Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Monday, May 11, 2009

சூழல்குறிப்பு:ஒரு விதவை தாய் தன் மகளை பார்த்து

நான் பசிக்கொண்ட போதும்
நீ புசித்துண்ட பின்தானே
என் வயிற் நிறையும்

என் தூக்கத்தை அடகு வைத்து
நீ உறங்க மடிவிரித்து
கனவு காண்கிறேன்

பூக்காரிக்கும் தெரியாது உனக்கு
தலைவாரி பூச்சூட்டிய பின்னே
என் புன்னகை பூக்குமென்பது

உன் கொலுசு ஓசைக்கேட்க
என் கால்கள் மௌனமாக
உலாவ ஆசைப்படுகிறது

என் வளையல்கள் உன் காதுகளுக்காக
உருக்கப்பட்டன இருந்தும் வருந்துகிறேன்
கழுத்துக்கும் கிட்டாததால்

அடுப்பொலியில் நீ படித்த சமையல்
சுட்டுவிடுமோ எனவஞ்சியே
அடுப்பங்கரைக்கே உன்னை அனுமதிக்கவில்லை

என் கையெழுத்தைப் பழகிவிட்டேன்
உன் மரியாதைக்கு இனியெங்கும்
கைனாட்டு வைக்கமாட்டேன்

நீ மணாலன் வீட்டுக்குச் சென்றபிறகும்
மறக்கமாட்டேனடி, என் கணாலன்
மறைந்ததிலிருந்து நீதானே கதி

0 மறுமொழிகள்: