Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Saturday, November 7, 2009

செந்தில்:அண்ணே அண்ணே!உங்க கடைய வாங்குறதுக்கு ஆள் கூட்டிட்டுவந்திருக்கேண்ணே
கவுண்டமணி:டேய் நான் உங்கிட்ட கடைய விக்கிறேனு சொன்னேனாடா
செ:அதுயில்லணே, அவருதான் கடையவாங்கி தந்தா ஜாதகம் கத்துதாரேனாரு
க:படுவா, ஜாதகம் பார்க்க ஆளகூட்டிட்டுவானா கடையவே முட ஆளகூட்டிட்டுவந்திருக்க!
"சார் கூச்சப்படாம விலைய சொல்லுங்க"
க:டேய் இவனே பேருச்சம்பழத்துக்கு காரவிக்கிறவன் அவன நம்பிவந்திருக்கையே கடையும்கிடையாது இடமுகிடையாது ஓடிபோயிரு
செ:போங்கண்ணே வந்த கஸ்டமர விரட்டிட்டேங்க இந்த மாதிரி எஜிகேட் பேமிலியிலயிருந்து யாராச்சும் கிடைப்பாங்களா.
க:அய்யோ..எப்பா...இங்க பாருடா இவர்பெரிய பில் கேட்ஸ் நீயொரு ஜார்ஜ் பூஸ் வந்துட்டானுங்க பிஸ்னஸ்பேச. டேய் ஜாதகம் கத்துக்கனுமின்ன என்ன மாதிரி அறிவாளிககிட்ட கேட்டு கத்துகோடா
செ:அப்படியாண்ணே அப்ப மொதயிருந்து சொல்லிதாங்கண்ணே
க:இதுக்குதாண்ட்டா ஊருக்குள்ள ஒரு ஆல்-இன்-ஆல் அறிவுராஜாயிருக்கனுங்கிறது.டேய் மண்டைய்யா ரொம்ப நாளுக்கப்புறம் ஒரு ஜாதகம் கிடைச்சுருக்கு இத வச்சே இந்த வாரத்தயோட்டிருளாமுனுயிருக்கே.அப்படியே நீயும் கத்துக்கோ,
செ:அண்ணே நீங்கபெரிய அறிவாளிண்ணே
க:டேய் நா ஐடியா டிப்போடா, உனக்கு தெரியுது இந்த ஊர் மக்களுக்கு தெரியலயே
செ:இதெல்லாம் போய் சொல்லனும்ண்ணே
க:உன்ன எதுக்கு வச்சிருக்கே இதயெல்லாம் போய் சொல்லனும்டா
செ:சரிண்ணே! இதவச்சுயென்னா செய்யனும்
க:அதுவா! இந்த இந்தாமுஞ்சிதான் மாப்பிள்ளை, இந்தாஇதுதான் பொண்ணு இதுரெண்டுக்கும் பொருத்தம் பார்க்கணும்
செ:அண்ணே எனக்கு ஒரு சந்தேகம்?
க:என்னட..
செ:அதாவது பத்து பொருத்தம் பத்து பொருத்தம்ங்கிறாங்களே இவுங்க ரெண்டு பேருதான் இருக்காங்க மீதி எட்டு பேரு எங்கண்ணே
க:அடி நாயே! வாயிலே அடிப்பேன்! இவுங்க ரெண்டு பேருதான் அவங்களுக்கு பத்து பொருத்தம் சேருதானு பார்க்கனும்
செ:அப்படியாண்ணே! அண்ணே ஒரு இன்டலிஜெட் கேள்வி!
க:இன்டலிஜெட்டா நீ கேட்க போற.. சரி கேளு
செ:பத்து பொருத்தத்தில நாலு பொருத்தம் சேரலைனா யென்ணாணே செய்வீங்க
க:பழுக்காத பழத்தைக்கூட புகைபோட்டு பழுக்கவச்சிருவேன்டா இந்த அறிவுராஜா ஒம்போதென்ன பத்து பொருத்தம் சேரலைனாலும் சேர்த்து வைப்பேன்டா
செ:மொத பொருத்தம் என்னாண்ணே?
க:அப்படி வா வழிக்கு, மொத தினப்பொருத்தம். ரெண்டு பெயரோட பிறந்த தேதியில எல்லா கிரகங்களும் சரியாயிருக்கானு பார்க்கனும்.(செந்தில் எந்திருச்சு போக) டேய் எங்கடா போற
