாவது போன வாரத்தில இருந்து போன நூற்றாண்டு வரை யார் யாருக்கெல்லாம் மொய் அல்லது இனாம் கொடுத்து விசேஷங்களுக்குப் போயிவந்தோமோ அவங்களை எல்லாம் அடுத்த வாரத்தில இருந்து அடுத்த நூற்றாண்டு வரை அவுங்க பிரியத்தை பிரியமாக வாங்கும் ஒரு இன்ப முயற்சிதான் இந்த மொய் வைக்கும் பழக்கம். இந்த பழக்கம் எங்கு தோன்றியது என்பதை விட எதற்கு தோன்றியது என்று காலத்தை வினாவிக் கேட்டால் இந்த மொய் அந்த விசேஷ வீட்டுக்காரவுங்களது பணச் செலவையும் மனச் செலவையும் குறைக்க அவர்களது உற்றார் உறவினர் செய்யும் பாக்கெட் செலவு.<br />
<br />
கல்யாணத்தில பந்தி போடுவதுக்கு முந்தி மொய்வைக்க டேபிள் போடுனு சும்மாவா சொன்னாங்க, அதுலயும் கொஞ்சம் தெம்மா தெம்மா என அப்பிராணியாயிருந்தால் போதும் மொய்எழுதும் நபர் தேர்வாகிவிடுவார். ஏதோ சின்ன கல்யாணம் அப்படிஎன்றால் கொஞ்சம் நஞ்சம் பேர் மொய் வைப்பாங்க ஈசியா எழுதி கணக்கா முடிச்சுருலாம். இதுவே பெரிய கல்யாணம் என்றால் சும்மா ஆயிரம் வாலா பட்டாசு போல பொக்கே கொடுப்பங்கனு நினைச்சுறாதீங்க நமக்குத் தான் புஸ்வானம் கொடுப்பாங்க. வண்டி வண்டியா யோசிச்சு வண்டியே போகாத ஊரையெல்லாம் அட்ரஸ்ல எழுதச்சொல்லுவாங்க. ஒரு கால் அந்த ஊர் பெயருக்கு ஒரு துணைக்கால் விட்டால் நம்ம காலுக்கு கியாரண்டிகிடையாது. இப்படியெல்லாம் அட்ரசை நீட்டி நெளித்து ஒரேப் பக்கத்துக்குள் எழுதுவதென்பது மூணாங்கிளாஸ் இம்போஸிஷேன் மாதிரி. துணைக்கு ஒரு ஆள் உட்கார்ந்திருப்பரு அவரு பணம் வாங்க நம்ம எழுதனும்னு ப்ளான்யெடுத்திருப்போம் ஆனால் நம்ம ஒரு பேர எழுதிமுடிக்கிறதுக்குள்ள ஒம்பது பேர்கிட்ட மொய் வாங்கிட்டு நீங்கள் இன்னும் எழுதலையானு லுக்கு விடுவாருபாருங்க! சாரிண்ணே.. நீங்களே எழுதுங்க நான் பணம் வாங்குறேன்னு வாங்கினா, அம்மா ஆசையா வச்ச “அம்மாவாசை”ங்கற பேர “ஆமா வசை”னு எழுதுவாரு வர்றவுங்க எல்லாம் நமக்குத் தான் வசை விட்டுட்டு போவாங்க இடையில அவரு எழுந்திருச்சு போயி நல்லா சாப்பிட்டு வந்திருவாரு. நாம போகலாமுன்னு எழுந்திரிச்சா “பாதி மொய்யோட போகாதீங்க கணக்கு விட்டு போயிரும்னு” பக்கத்துயிலைக்கு பாயசம் வேணும்ங்கிற தோணியில சவுண்டு விடுவாரு. அவர் ரொம்ப நல்லவராம். சிலர், பெயர் எழுதி முடிச்சப்பிறகு நீங்க மாப்பிள்ளை வீடா? தெரியாம எழுதிட்டேன் நான் பொண்ணுவீடு என்று பணத்தை வாங்கிக் கொண்டு சென்றுவிடுவார். சிலர் நாசுக்கா கவரில் பணத்தைப் போட்டு பெயரெழுதி கொடுப்பாங்க, கவரின் கனத்தை வைத்து எடைபோடக்கூடாது கவருக்குள் கவர்வைத்துகலக்குவார்கள்.<br />
<br />
இடையில சிலர் “தேங்காய் பையில்லையா?” என்பார்கள். பை கொடுத்தால்தான் மொய் செய்வார்களோ?. இன்னும் சிலர் சமையல்காரர் பேருஎன்ன என்பார்கள், சமையல்காரருக்கு சேர்த்து மொய் செய்யப்போறாரா?. சிலர் வெத்திலைத் தட்டை பார்த்துக் கொண்டே “கொழுந்து வெத்திலையே இல்லையே” என புகார்விடுவார்கள். எல்லாம் பொறுத்துக் கொள்ள அப்பிராணி தேவையன்றோ. அருந்தலாக சிலர் மட்டும் மொய் வைப்பார்கள் என்பதற்காக கூட்டம் குறைந்ததிலிருந்து பந்தி முடியும் வரை வெறும் நோட்டோடு உட்கார்ந்திருக்கனும். அந்த நேரம் தான் கல்யாணத்துக்கு வந்த மச்சினி கும்பலும், கொளுந்தியா கும்பலும் கிளம்பும், சும்மா வாசலில் உட்காந்திருக்கிற நாம தான் ஆட்டோவும் படிச்சு விடனும். எல்லாம் முடிஞ்சு பணத்தை எண்ணிக் கொண்டிருக்கும் போது வாடகைக்கு விட்ட டேபிள் காரர் வந்து “சார் எப்ப முடிப்பீங்க?” என்பார், அவரு டேபிளை எடுக்கணுமாம். “நீங்கள் மொய் வச்சதும் முடிப்பேங்க” என்று அவரிடம் நக்கலடித்தால், சிரித்துக் கொண்டே நழுவும் மனிசன் அடுத்து இந்தப் பக்கமே வரமாட்டார். எத்தனை முறை திரும்ப திரும்ப எண்ணிப் பார்த்தாலும் கணக்கு டேலியாகாது, எப்படியோ சிலபல ரூபாயை திருத்தி கணக்கை முடித்து மாப்பிள்ளை அப்பாவிடம் கொடுக்கும் போது “இந்த கல்யாணத்தில கலெக்ஷன் கம்மியா இருக்கே” என நம்மள பார்ப்பார். அப்ப முடிவெடுத்தது தான் பந்தி ஆரம்பிச்சு மொய்க்கு ஆள் போட்டப்பிறகு தான் எந்த கால்யாணத்துக்கும் போகணும்னு.<br />
<br />
<a href="http://puthu.thinnai.com/?p=20581" rel="nofollow" target="_blank">திண்ணை</a> இதழிலும் படிக்கலாம்<br />
தொடர்புடைய பதிவு:<a href="http://arts.neechalkaran.com/2013/06/moi.html">லாபகரமாக மொய் வாங்குவது எப்படி?</a></div><div class="separator" style="clear: both; text-align: center;">──╔═╗─────────────o─ ───────────o──o───╔═╗<br />
╔═╗║║╔╦─╔╦║║║─╔╦─╔╦─ ──╔╦──╔╦─║╔╦─╔╦──╔╬─║<br />
╠╗║║║║╬╗║║║║║╔╬╬╗║║─ ─╔╬╬═╔╬╬╗║║║╔╬╬╗╔╬╬╗║<br />
╚╝╚╝║║║║║║╚╩╝╚═╝╝║║─ ─╚═╝─╚═╝╬╝║║╚═╝║╚═╝║║<br />
──────╔╝──────────╝─ ─────╚══╝──╝──╔╝──╔╝─<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiobcsz4atWNizB9kKhV4aJTykqFyTlNoCC-BUlkui3tf34Gs15kKx-OC3MXFYJ4TAYY6WWIQIrakw89ma7e1g5gxoITgK_djY8W9UFyYsPLCe5u8DLVpqsN9bo-2jw7SeMmAUJMdAXhvM/s1600/Ganesh+BW.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="177" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiobcsz4atWNizB9kKhV4aJTykqFyTlNoCC-BUlkui3tf34Gs15kKx-OC3MXFYJ4TAYY6WWIQIrakw89ma7e1g5gxoITgK_djY8W9UFyYsPLCe5u8DLVpqsN9bo-2jw7SeMmAUJMdAXhvM/s640/Ganesh+BW.jpg" width="580" /></a></div></div>நீச்சல்காரன்http://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7988121523210741908.post-83906368841319351322013-08-21T00:10:00.000-07:002014-02-02T11:51:40.493-08:00மறுஜென்மம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
