Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Thursday, August 27, 2009

அவளிட்ட புள்ளிகளும்
கோலமாகவே தெரிகிறது
அவள்வூட்டிய சாதமும்
சர்க்கரையாகவே இனிக்கிறது

கொடியில் பூத்த பூவைவிட
அதை அவள் சூடும் போது
அவள் விழியில் பூத்த
சிரிப்பு நளினமானது

அவள் திருத்துவதற்காகவே
என் கவிதைகளும்
ஒற்றைக்காலில் நிற்கும்
துணைக்கால்களின்றி

என் வீட்டு கண்ணாடிகளும்
அதிர்ஷ்டசாலிகள் தான்
இவள் முன்னாடி நிற்பதற்கு

அள்ளமுடியாத ஆனந்தம்
சொல்லிவிடியாத பேரின்பம்
சண்டையிடும் நேரத்திலும்
உன் முணங்கள் ராகமாகயிருப்பதால்

அனைத்து மொழிகளிலும்
எனக்கு அழகிய வார்த்தை
உன் பெயர்தான்

உன் விழி தேடும் கனவுகளை
நினைவாக்க என் விழிகள்
உறங்க மறுக்கிறது
ஒரு அண்ணனாக

2 மறுமொழிகள்:

நிலாமதி said...

ஹாஹா இப்படி ஒரு அண்ணாவா ..காதலி என் மாற்றினால் இன்னும் அழகு பொருத்தமாயிருக்கும்

மணிபாரதி said...

Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....www.ellameytamil.com