செ:அடயிருங்கண்ணே! பயாஸ்கோப் எடுத்துட்டுவாறேன் அப்பதான் கிரகம் கரெட்டாத் தெரியும்
க:டேய், நீ வாங்குற அஞ்சு பத்து பிச்சைக்கு பயாஸ்கோப்பாகேட்குதா! அது பேரு டெலஸ்கோப்டா.
செ:அண்ணே அப்ப அடுத்தத சொல்லுங்க
க:அடுத்ததுக்கு பேரு கணப்பொருத்தம்
செ:அண்ணே அப்ப ரெண்டு பேரையும் தராசுல வச்சு பார்க்கணுமா?
க:அட நாயே! எட்டிகுதிச்சு ஓடிபோயிரு, உனக்கெல்லாம் ஜாதகம் கத்துதரமுடியாதுடா சாமி.
செ:அண்ணே கோச்சுகிறாதேங்கண்ணே எனக்கு வசியப் பொருத்தம் மட்டுமாவது சொல்லிதாங்கண்ணே
க:நீ எதுக்கு அடிப்போடுறனு எனக்கு தெரியுது..வேணாம்ட..இது நல்லது இல்ல சொல்லிட்டேன்
செ:அதில்லண்ணே நான் கத்துகிட்டு உங்களுக்கு போட்டியா வந்திருவேனு பயம்ண்ணே உங்களுக்கு
க:மும்பை மாநகரத்துல ராமசந்திரா யுனிவர்சிடில படிச்ச எனக்கு போட்டியா நீயா வருவா போடா ஹே போடா
செ:அப்ப எப்படி ராசி பொருத்தம் பார்க்குறது தயிரியமா சொல்லிதாங்கண்ணே
க:இந்த டகால்டி வேலையெல்லாம் எங்கிட்ட வைச்சுக்காத சொல்லிக்கொடுத்தா ஒரு உத்தமனுக்குத்தா சொல்லித்தருவேன்.
{கவுண்டமணி மனைவி கூப்பிட}
செ:அண்ணே உங்க சம்சாரம் கூப்டுறாங்கண்ணே என்னனு கேட்டுவரவா!
க:டேய்... நீயிருந்து கடையபாத்துக்கோ நா போனவுடனே வந்திருறேன்.
{சற்று நேரங்கழித்து வருகிறார்}
செ:தானம் கொடுத்த கோழிக்கு பல்ல பிடிங்கிபார்க்கிறாங்கண்ணே
க:டேய் கோழிக்கு ஏதுடா பல்லு
செ:பழமொழி சொன்னா அனுபவிக்கனும்..ஆராயக் கூடாது.."
க:இப்போ உன்ன பிரிச்சு ஆராயப் போறேன்..அப்புறம் நீ அனுபவி
செ:அப்புறயென்னாண்ணே பொண்ணு வீட்டுக்காரன் வந்து ஜாதகம் பார்த்தாச்சானு கேட்டான். நான்தான் பொருத்தமெல்லாம் சரியயிருக்குனு ஜாதகத்தை எடுத்து கொடுத்தா ஒண்ணுமே புரியலைனு சண்டைக்கு வாறான்.
க:டேய் ஜாதகமே இன்னு பார்க்கலடா எதடா எடுத்து கொடுத்த?
செ:அங்க ஒரு பேப்பர்ல காலையிலயிருந்து எழுதினேங்களே அத எடுத்துக்கொடுத்தேன்
க:ஐயோ அது புது பேனாவால நான் கிரிக்கிபார்த்த பேப்பர்டா
{உடனே ஒரு போன்காலில் பொண்ணுவீட்டார் "ஜோசியரே! உங்க ஜாதகத்த படிக்கவே முடியலையே"}
க:அதுவந்துங்க, போன் வச்சிருக்கவுங்களுக்கெல்லாம் ஜாதகம் புரியாதுங்க (னு சொல்லி கட் செய்து செந்திலை பார்க்கிறார், செந்தில் உடனே ஓட ..)
க:நம்ம யூருக்கு நாய் பிடிக்கிற வண்டி வந்துச்சுன்னா கண்டிப்பா உன்ன அடுத்தவட்டம் பிடிச்சுகொடுக்கிறேன்

1 மறுமொழிகள்:

Rajasekaran said...

Nice joke... Thanks