எடை கனமானாலும், வலுயில்லாததாக, தன்னால் மரபணு மாற்றப்பட்ட மரத்துக் கட்டையால் அடிவாங்கியதால், பலமான காயமின்றி எழுந்த ஹான்ஹி வினித்தைத் தேடத் தொடங்கினார். மூலிகையின் வாசனை வழியே பயணிக்கத் தொடங்கினார். தனது மூன்று மாதத் திருவிளையாடலின் பயனாக அந்த அபூர்வ மூலிகை வேர்களைக் கையாடல் செய்துவிட்டு, தனது திட்டப்படி இரகசிய இடம் நோக்கி மலை முகடுகளில் பயணித்துக் கொண்டிருந்தான் வினித்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjujd6GP1IOnL8qyrRvWpUgmDjshwYJHRvu8b2o2qH_hzdZBLMIYxBmLdGcupDkN1TU_P6wt_LDSDCFbAj1Ju2h_QUM2M_PEPLehn4xcFlZIBBt2NvjQSvVaSKD2HwUzXUmnK8-mVpouR4/s1600/Forest+way.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjujd6GP1IOnL8qyrRvWpUgmDjshwYJHRvu8b2o2qH_hzdZBLMIYxBmLdGcupDkN1TU_P6wt_LDSDCFbAj1Ju2h_QUM2M_PEPLehn4xcFlZIBBt2NvjQSvVaSKD2HwUzXUmnK8-mVpouR4/s400/Forest+way.jpg" /></a></div><a name='more'></a><br />
யாரிந்த வினித்? கரட்டூர் கானதன்யாசி என்ற ஜோசியரின் வாக்குப்படி பெரிய அரண்மனையில், தன் இனத்திற்கே தலைவனாக இருந்தவனின் மறுஜென்மம் தான் வினித்தாம். இந்த ஜென்மத்திலேயே முன்ஜென்மம் எடுக்கப் போகிறானாம். ஆனால் இதை எல்லாமல் துளியும் நம்பாத வினித், இந்திய மக்கள் தொகைக் கணக்கின் படி ஒரு மனைவி, மூன்று மகன்கள், நான்கு சகோதரிகள், இரண்டு தம்பிகள் என்று பெரிய குடும்பத்தின் மூத்த மகன். ஏறக்குறைய அனைத்துத் தொழில்களையும் முயன்று தோற்று, கடன்பட்டு, கஷ்டப்பட்டு, அடிபட்டு, ஊரைவிட்டு ஓடிவந்தவன். ஹான்ஹி என்ற சீன மருத்துவருடன் முதுமலைக் காட்டில் இதுவரை வசித்து வந்தான். ஹான்ஹி ஒரு இயற்கை மரபியல் ஆய்வாளர், எளிய மொழியில் சித்தர் என்றே சொல்லிவிட்டுப் போகலாம். தாவரங்கள் அல்லது விலங்குகளின் மரபணுக்களைச் சீண்டி புதிய குணங்களைக் கண்டுபிடிப்பதில் வல்லவர். வேப்ப மரத்தில் மாஞ்சுவையுடன் வேப்பங்கனிகள் உருவாக்குவார்; மாமரத்தில் வேப்பஞ்சுவையுடன் மாங்கனிகள் உருவாக்குவார்; எளிதில் உரிக்கக்கூடிய தேங்காய், காரமான பாவற்காய் என எவ்வளவோ செய்வார். ஆக ஒரு உயிரின் குணத்தையோ உருவத்தையோ மாற்றும் கலையில் கைதேர்ந்தவர். ஆனால் வெளியாட்களுடன் அவ்வளவாக பழகாதவர். முன்பு ஒருமுறை கள்ளக் கடவுச்சீட்டு பெற்று தான் நாடு கடக்க உதவிய ஒரே காரணத்திற்காக வினித்தைத் தன்னுடன் இருக்க அனுமதித்தார்.<br />
<br />
வேறு வழியற்ற வினித்தும், தனது ஊருக்கே தெரியாமல் இவருடன் காட்டில் வசித்து வந்தான். ஹான்ஹி உடன் இருந்தபோது ஏதேனும் சூரணம், லேகியம் போன்று கற்றுவிட ஆசைப்பட்டான். முடியவில்லை. மந்திரம், மாந்திரீகம், வசியம் என்றும் ஏதும் அமையவில்லை. பப்பாளி மரத்தில் தக்காளி பறிப்பது, ஆலமரத்தில் நாவல் பழம் பறிப்பது, சர்க்கரைப் பாறையிலிருந்து சர்க்கரை சுரண்டுவது, பேசும் குரங்கிடம் அடிவாங்குவது என்றே காலம் நகர்ந்தது. அந்த ஜோசியர் சொன்னதும் அவ்வப்போது இவன் நினைவுகளில் வந்து சென்றது. இறுதியாக ஒரு நாள் ஒரு உண்மை தெரிந்தது, ஹான்ஹி என்பவர் போன ஜென்மத்தில் தமிழ்நாட்டில் பிறந்த ஒரு சித்தராம், ஒரு அரிய மூலிகையின் பயனாக பழைய ஞாபகங்கள் மீட்கப்பட்டு மீண்டும் அதே தமிழ்நாட்டிற்கே வந்தவராம். இதைச் சற்றும் எதிர்பாராத வினித் விண்ணைத் தாண்டுமளவிற்குத் துள்ளல் கொண்டான். ஒரு மாசி மாத மாலை நேரத்தில் மண்டையைத் தடவியவாறே மல்லாந்து ஹான்ஹி படுத்திருந்த வேளையிலே, கட்டையால் கபாலத்தில் அடித்து அந்த மூலிகையைக் கைப்பற்றினான் என்பதே வினித்தின் முன்கதை. ஹன்ஹி வினித்தை நோக்கியும், வினித் இரகசிய இடம் நோக்கியும் ஓடிக் கொண்டிருக்க வானம் இருள் வசமானது.<br />
<br />
அந்த மூலிகையைக் குறிப்பிட்ட பக்குவத்தில் உண்டால் பழைய ஜென்மத்து உருவம் கிடைக்குமாம் மீண்டும் ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் உண்டால் இந்த ஜென்ம உடலை மீண்டும் பெறலாமாம். இதை நினைத்துக்கொண்டே வரவேண்டிய இடத்தை அடைகிறான் வினித். இராமசாமி பண்ணையாருக்கு ரெண்டு லட்சம், கருப்பாயி பேரனுக்கு ஒன்னரை லட்சம், மனைவிக்கு அஞ்சு பவுன், தங்கைகளுக்கு மூணு பவுன், மகனுக்கு சைக்கிள், கடைசியாக ‘உன் இனத்திற்கே தலைவன் என்று சொன்ன’ ஜோசியக்காரனுக்கு ஒரு பட்டு வேஷ்டி சட்டை என்று விருப்பப் பட்டியலையும் தயாரித்து முடித்தான். கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு, எடுக்கப் போகும் ஜென்மத்தில் இந்த ஜென்ம ஞாபகங்கள் மறக்கக் கூடும் என்று யூகித்து, வேண்டிய குறிப்புகளைத் தெளிவாக காகிதத்தில் எழுதிக் கொண்டான். மூலிகையைப் பக்குவப்படுத்த தொடங்குகிறான். காபி இராகத்தில் பாடல் பாடிக் கொண்டே காபியைக் குடித்துக் கொண்டிருந்த வேளையிலே ஒரு ஞான உதயம். முன் ஜென்மத்தில் ஹான்ஹியைப் போல வேறு நாட்டில் பிறந்துவிட்டால் என்றும் யூகித்து, பல மொழிகளில் தான் யார் தனது குடும்பம் எங்கே உள்ளது எப்படி இப்படியானேன் எனவும் எழுதி வைத்துக் கொண்டான். எல்லாம் தயார் நிலையில் இருந்தது, சூரிய உதயம் வானைப் பிளந்தது. ஹான்ஹி எப்படியும் நம்மைப் பின் தொடர்வார் என யோசித்து, அவர் கண்ணில் பட்டுவிடக்கூடாது, விரைவில் முன்ஜென்மம் எடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் சீக்கிரமாக மூலிகைகளை உண்ணத் தொடங்கினான். கையில் காகிதங்களுடன், கண்கள் உருட்டி மயங்கி விழுந்தான். உலகம் இருண்டது…<br />
