Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Thursday, September 24, 2009

 
சரக்கின்றி என்னைப்போல்
சுற்றும், என் சைக்கலும்
ப்ரேக்கின்றி வாழ்வை
துளைத்துவிட்டது.

தீப்பெட்டிக்குள்ளிருக்கும்
ஒற்றைத் தீக்குச்சிக்கு
ஆயுள் கெட்டி
சமையல் கட்டில்
பூனை தூங்குவதால்.

பீடிக்கட்டுகள்
உயிர் பிழைக்கிறது
உதட்டுப் புண்களின்
புது வரவால்.

ஒவ்வொருயிரவும் ஆயிரம்
கனவுகள் அவ்வளவும்
கெட்டுப்போன வயிற்றுக்குள்
விட்டுப்போன ஊறுகாய்கள்.

அஞ்சறை பெட்டிக்குள்
ஏதுமில்லாத வறுமையின் உச்சம்
சிகரெட்டு பெட்டிக்குள்ளும்
பரவிக்கொண்டது.

என் சட்டைகளுக்கு
பாக்கெட்டுகள் ஊனம்
கடனாளிகளின்
வாழ்கைச் சின்னம்.

சோறு போடாத வீட்டுக்காரியும்
வீட்டு நாய்களையும் விரட்டிவிட்டு
வீட்டை காக்கின்றேன்
தவணைக்காரனிடமிருந்து.

வானமே நடிக்க
கற்றுகொண்டது
விடிந்தபின்னும்
எனக்கு விடியலை
காட்ட மறுக்கிறது.
 
பின் குறிப்பு: குடி குடியை கெடுக்கும்


இதை பரிந்துரைத்த விகடனுக்கு நன்றிகள்.

5 மறுமொழிகள்:

Thatchai kannan said...

mika yatharthamana kavithai.... Super ...

Anonymous said...

super kalakkal kavithai.... asathunga..

நீச்சல்காரன் said...

Thatchai kannan & Anonymous தங்கள் ஊக்கத்திற்கு நன்றிகள்

நீச்சல்காரன் said...

tamil10 மூலம் டிராபிக் பெறமுடியவில்லையே :(

Tamilparks said...

you can visit our site http://tamilparks.50webs.com here you can send your articles to us...we are ready to pubish your blog link along with your each article so by reading your article you can get more visitors...