Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Saturday, March 9, 2013


விக்கலில் எகிறிக்
குதித்த சிறு குடல்
ஏமாற்றத்துடன்
புரண்டு படுத்தது

சுவாசத்துடன் உள்சென்ற
பிராணவாயு ஓட்டியசுவறொன்றில்
முட்டிக் கொண்டு
பெருமூச்சாய் ஏக்கப்பட்டது

உயிருப்பை உறுதி செய்ய
பொறுப்பான ஒரு சுய
சமிக்ஞைக் கருவி
வயிற்றைவிட்டால் வேறில்லை

வயிறு உறுமிக்
காட்டிக்கொடுத்த பசிக்குத்
ஆயுள் முழுதும் தீனி
போட்டாக வேண்டும்

இரண்டு துளைகளுக்கு
நடுவே நடக்கும்
பட்டினிப் போரில்
பசி பிறந்து விடுகிறது.

பசியோடு தொடங்கியது
பசிக்கு இயங்கியது
பசியால் வளர்ந்தது
பசிக்காக மடியுது உலகு

புத்தகத்தில் படித்து இதுவென்று
புரிந்து கொண்டனர் -பணவான்கள்
பரம்பரை நோய் இதுவென்று
பழகிக் கொண்டனர் -பாட்டாளிகள்
------------

வார்ப்பு கவிதை இதழிலும் படிக்கலாம்

5 மறுமொழிகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

தீர்ந்து விட்டால் தீரும், தீராத நோய்...

Massy spl France. said...

ஆக்கம் வெகு அருமை நீச்சல்காரன். ஆரம்ப பத்தி படிப்பவரின் முதுகில் சாட்டையால் அடித்து நிமிர வைக்கிறது. படத்தேர்வு நன்று.
பகிர்வுக்கு நன்றி.

tamil info said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே


கற்றதும் பெற்றதும்

தமிழ்மகன் said...

உலகின் முதல் இருபது இணைய தளங்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2013/02/most-popular-websites-on-internet.html

தமிழ்மகன் said...

உலகின் முதல் இருபது இணைய தளங்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2013/02/most-popular-websites-on-internet.html