<br />
* * * *<br />
ஹான்ஹி இறுதியாக மூலிகை வேர் இருக்கும் இடத்தை அடைந்து எஞ்சியிருந்த வேர்களைச் சேகரித்தார், அவரருகே வினித்தின் உடையை மாற்றியவாறு இருந்த ஒரு கழுதையைக் கண்டார். ஏதோ அரண்மனைக் கழுதை போல, கழுதை இனத்திற்கே உரிய கம்பீரத்துடன் இருந்த அக்கழுதை ஏதோ பல்வேறு மொழியில் எழுதப்பட்ட காகிதங்களை மென்று கொண்டிருந்தது.!<br />
<br />
<br />
<a href="http://www.vallamai.com/?p=37601" rel="nofollow">வல்லமை</a> இதழிலும் படிக்கலாம்.</div>நீச்சல்காரன்http://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7988121523210741908.post-44523817097742551972013-08-15T00:55:00.000-07:002013-09-13T22:42:36.299-07:00கேலிச் சித்திரங்கள் (15/8/2013)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;">சமீபத்திய கேலிச்சித்திரங்களின் தொகுப்பு</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;">நடவடிக்கை எடுக்கப்படும்</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioikupztScw3SSJ5sWfNxzDkJfZVMVITM6O_svzSM6FzIAiCqkQVn4vDQUjQHnoGQmljknejG-ck94s8XQJDNXMqFZTELXLtJ62w7EgKVcGuEFI0OasEJfd7VX4XfjPMrG-PHtqm8Vl8Y/s1600/defence.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="491" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioikupztScw3SSJ5sWfNxzDkJfZVMVITM6O_svzSM6FzIAiCqkQVn4vDQUjQHnoGQmljknejG-ck94s8XQJDNXMqFZTELXLtJ62w7EgKVcGuEFI0OasEJfd7VX4XfjPMrG-PHtqm8Vl8Y/s640/defence.jpg" width="640" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a name='more'></a><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;">தலைப்புச் செய்தி</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-SxhTBARJo0EuIXENKlWiDG6r_NrYP_20_qLY-qneLKRoNMY6IKKJKTsN3hgmrAGz5rUf3P5TZG4MXLplrtmj1xJjPCPU5_utqNwkfoiPuXn_NjAU35BvsfI8kvGva29JOptf5lHyEwo/s1600/News.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-SxhTBARJo0EuIXENKlWiDG6r_NrYP_20_qLY-qneLKRoNMY6IKKJKTsN3hgmrAGz5rUf3P5TZG4MXLplrtmj1xJjPCPU5_utqNwkfoiPuXn_NjAU35BvsfI8kvGva29JOptf5lHyEwo/s400/News.jpg" width="340" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=865&nid=5449&cat=Album" rel="nofollow" target="_blank">உரிமைக்கு குரல்; கடமைக்கு?</a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7fqPVgePx9XZa0E6vUOUI-H4lOKMb04Z2qr8djOz7e5_CfH0X50bYdkzHVYDyZxy71bWQXBxpLk4mu8DN6NPMwMOmXo0W71le7Qz-bg0qd-7dZWK07eXTlp7Jt28kSMWCsVbF4oGdkqA/s1600/Madurai+Vaigai.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="608" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7fqPVgePx9XZa0E6vUOUI-H4lOKMb04Z2qr8djOz7e5_CfH0X50bYdkzHVYDyZxy71bWQXBxpLk4mu8DN6NPMwMOmXo0W71le7Qz-bg0qd-7dZWK07eXTlp7Jt28kSMWCsVbF4oGdkqA/s640/Madurai+Vaigai.JPG" width="640" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=865&nid=6052&cat=Album" rel="nofollow" target="_blank">பரம்பரைச் சொத்து</a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiz7fpX-LG2PkTYhaGhL8FiPQQqW-Vm5kRBvQUCrp-Nc2uKZMFZjYt-25Sjwws3xST6AH9VR4YGEGOMeIEQ47lrI6mnNW27cD8kjRD-eSg79GtuEMRkt7rxUsrRxR9mbzDQ2qz_ZOjTMEA/s1600/Footboard_Travel.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="528" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiz7fpX-LG2PkTYhaGhL8FiPQQqW-Vm5kRBvQUCrp-Nc2uKZMFZjYt-25Sjwws3xST6AH9VR4YGEGOMeIEQ47lrI6mnNW27cD8kjRD-eSg79GtuEMRkt7rxUsrRxR9mbzDQ2qz_ZOjTMEA/s640/Footboard_Travel.JPG" width="640" /></a></div><br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=865&nid=6385&cat=Album" rel="nofollow" target="_blank">மனித உரிமை ஆர்வலர்கள்</a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgP8t_-OyX1NVMkqLrmBDD5oaj-b8fIwGaTINCD-bTtLCSuPm36QVDTKlLufQpW6eF2Ck54bCNyfHkeHhOBTb_dirLXUTEz03kY1bNAyjoSYzEWzUeb52tBnBKoiH6Ym-ECWzyK36-f2Gw/s1600/Death-Sentence.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="548" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgP8t_-OyX1NVMkqLrmBDD5oaj-b8fIwGaTINCD-bTtLCSuPm36QVDTKlLufQpW6eF2Ck54bCNyfHkeHhOBTb_dirLXUTEz03kY1bNAyjoSYzEWzUeb52tBnBKoiH6Ym-ECWzyK36-f2Gw/s640/Death-Sentence.jpg" width="640" /></a></div><br />
<br />
<pre style="text-align: -webkit-center;"><span style="color: red;">─────────o───╔═╗────╔═╗──────────────o───o────────o───────o─
─╔╦──╔╦─╔╦──╔╬─║╔╦─╔╬─║╔═╦╦╦──╔═╗║╔╦║╔╗─╔╦──╔╦─║─╔╦──╔╦─╔═╦╦</span>
<span style="color: #cccccc;">╔╬╬╦╔╬╬╗║╬╗╔╬╬╗║║║╔╬╬╗║╠╗║║║──╠╗║║║║║║║╔╬╬╗╔╬╬╗║╔╬╬╗╔╬╬╗╠╗║║</span>
<span style="color: #274e13;">╚═╝║╚═╝║║║║╚═╝║║║║╚═╝║║╚╝╚╝║──╚╝╚╝║║╚╬╝╚═╝║╚═╝╬╝╚═╝╝╚═╝╝╚╝║║
──────╔╝─╔╝──╔╝──╝──╔╝──────────────╚╩───╔╝╚══╝─────────────</span></pre><br />
<br />
சில கேலிச்சித்திரங்களை வெளியிட்டு பலரைச் சென்றடைய செய்த தினமலர் இணையத்ததளத்திற்கு நன்றி<br />
எழுத்து வடிவமைப்பு: <a href="http://dev.neechalkaran.com/p/ascii-tamil.html" target="_blank">மென்கோலம்</a></div>நீச்சல்காரன்http://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7988121523210741908.post-22630334525239691662013-06-24T22:30:00.002-07:002013-06-24T22:30:36.803-07:00லாபகரமாக மொய் வாங்குவது எப்படி?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
மொய் வாங்கலாம் என்றால், ஆயிரம் பொய் சொல்லியும் ஒரு கல்யாணத்தை நடத்துகிறோம். அதனால் தான் பொண்ணும் மாப்பிள்ளையும் வரும் முன்னரே மொய் நோட்டு மண்டபம் வந்துவிடுகிறது. நடக்கும் அதிகமான விசேஷங்கள் எல்லாம் மெய்யை நம்பி கடன் வாங்கி நடத்துவதாகவே உள்ளன. ஆனால் மொய் அதிகரிக்கும் நுட்பத்தைப் பலரும் அறிந்திலர். அதற்காக மண்டபம் போட்டு யோசித்த யோசனைகள் இதோ <br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgC2oXDRZKS0wHgUeJescVzYzpZaYt5FYfb1KFViybg7bFcZImF30sK26ZdXjHUVmfJ6Q4f9QgA_ccaX2S1tRuYxANcKjB8HS9NoCke32oZNr3SEbzi_B1Pe1GQYxgbzUWJEGfOg5Jnxh4/s1600/Moi_cartoon.jpg" imageanchor="1"><img border="0" height="265" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgC2oXDRZKS0wHgUeJescVzYzpZaYt5FYfb1KFViybg7bFcZImF30sK26ZdXjHUVmfJ6Q4f9QgA_ccaX2S1tRuYxANcKjB8HS9NoCke32oZNr3SEbzi_B1Pe1GQYxgbzUWJEGfOg5Jnxh4/s320/Moi_cartoon.jpg" width="400" /></a> <br /><a name='more'></a>
<ul><b>லெவல் 1</b>
<li>எ.டி.எம். எந்திரங்களுக்கு அருகிலுள்ள மண்டபங்களைத் தேர்ந்தெடுக்கவும்</li>
<li>சாப்பாட்டுப் பந்தி சிறப்பாகயிருக்க வேண்டும். சுவையோ, அளவோ, தரமோ குறையாதளவிற்குக் கவனிக்க வேண்டும்</li>
<li>போட்டோ எடுக்க என்று மேடைக்கு அழைக்கும் பெரியவர்களிடம்(பாக்கெட் இருப்பவர்கள்) விபூதி வழங்கக்கோரி விழா நாயகரைக் காலில் விழச்சொல்லவும்.</li>
<li>மொய்ப்பானையைச் சுற்றிய மஞ்சள் துணியை இறுக்கக் கட்டி ஒருவழிப்பாதையாக்க வேண்டும். சில்லறை கேட்பவர்களிடன் எடுக்கமுடியவில்லை என்று எடுத்துரைக்க வேண்டும்.</li>
<li>விழா நிச்சயமாக பொதுவிடுமுறை நாள் அன்று நடக்கவேண்டும்.</li>
<li>சாம்பள நாட்களுக்கு அருகில் விசேஷங்களை நடத்தலாம். அதனால் மொய் வைப்போரின் பை ஆரோக்கியமாக இருக்கும்</li>
<li>யாருக்கும் தெரியாமல் சிறிய அமௌன்ட் வைத்துக் கொடுக்க மொய் கவர் சிறந்த வழி என்பதால் , மொய் கவர் வாங்குவதை அறவே தவிர்க்கலாம். மொய் எழுதச் சொல்லி நாசுக்காக ஆலோசனை தரலாம்</li>
<li>கிரிடிட்/டெபிட் கார்டுகள் மூலம் மொய் வாங்கும் தொழிற்நுட்பத்தைப் புகுத்த வேண்டும். இணைய வழி பணமாற்றத்தையும் ஊக்குவிக்கலாம்</li>
<li>வெளிநாட்டினர் வருகிறார்கள் என்றால், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பு அதிகமாக இருக்கும் போது திருமணத்தை நடத்தலாம்.</li>
<li>முடிந்த அளவு பத்திரிகையில் அதிகமான உறவினர்கள் பெயர்களைப் போடவும், பெயர் போட்டதற்காகவே மொய் போடுவார்கள்</li>
<li>என்ன மச்சான் ஆளவே காணாம், அடுத்தக் கல்யாணம் உங்களுக்குத்தான்; என்ன மதினி நல்லா இருக்கீங்களா?; பெரியப்பா ஏன் கல்யாணத்துக்கு முதல் நாளே வரல?;மாமா புதுசா வீடு கட்டபோறேங்களாமே, என்று மொய் வைப்பவருடன் மொய் எழுதுபவர் பாசத்தைப் பொழிய வேண்டும்</li>
<li>குறைவாக மொய் எழுதியவரைவிட அதிகமாக மொய் எழுதியவரின் பெயரையும் பணத்தையும் பெரிதாக எழுதவும். நோட்டை பார்ப்பவர்களுக்கு எல்லாம் ஐநூறு ஐநூறாகத் கண்ணில் படவேண்டும் கவுரவக் குறைச்சலாக நினைத்து அதிகம் வைப்பார்கள்</li>
<li>ரூபாய் நூறுக்கு மேல் செய்பவருக்கு ஒரு டம்பர் இலவசம் என்று அறிக்கை வைத்து, வழங்கலாம்.</li>
<li>கடைசியாக, யாருக்கெல்லாம் மொய் செய்தீர்களோ அவர்களுக்கெல்லாம் மறக்காமல் பத்திரிக்கை வைக்கவும்</li>
அதுக்கும் மேல லாபம் வேண்டுமா!</ul>
<ul><b>லெவல் 2</b>
<li>டெல்லி உயர் நீதிமன்றத்தில் உள்ளதுபோல கருப்பு நிற சிசிடிவிகள்(CCTV) பொறுத்த வேண்டும்.பணம் கொடுக்காமல் பெயர் சொல்லிவிட்டு எஸ்' ஆகமுடியாது </li>
<li>மொய்வைப்பிடத்திற்கு அருகாமையில் யுனஸ்கோ அறிவித்துள்ள 70db அளவுகளுக்குள் தான் பாட்டு பொட்டிகளின் ஒலி அளவுகள் இருக்க வேண்டும்.</li>
<li>மொய் எழுதும் இடத்தில் நடக்கும் அடிதடிகளைக் கட்டுப்படுத்த காவல்துறை தகுந்த முன் ஏற்பாடுகள் செய்ய கேட்டுக் கொள்ளலாம்.</li>
<li>சில்லறைத் தட்டுபாட்டைத் தடுக்க, ரிசர்வ் வங்கி உடனடியாக திருமண மண்டபங்களுக்கு அருகே இந்திய நாணயக் கிடங்கின் விநியோக நிலையத்தை அமைக்க வேண்டி விண்ணப்பம் அளிக்கலாம். </li>
<li>உற்றார் உறவினர் வீட்டு விசேசங்களுக்குச் சென்று வர அரசு சம்பளத்துடன் கூடிய ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டி முதல்வருக்கு மடல் வரையலாம்.</li>
<li>வெளிநாடுவாழ் உறவினர்கள் மொய் எளிதில் செய்ய அந்நியச் செலாவணிக் கட்டணங்களை நீக்க நிதி அமைச்சகத்திற்குக் கோரிக்கைவைக்கலாம்.</li>
<li>50000 ரூபாய்க்கு மேல் வரும் மொய்ப் பணத்திற்கு வரிவிதிக்கும், வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 56(2)யை உடனடியாகத் திரும்பப் பெற பொது நலன் வழக்குத் தொடுக்கலாம்.</li>
<li>காகித மரக் கொள்முதலுக்கு முறையான தணிக்கை அமைத்து தரமான மொய் நோட்டுகள் தயாரிக்க இந்திய தரநிர்ணய ஆணையத்திற்கும், இந்திய வர்த்தகத்துறை அமைச்சகத்திற்கும் ஆலோசனை அனுப்பலாம்.</li>
