Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Thursday, January 14, 2010



பங்காளிச்சண்டையில்
மூக்குடைந்து
மூடிக்கிடக்கிறது
தண்டபாலத்தினருகே
ஒரு கோவில்

மழைகாலத்தில்
தோலுரித்து
சாம பூசைகளை
சாக்கடையில் விட்டு
சூரியவிரதமிருக்கும்



நேந்துவிட்ட படையல்கள்
பகுத்தறிவு பேசி
காற்றோடு கைவீசி
ஏமாற்றங்களை
எழுதித்தந்தது

அண்டவரும் மேய்ச்சல்கள்
நுகர்ந்துவிட்டு உதாசிண
நாட்கள் தற்கொலையின்
நுனியில் தப்பித்தவை

ரயில் நசுக்கியெஞ்சிய
நிம்மதி ஓராயிரம்
வாய்ச்சண்டையில்
சொந்தங்களோடு
சோகமாயுள்ளது

நித்தமும் அர்ச்சனைகள்
சத்தமான பிளவுகள்
வெம்பிய காயங்கள்
தங்கிய சுவடுகள்
பூமிக்குள் அழுத்தப்படுகிறது

புதைந்த நிழலில்
புது மரங்கள் பட்டு
மொட்டையான கோபுரங்கள்
சிதிலமாகி சிற்றுயிராய்
குப்பை மேடானது

நெகிழியையும்
கண்ணாடிகளையும்
பங்காளிகளாக
இறக்கிவிட்ட
ரயில்பயணிகள்
பூமியை ஏன்
கோவில் என்றனர்?



குறிப்பு: இது 'உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் கவிதைப் போட்டிக்காக

5 மறுமொழிகள்:

அவனி அரவிந்தன் said...

அர்த்தம் பொதிந்த வரிகளால் ஆன கவிதைத் தோரணம் அழகு ! வெற்றி பெற வாழ்த்துகள் !

கமலேஷ் said...

மிகவும் நன்றாக இருக்கிறது...வெற்றிபெற வாழ்த்துக்கள் தோழரே...

நீச்சல்காரன் said...

சக்தியின் மனம்,
அவனி அரவிந்தன்,
கமலேஷ் மிக்க நன்றி

madan said...

வாழ்த்துக்கள்

நீச்சல்காரன் said...

நன்றி மதன்