Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Tuesday, October 20, 2009

இரண்டு காதல் கவிஞர்கள் மீண்டும் சந்தித்த வேளையிலே வார்த்தை வரவில்லை கவிதை தான் வருகிறதாம்

இவள்இவன்

அவிழ்ந்த கனவுகளை
வாறுகிறேன்
பேணுகிறேன்
எனக்காக இல்லை
நீ தரும் பூக்கள்
அரங்கேற்றம் காண

நான் தரும் பூக்கள்
மலிவானது எனயென்னாதே
நீ சூட்டியபின் அது
விலைமதிப்பற்றதாகும்
ஆனால் அதுகூட உன்
சிரிப்புக்கு
இணையாகமுடியாது

உன்சிரிப்பொலியின்
எதிரொலிகள் நான்
உறங்கும் போதும் என்
கனவறையில் உலாவுகிறது
சத்தமின்றி

உன் விழிகளில் துளைத்த
என் தூக்கத்தை தேடுகிறேன்
கண்டுவிட்டேன் காரணத்தை
நீ என் விழிகளுள்
உறங்குகிறாயென்று

உன் விழிகள் என்னை தழுவும்போது
என் விழிகள் மட்டுமே நாணுகிறது
ஆனால் இதயம் உன் நினைவுகளில்
மட்டும் தான் நீந்துகிறது

கன்னிராசிக்காரி
உன் மீன் விழி
என் மேல் விழுந்ததிலிருந்து
நான் மீன ராசிக்காரன்
ஆகிவிட்டேன்

கிழிக்க மனமின்றி கிழித்தேன்
காதல் நாட்காட்டியின்
பக்கங்களை
உன் ராசிக்கு நானென்றும்
என் ராசிக்கு நீயென்றும்
கடிதம் வரைவதால்

நீ கிழித்த என்
காதல் கடிதத்திலும்
கண்டேன் உன்
விரல் ரேகைகள்
என் வார்த்தைகளோடு
உரசலாக பேசுவதை


தொடர்புடைய பகுதி:
இவள் பாதி இவன் மீதி-I

2 மறுமொழிகள்:

Tamilparks said...

அருமையாக உள்ளது ஒவ்வொரு படைப்புகளும் வாழ்த்துக்கள்,
எமது வலை http://tamilparks.50webs.com

நீச்சல்காரன் said...

Nandri