<li>மொய் வைப்பதற்காக ஸ்டேட் பாங்க் வட்டியில்லாக் கடன் அளிக்க அவ்வங்கியின் கவர்னரைக் கேட்டுக் கொள்ளலாம்.</li>
<li>மொய் கணக்கைப் பரம்பரிக்க பிரத்தியேக மென்பொருள் ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரித்து வழங்க அந்நிறுவன வாடிக்கையாளர் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம்.</li>
<li>சில்லறை மொய் பரிவர்த்தனையில் நேரடி அந்நிய முதலீட்டை ஆதரிக்க வேண்டி தகுந்த சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசைக் கேட்டுக் கொள்ளலாம்.</li>
<li>பணம் எண்ணும் எந்திரங்களுக்கு மாநில அரசு மானியம் தந்து திருமணங்கள் சிறக்க மாநில வர்த்தக அமைச்சகத்தை வற்புறுத்தலாம் </li>
<li>இந்தியாவிலிருந்து வெற்றிலை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்து கொழுந்து வெற்றிலை கையிருப்பை மத்திய வேளாண் அமைச்சகம் உறுதி செய்ய கேட்கலாம்.</li>
<li>மொய் நோட்டில் எழுதும்விதமாக ஒவ்வொரு ஊரின் பெயர்களை அவ்வூரின் உள்ளாட்சித் தலைவரும், உறுப்பினர்களும் சுருக்கி எளிமை படுத்த முன்வர ஆலோசனை அனுப்பலாம்.</li>
<li>கல்யாணம்,காதுகுத்து போன்ற சுப நிகழ்வுகளுக்கு மொய் எழுதும் மேசைகளை அப்பகுதி அரசு பள்ளிகள் இரவலாக வழங்க மாநில அரசுகள் அணையிட/அல்லது அப்பள்ளி காவலர் அனுமதிக்க வேண்டி பேரணி நடத்தலாம்.</li>
</ul>
<br />
இதுக்கும் மேலையும் லாபம் வேணுமா?
அப்ப நீங்க எலக்ஷசனில் ஜெயித்து மந்திரியாகனுமே!
</div>நீச்சல்காரன்http://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7988121523210741908.post-56248290262489700992013-03-09T21:16:00.001-08:002013-03-09T21:16:16.541-08:00பரம்பரை நோய் <div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6-K8pA8e8l2KlDVKzIz4eeBBTLnRzjbLIXNV7Cg3d2vvJtGoMx33JXek8urN9SrBbIOGx4KsMrBfR475zhBolDmCv92V5s8aRZpNuRV1UsG06eOzBHHC076hCEdcrqQDWcoHkwxHsHd4/s1600/pasi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6-K8pA8e8l2KlDVKzIz4eeBBTLnRzjbLIXNV7Cg3d2vvJtGoMx33JXek8urN9SrBbIOGx4KsMrBfR475zhBolDmCv92V5s8aRZpNuRV1UsG06eOzBHHC076hCEdcrqQDWcoHkwxHsHd4/s1600/pasi.jpg" height="317" width="320" /></a></div><br />
விக்கலில் எகிறிக் <br />
குதித்த சிறு குடல் <br />
ஏமாற்றத்துடன் <br />
புரண்டு படுத்தது <br />
<br />
சுவாசத்துடன் உள்சென்ற <br />
பிராணவாயு ஓட்டியசுவறொன்றில் <br />
முட்டிக் கொண்டு <br />
பெருமூச்சாய் ஏக்கப்பட்டது <br />
<br />
உயிருப்பை உறுதி செய்ய <br />
பொறுப்பான ஒரு சுய <br />
சமிக்ஞைக் கருவி <br />
வயிற்றைவிட்டால் வேறில்லை <br />
<br />
வயிறு உறுமிக் <br />
காட்டிக்கொடுத்த பசிக்குத் <br />
ஆயுள் முழுதும் தீனி <br />
போட்டாக வேண்டும் <br />
<br />
இரண்டு துளைகளுக்கு <br />
நடுவே நடக்கும் <br />
பட்டினிப் போரில் <br />
பசி பிறந்து விடுகிறது. <br />
<br />
பசியோடு தொடங்கியது <br />
பசிக்கு இயங்கியது <br />
பசியால் வளர்ந்தது <br />
பசிக்காக மடியுது உலகு <br />
<br />
புத்தகத்தில் படித்து இதுவென்று <br />
புரிந்து கொண்டனர் -பணவான்கள் <br />
பரம்பரை நோய் இதுவென்று <br />
பழகிக் கொண்டனர் -பாட்டாளிகள்<br />
<div style="text-align: center;">------------</div><br />
வார்ப்பு கவிதை இதழிலும் <a href="http://www.vaarppu.com/view/2719/" rel="nofollow">படிக்கலாம்</a>நீச்சல்காரன்http://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7988121523210741908.post-1615012434001087672012-10-06T11:37:00.002-07:002012-10-06T11:37:13.602-07:00நகரமயம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrJS-ZO1ycvuViIX_Q9gFt1Er5P9wMWUjD05BJYahh8fuy7toZwNXXVlpdQrm3tLpL1tqX66K3U248yMzHwITdg4e5XQbHMDkjKVCIoNS-rSARTUCr8fahKyCVBsVGyfgGl3a1h_CG4EE/s1600/Desert+Libia.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="261" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrJS-ZO1ycvuViIX_Q9gFt1Er5P9wMWUjD05BJYahh8fuy7toZwNXXVlpdQrm3tLpL1tqX66K3U248yMzHwITdg4e5XQbHMDkjKVCIoNS-rSARTUCr8fahKyCVBsVGyfgGl3a1h_CG4EE/s400/Desert+Libia.jpg" width="400" /></a></div>
<br />
பதியம் போட்டுப் புதிப்பிக்க <br />
வேண்டிய உறவுகள் நேரமின்றி <br />
செல்போன் டவர்களின் வாயிலாக <br />
ஹலோ சொல்லி முறிந்து கொள்கிறது.<br />
<a name='more'></a><br />
புத்தனுக்காக போதிமரங்கள்<br />
காத்திருந்த வேளையில்<br />
சாலை விரிவாக்கத்திற்காக<br />
வெட்டப்படுகிறது<br />
<br />
நகரெல்லாம் தாகம் தணிக்க<br />
வந்த ஆற்றின் மீது <br />
நரகலுடன் <br />
சாக்கடை கலக்கப்படுகிறது.<br />
<br />
விதைகள் பிரசவிக்கப் பொறுத்திருந்த<br />
நேரத்திலே பறந்து<br />
வந்தன பிளாஸ்டிக் பைகள்<br />
தூக்குக் கயிறுகள் வடிவிலே<br />
<br />
மெட்டல் சாலை போடும் வரை<br />
காத்திருந்து தோண்டப்பட்டன <br />
சாலைகள்<br />
மூடப்படும் தேதியில்லாமல்<br />
<br />
கனவிலும் மின்சாரம் வரக்கூடாதென்று <br />
இரவெல்லாம் மின்வெட்டு<br />
வருங்கால எடிசன்களை<br />
டார்ச் கொண்டு தேடுகிறார்கள்<br />
<br />
<a href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21075:2012-09-07-14-48-55&catid=2:poems&Itemid=265" rel="nofollow" target="_blank">கீற்று இணைய </a>இதழிலும் படிக்கலாம்</div>
நீச்சல்காரன்http://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7988121523210741908.post-13172676765735127462012-09-22T18:07:00.000-07:002012-09-22T18:07:00.539-07:00ஒட்டகமும் புலிகேசியும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
போர்க்களத்தில் புட்பால்(கால்பந்து) ஆடிக்கொண்டிருந்த புலிகேசி அரசரிடம் ஒற்றன் ஒருவன் ஒரு ஓலையைத் தந்து, ஓடிவந்த களைப்பில் மயங்கி விழுந்தான். பசி மயக்கத்தில் அந்த ஓலையை உண்ணத் தொடங்கியது ஓர் ஒட்டகம். அந்த ஒட்டகத்தின் வாயிலிருந்து பிடிங்கி ஓலையைப் படித்துப்பார்த்தார் புலிகேசி. ஏதோ எதிரி நாட்டுப் பெரும் படை ஒன்று இந்நாட்டுப் போர்க்களம் நோக்கி வருவதாகச் செய்தி இருந்தது. அதை அறிந்து புள் பிடுங்க, பந்துபொறுக்கிப் போட, விசில் அடிக்க வந்த படை வீரர்களும், போஸ்டர் ஓட்ட, கொடிபிடிக்க, காலில் விழ கூட்டிவந்த அமைச்சர்களும், மொக்கைபோடவும், சடை போடவும் வந்த அரசிமார்களும், அரசருடன் சேர்ந்து கிலி கண்டனர். யாவரும் செய்வதறியா திகைத்து நின்றனர். தொடங்கியது மன்னரின் உரையாடல்....<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh__5YYKsy9gMXTVsBDBOnDp33iBlCAaWxenFt6XCM6uYLM9vg72E0r2_zvASuoxMI-_Aw7Hjksjljp4LqvOU0MMYRdw4ITDwApdwEM4UqoRx9Tmo7XQxPNH-LUYXKvOrXwwy1o5_EnYAs/s1600/pulikesi+camel.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh__5YYKsy9gMXTVsBDBOnDp33iBlCAaWxenFt6XCM6uYLM9vg72E0r2_zvASuoxMI-_Aw7Hjksjljp4LqvOU0MMYRdw4ITDwApdwEM4UqoRx9Tmo7XQxPNH-LUYXKvOrXwwy1o5_EnYAs/s400/pulikesi+camel.jpg" width="400" /></a></div>
<br />
<a name='more'></a><br />
"நமது ஜெட் விமானங்கள் எல்லாம் தயார் நிலையில் தானே உள்ளன"<br />
"விமானமெல்லாம் தயாராகத்தான் உள்ளது ஆனால் அதை ஓட்டுபவர்களெல்லாம் சம்பளப் பாக்கி கேட்டு வேலைநிறுத்தம் புரிகிறார்கள் அரசே!"<br />
"துரோகிகள்! சரி நமது ஏவுகணைகளைக் குறிபார்த்து நிறுத்தி விடலாமா?"<br />
"நமது தொலை நோக்கிகள் எல்லாம் துரு பிடித்துவிட்டன, அதனால் ஏவுகணையைத் தோராயமாகத்தான் ஏவமுடியும். அது விழுமிடத்தில் எதிரிகளை வரவைத்தால், இதைச் சிறப்பாகப் பயன்படுத்தமுடியும் அரசே!"<br />
"உமக்கு ஹுமர் அதிகமாகிவிட்டது அமைச்சரே! அதை விடும், துப்பாக்கியும் தோட்டாக்களும் தயாராகவுள்ளதா?"<br />
"துப்பாக்கி கொள்முதலில் நடந்த ஊழல் காரணமாக, துப்பாக்கிகள் எல்லாம் நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது அரசே!"<br />
"ஆமாம் அந்தத் துப்பாக்கிகள் இருந்தால் மட்டும் சுட்டுவிடவாப் போகிறது. அடுத்து... எத்தனை துணை இராணுவப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்?"<br />
"நாட்டிலுள்ள உங்கள் சிலைகள் அனைத்தையும் பாதுகாக்கும் பணியில் மும்மரமாகவுள்ளனர் மன்னா!"<br />
"ஆமாம் பாதுகாப்பில்லை என்றால் சிலைகளை உடைத்துவிடுவார்கள். அவர்களை விடும், உடனடியாகக் கிடைக்கக் கூடிய ஆயுதங்கள் என்னதான் உள்ளன?"<br />
"மன்னா! அருங்காட்சியகத்தில் போர்வாள்கள் அதிகமாகவுள்ளன, அவற்றை சாணை பிடித்து பயன்படுத்திக் கொள்ளலாம் அரசே!"<br />
"சபாஸ்! உடனே தொடங்குங்கள் இன்றிரவிற்குள் அனைத்தும் தயாராக வேண்டும், எதிரிகளின் தலை அதில் உருள வேண்டும்"<br />
"ஆனால் அவற்றைச் சாணை பிடிக்கவேண்டும் அவசரமாக 700 ரூபாய் வேண்டும் அரசே!"<br />
"ஐயே! நான் ATM கார்டை அரண்மனையிலேயே மறந்துவிட்டேன் அமைச்சரே. உமது கார்டில் பணத்தை எடுத்து வாளைத தீட்டு!"<br />
"எனது கார்டின் கையிருப்பு 699 மட்டுமே மன்னா!"<br />
"பரவாயில்லை ஒரு போர்வாளை மட்டும் குறைத்துக் கொண்டு மற்றவற்றை இந்தப் பணத்திற்கு சாணைபிடி."<br />
"அதில்வொரு சிக்கலுள்ளது, விடியும் வரை இப்பகுதியில் மின்வெட்டு அமலில் உள்ளது, ATM எந்திரங்கள் பணிபுரியாது மன்னா!"<br />
"அய்யயோ!உடனடியாக இப்பகுதிக்கு மின்சாரம் வேண்டி மின்துறை அமைச்சருக்கு ஒரு போன் செய்யவும்."<br />
"போன் கம்பெனிகாரர்கள் ஐ.டி. புருப் கேட்டு தொலைப்பேசி இணைப்பை நிலுவையில் போட்டுவிட்டார்கள் மன்னா!"<br />
"புறாத் தூது அனுப்புங்கள்."<br />
"புறாக்களெல்லாம் புத்துணர்ச்சி முகாமிற்குச் சென்றுள்ளது அரசே!"<br />
"கார்ட் ஏற்கப்படும் கடைகளுக்குச் சென்று சாணை பிடிக்கவும். அங்கு ஜெனெரேட்டர்கள் இருக்குமல்லவா!"<br />
"ஜெனெரேட்டர்கள் உண்டு ஆனால் டீசல் விலையேற்றத்தால், பற்றாக்குறை உள்ளது"<br />
"ம்ம்.. இந்தக் குதிரை வண்டிகளை அடகுவைத்து சாணை பிடிக்கலாமே"<br />
"இவைகளெல்லாம் வாடகை வண்டிகள் மன்னா! அடகுக்கு ஆணையிடமுடியாது மன்னா!"<br />
"கிழக்கே ஒரு கருங்கல் மலையிருந்தே அதில் நமது வீரர்களை விட்டு தீட்டிக்கொள்ளச் சொல்லுங்கள்"<br />
"அதைத் தான் கிரானெட் குவாரிக்கு விற்றுவிட்டோமே அரசே!"<br />
"சரி, கையிருப்பாக எத்தனை அம்பும் வில்லும் உள்ளன?"<br />
"ஒலிம்பிக் பயிற்சி ஆட்டத்திற்கு எல்லா வில்லும் செலவாகிவிட்டது மன்னா!"<br />
"வேல் கம்புகளவது உள்ளதா?"<br />
"அதில் தான் இந்தக் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது மன்னா!"<br />
"வேறு எந்த ஆயுதம் தான் நம்மிடம் உள்ளது?"<br />
"சிகை அலங்காரத்திற்கு எடுத்துவந்த ஒரு கத்திரிக்கோலும், பிளேடும் உள்ளது அரசே!"
<br />
<br />
அவமானத்தின் விழும்பில் அரசர் விம்மிக் கொதிக்கையில் அந்த ஒட்டகமே காரித் துப்பியது. ஆனால் உண்மையில் அரசரைப் பார்த்து ஒட்டகம் துப்பவில்லை, ஒற்றன் கொண்டுவந்த மீதி ஓலையை மெல்லமுடியாததால் துப்பியது. எதிரி நாட்டுப் படைகள் எல்லாம் போருக்கு வந்தவையல்ல, திரைப்பட ஒளிப்பதிவிற்கு வாடகைக்கு வந்துள்ளவை என்ற மீதி செய்தியை அந்த ஓலையிலிருந்து அறிந்து துள்ளிக் குதித்து, அந்த ஒட்டகத்திற்கு டாக்டர் பட்டம் வழங்கினார் புலிகேசி.
<br />
<br />
<span style="font-size: x-small;"><b>பொறுப்புத் துறப்பு:</b> இப்புனைவில் வரும் நிகழ்ச்சிகள் எல்லாம் சமகால அரசியல் நிகழ்வுக்கு ஒத்திருந்தால் அது தற்செயலே</span></div>
நீச்சல்காரன்http://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7988121523210741908.post-70749789077463430062012-09-09T23:48:00.000-07:002012-09-09T23:48:49.281-07:00வைர மச்சம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">உலகெல்லாம் புகழ் பெற்ற ஜெய்ன் டெயிலர் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு(முயற்சி). <br />
<br />
<center><b>தகதகக்கும் சிறு தாரகை</b><br />
</center><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfDSXlJ-fH5W91C6eNFV35PtqXVozgh0WYT_ixi0CffU2EsKwJgjcwgyHYwLAOxxq_hyphenhyphenWu4byPlB6CJusv_WGgGh2ZDosFmGAMmm6VVrc7pP7ML9qYEcCqDiJrmblLO0_DJxzU3VeDddE/s1600/Star.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="265" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfDSXlJ-fH5W91C6eNFV35PtqXVozgh0WYT_ixi0CffU2EsKwJgjcwgyHYwLAOxxq_hyphenhyphenWu4byPlB6CJusv_WGgGh2ZDosFmGAMmm6VVrc7pP7ML9qYEcCqDiJrmblLO0_DJxzU3VeDddE/s400/Star.jpg" width="400" /></a></div><br />
<br />
தகதகக்கும் சிறு தாரகையே!<br />
வியப்பளிக்கும் பெரு விந்தையே!<br />
உலக எல்லையின் உச்சம்,<br />
வானத்தின் வைர மச்சம்.<br />
<a name='more'></a><br />
<br />
கதிரவன் விழி நித்திரை கொண்ட நேரம்,<br />
கலைஞனிவன் ஒளி கார்த்திகைத் தீபம்.<br />
இவன் சிரிப்பில் சிதறிய சொச்சம்,<br />
இருண்ட இரவுக்கெல்லாம் வெளிச்சம்.<br />
<br />
<br />
குன்றிய தீப்பொறிக்கெல்லாம் இருளில்,<br />
நன்றி சொல்வதோ பாதசாரிகள்.<br />
உன் மின்னல் உத்தரவின்றி,<br />
இன்னல் செய்கிறது இரவுச் சாலைகள்.<br />
<br />
<br />
மறைந்திருந்து எப்போது பார்த்தாலும்,<br />
நிறைந்திருந்து நீலவானத்தை உயிரூட்டுவான்.<br />
வானத்து இப்பாலகன் உறங்கமாட்டான்,<br />
சயனத்து ஆதவன் எழும்பாதவரை.<br />
<br />
<br />
உருவில் சூரியனுக்குப் பிணக்கானாலும்,<br />
இரவில் வறியவருக்கு விளக்காவான்.<br />
யாரிவனென அறியில எனது சிந்தை,<br />
தகதகக்கும் சிறு தாரகை.<br />
<br />
<br />
தகதகக்கும் சிறு தாரகை,<br />
வியப்பளிக்கும் பெரு விந்தை.<br />
உலக எல்லையின் உச்சம்,<br />
வானத்தின் வைர மச்சம்.<br />
<br />
- நீச்சல்காரன்<br />
<br />
<br />
மூல வடிவம்:<br />
<br />
<b>Twinkle, Twinkle, Little Star<br />
</b><br />
Twinkle, twinkle, little star,<br />
How I wonder what youare.<br />
Up above the world so high,<br />
Like a diamond in thesky.<br />
<br />
When the blazing sun is gone,<br />
When he nothing shinesupon,<br />
Then you show your little light,<br />
Twinkle, twinkle, all thenight.<br />
<br />
Then the traveller in the dark,<br />
Thanks you for your tiny spark,<br />
He could not see which way to go,<br />
If you did not twinkle so.<br />
<br />
In the dark blue sky you keep,<br />
And often through my curtainspeep,<br />
For you never shut your eye,<br />
'Till the sun is in the sky.<br />
<br />
As your bright and tiny spark,<br />
Lights the traveller inthe dark.<br />
Though I know not what you are,<br />
Twinkle, twinkle,little star.<br />
<br />
Twinkle, twinkle, little star.<br />
How I wonderwhat you are.<br />
Up above the world so high,<br />
Like a diamond in thesky.<br />
<br />
-Jane Taylor<br />
<br />
</div>நீச்சல்காரன்http://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7988121523210741908.post-2326612752132154922012-04-24T18:51:00.002-07:002012-04-24T19:00:24.469-07:00டைம் மெஷின்<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrzeJO1mFlVjgp0RycsX3s1VxwxpnfFZ5mnAQcU3vZWL1Snh9j4MaM2BFtdcK2jdIjxi089jE9lyZrGsOzf99UeIlELn7i4kP12-dw_WJlsqANQeDi6IwmEOQFs0v16AKSyqchWWxLOEQ/s1600/Time+machine.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="275" width="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrzeJO1mFlVjgp0RycsX3s1VxwxpnfFZ5mnAQcU3vZWL1Snh9j4MaM2BFtdcK2jdIjxi089jE9lyZrGsOzf99UeIlELn7i4kP12-dw_WJlsqANQeDi6IwmEOQFs0v16AKSyqchWWxLOEQ/s320/Time+machine.jpg" /></a></div><br />
"... சரி முடிவா நாளைக்கு வாங்க கணக்கை முடுச்சுக்கலாம்" என்று போனை அணைத்தான். அப்போது மணி 23:00 என காட்டிக்கொண்டிருந்தது, இன்னும் சூரியன் மறையவில்லை. நேற்றைய பொழிவை விட இன்று காஸ்மிக் கதிர்களின் எண்ணிக்கைக் குறைந்தேயிருந்தது. அதன் அதிர்வெண்கள் கணிக்கக் கூடியதாகவே இருந்தது. வானமும் மிதமான வெப்பநிலையும் அதிகம் மேகமும் இல்லாமல் அதிகமான பறவைகள் பறந்து கொண்டிருந்தன. மசால் வடை வாங்கி வந்த வேலைக்காரன், "ஐயா! இந்த கடிகாரத்துக்கு பேட்டரி தீர்ந்துருச்சு நாளைக்கு வரும் போது புது பேட்டரி வாங்கி வரவா?" என்றான். சிரித்துக் கொண்டே "அதை நாளைக்கு சொல்லுறேன்" என்றான் வினித். கொஞ்சம் தயங்கித் தயங்கி கிளம்பவா என்ற வேலைக்காரனிடம் "கவலைப்படாதே நாளைக்கு உன் சம்பள பாக்கி அனைத்தும் தருகிறேன்" என்று கனிந்தான் வினித்.அன்று, பக்லரின் நண்பர் பேஜியிடம் இருந்து அழைப்புகள் வந்த வண்ணமிருந்தது, எதற்கும் பதில் சொல்லவில்லை. கடன்பட்டார் நெஞ்சம் போல இருக்கவேண்டிய இவன் முந்திரி பட்டர் பிஸ்கட் போல குஷியாகயிருந்தான்.<br />
<br />
வினித், கொலம்பியா யுனிவர்சிடியில் படித்த காஸ்மாலஜிஸ்ட் பேன் பக்லரின் அசிஸ்டன்ட். பக்லர் ஒரு வித்தகர், விஞ்ஞானி, ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவ பேராசிரியர். அவரின் முதல் மற்றும் கடைசி அசிஸ்டன்ட் இவன் என்ற காரணத்தால் பக்லர் தனது முதல் மற்றும் கடைசி கண்டுபிடிப்பான ரகசிய டைம்மெஷினை பற்றி கொஞ்சம் கற்றுக் கொடுத்துள்ளார். அந்த மெஷின் பேசும், பொய் சொன்னால் கண்ணைக் குத்தும், வாட்ச் ரீபேர் எல்லாம் செய்யும் என்று கற்பனை செய்து கொண்டிருந்த வினித்திற்கு, ஒரு நாள் உண்மை தெரிந்துவிட்டது. அந்த மெஷினில் தனது எல்.கே.ஜி.யில் தொலைத்த கர்சீப்பை கண்டுபிடிக்க ஆசைப்பட்டான்; பத்தான் கிளாஸ்சில தொலைத்த சைக்கிளை கண்டிபிடிக்க ஆசைப்பட்டான்; தன்னை உதவாக்கரை என்ற காலேஜ் HODயின் மகளைக் கண்டிபிடிக்க ஆசைப்பட்டான் ஆனால் பக்லர் அதற்கு முன் ஆய்வுக்காக லண்டன் போய்விடார். அவன் தங்கியிருப்பது படீஸ்பர்க் நகரிலுள்ள பக்லரின் ஆய்வுக்கூடம். பக்லர் இருக்கும் வரை ஊரைச் சுற்றி பலருக்கு கடன் கொடுத்திருந்தார் அவருக்கு பிறகு விடாமுயற்சியின் பலனாக இன்று ஊரைச் சுற்றி கடன் வாங்கிவிட்டான்.<br />
<br />
ஊரெல்லாம் கடன்வாங்கி அதனை அடைக்க மீண்டும் ஒரு கடன் வாங்கி அதனை அடைக்க மீண்டும் கடன் வாங்க முயற்சித்து காலைக்கடன் செய்கையில் சிந்தையில் சட்டென்று பட்டது ஒரு விஷயம், ஆப்பிளைக் கண்ட நியூட்டன் போல யோசிக்கத் தொடங்கினான். டைம்மெஷினை இயக்கும் வழிமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக பக்லரின் டயிரியிலிருந்து அறிந்து கொண்டான். மீண்டும் அதிகமாக கடன் வாங்கினான். கொஞ்சம்காலம் கழிந்தது; வானம் ஒருநாள் தெளிந்தது; அந்த நாள் இன்று வந்தது; பக்லரும் வீட்டுக்கு திரும்பும் நாள். வினித்துக்கோ அது பல நாள் திட்டத்தின் அறுவடை நாள். காலை விடிந்தது, வழக்கத்திற்கு மாறாக பலர் வீட்டு வாசலில் கடனை திருப்பிக் கேட்டுக் கத்திக் கொண்டிருந்தனர். அதில்வொருவர் "நீங்கள் கம்ளைன்ட் கொடுத்தாத்தான் இவனை ஸ்டேஷனுக்கு இழுத்துட்டு போகமுடியும் ..." என்று போலீஸ் கம்பீரத்துடன் சொல்வது வினீத் காதில் விழுந்தது. சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்து, தனது திட்டப்படி டைம்மெஷின் மூலம் எதிர் காலத்திற்கு சென்று விட எத்தனித்தான். பட்டன்களை அழுத்து இயக்கத்தை முடுக்கிவிட்டான்.<br />
<br />
பத்துவருடங்கள் முன்னோக்கி பயணித்து அதே இடத்தை அடைந்தான். பெரிய யுகப்புரட்சி செய்த மகிழ்ச்சியில் அந்த இடத்தை விட்டு வெளியே வந்தான். "நீங்கள் கடன் வாங்கிவிட்டு பத்து வருடம் தலை மறைவான குற்றத்திற்காக கைது செய்கிறோம்" என்றார் கைவிலங்குடன் வந்த ஒரு போலீஸ்.<br />
<br />
<a rel="nofollow" href="http://atheetham.com/story/timemachine">அதீதம் இதழிலிருந்து</a> மீள் பதிவாக இங்கும்நீச்சல்காரன்http://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7988121523210741908.post-58159439135800660252012-03-25T19:07:00.001-07:002012-03-25T19:07:58.576-07:00கண்ணாடி ரோடு<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgCWETdj7MqS_v2GZ-kwTQXa_akG_GLUH96pQKjKKIjU0bO69ioQr57j1fZYOxC-IllSKf2hPWeyLzVEmqxUmyTlqA46-p0u4lEt45SbfXaZTFtlXtvSECrNQ9_Ieo4OSTEJKp-w2fG9k/s1600/Sello+Tape.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="232" width="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgCWETdj7MqS_v2GZ-kwTQXa_akG_GLUH96pQKjKKIjU0bO69ioQr57j1fZYOxC-IllSKf2hPWeyLzVEmqxUmyTlqA46-p0u4lEt45SbfXaZTFtlXtvSECrNQ9_Ieo4OSTEJKp-w2fG9k/s320/Sello+Tape.JPG" /></a></div>
சிதறிப் போனவையையும் <br />
கீறல் விழுந்தவையும் <br />
மீண்டும் காகிதமாக <br />
தன்னைக் கிழித்துக் கொள்பவன்<br />
<br />
பணத்தில் பாகப்பிரிவினை<br />
நடக்காமலிருக்க கண்ணாடி <br />
ரோடுபோடும் காண்ராக்டர்<br />
<br /><a name='more'></a>
அஞ்சல் தலைப் பொட்டிட்ட <br />
காகிதப் பொட்டிகளைப்<br />
பூட்டிக் கொண்டு <br />
தபால்காரருடன் ஊர்சுற்றுவான்<br />
<br />
உடைந்த பொம்மை <br />
இணைக்கப்பட்டது <br />
இவனை உடைத்து<br />
<br />
அறிக்கையை கவ்விக் கொண்டு <br />
தகவல் உரைக்கும் பலகையில் <br />
படுத்துக்கொள்வான்<br />
<br />
முறுக்கை வயிற்றில் கட்டிய<br />
பாலித்தீன் பையின் வாயைக் <br />
கட்டும் வித்தகன்<br />
<br />
ஸ்டேபிளர் பின்களின் <br />
கடியிலிருந்து பொட்டலங்களை <br />
மீட்க வந்த மஹா புருஷன்<br />
<br />
செல்லாத நோட்டுக்களை <br />
செல்ல வைப்பதால்<br />
நீ செலோ டேப் என்று <br />
அன்புடன் அழைக்கப்படுவாய்<br />
<br />
***
<a href="http://www.tamiloviam.com/site/?p=2045" rel="nofollow">தமிழ் ஓவியம் </a>இதழிலிருந்து மீள்பதிவுநீச்சல்காரன்http://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.com2